பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கு ஏற்கனவே ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை மறுபதிவு செய்வதற்கான தொகை 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அரசாணையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:-
15 ஆண்டுகள் பழமையான கார்களை மறுபதிவு செய்ய தற்போது ரூ.600 ஆக உள்ள கட்டணம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8 மடங்கு அதிகம் ஆகும். பழைய மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.300 ஆக இருந்த மறுபதிவு கட்டணம் இனி ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது.
பழைய பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு ரூ.1500 ஆக இருந்த மறுபதிவு கட்டணம் ரூ.12 ஆயிரத்து 500 ஆகவும், சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
இவை தனியார் வாகனங்களாக இருந்தால் மாதத்துக்கு ரூ.300-ம், வர்த்தக வாகனங்களாக இருந்தால் ரூ.500-ம் அபராதமாக வசூலிக்கப்படும். இவை அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்குவரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... 9ந்தேதி 2-வது கட்ட தேர்தல்: சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்