கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடனை 100 சதவீதம் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
* கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடனை 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
* மே 2025 முதல் பிப்.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
* ரூ.75,000-க்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 குறைந்தபட்சமாக ரூ.35,000 பணப்பயன் கிடைக்கும்.
* பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் அரசுக்கு ரூ.5,932 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.