தேர்தல் தோல்வி காரணமாக பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, த.வெ.க. அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவரை கேலி செய்யும் விதமாக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடந்துகொண்ட விதத்தை அவர் கண்டித்ததோடு, நிர்வாகம் மற்றும் பொது பாதுகாப்பு பிரச்சினைகளை கையாளும் விதம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய பேட்டி:
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது விஜய்யின் நடத்தை அருவருப்பானது என்று விவரித்ததோடு, காங்கிரஸ் கட்சி அதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
"சட்டமன்றம் துப்பாக்கி சூடு நடத்தும் இடமல்ல. அது ஒரு கண்ணியமான அமைப்பு. அதுபோன்ற ஒரு மன்றத்தில் அந்த மாதிரியான சைகைகளும் கருத்துகளும் பொருத்தமற்றவை," என்று அவர் கூறினார்.
ஸ்டாலின் சாதனைகள்:
முந்தைய தி.மு.க. ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பேசிய செல்வப்பெருந்தகை, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சாதனைகளும் நலத்திட்டங்களும் மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு தொடர்ந்து பயனளித்து வருவதாக கூறினார்.
நான் முதல்வன், தமிழ் புதுல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவு திட்டம் போன்றவற்றை சுட்டிக்காட்டிய அவர், தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள், எளிதில் ஈடு செய்ய முடியாத ஒரு அளவுகோலை அமைத்துள்ளதாக கூறினார்.
த.வெ.க. அரசின் செயல்பாடுகளை கேள்விக்குட்படுத்திய செல்வபெருந்தகை, பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததோடு, தொழில்துறை பாதுகாப்பு பிரச்சினைகளை நிர்வாகம் உரிய முறையில் கையாள தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.