கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் 
செய்திகள்

வேளாண் சட்டங்கள் பற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட கேரள கவர்னர் ஒப்புதல்

கேரள அரசிடம் சில விளக்கங்களைப் பெற்ற பின்பு டிசம்பர் 31–ம் தேதி சட்டசபை கூட்டம் நடத்த கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.

மாலை மலர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும், விவாதிக்கவும் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், கவர்னரை சந்தித்து ஜனவரி 8–ல் தொடங்க உள்ள வழக்கமான சட்டசபை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துப் பேசினார். அப்போது ஒருநாள் சட்டசபை கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.