தமிழக செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் 100% தள்ளுபடி - முதலமைச்சர் அறிவிப்பு

மே 2025 முதல் பிப்.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடனை 100 சதவீதம் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

* கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடனை 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

* மே 2025 முதல் பிப்.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.

* ரூ.75,000-க்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 குறைந்தபட்சமாக ரூ.35,000 பணப்பயன் கிடைக்கும்.

* பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் அரசுக்கு ரூ.5,932 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.