அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காக தலைமைச் செயலகத்திற்கு இன்று காலை வருகை தந்தார்
ஏற்கனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா செய்த நிலையில் தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்துள்ளார். இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் ஏற்கெனவே ராஜினாமா செய்தனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் தராததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியதால் அதிருப்தியில் உள்ள நிலையில் இன்று தலைமை செயலகத்திற்கு வந்து சபாநாயகரை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவி ராஜினாமா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்துள்ளார்.