தேர்தலின்போது இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டதாக சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர்," அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான்.
ஏனென்றால் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பு காணப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க உருப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை
மாற்றம் வேண்டும் என்கிற மிகப்பெரிய எழுச்சி, அரசியல் புரிந்துணர்வு இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
இது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது" என்றார்.