தமிழக செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியம் வாயுக்கசிவு - 20 பேர் மயக்கம்

வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர்

சென்னைக்கு அருகே திருவள்ளூரில் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் அமோனியா வாயுகசிவு ஏற்பட்டது.

இதனால் தொழிலாளர்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். மேலும் சிலருக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். அத்துடன் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழு விரைந்துள்ளது.

SCROLL FOR NEXT