ஏஐசிடிஇ 
செய்திகள்

அக்டோபர் 10ந்தேதிக்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வை முடிக்க ஏஐசிடிஇ உத்தரவு

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு முதலமைச்சர் முடிவு செய்வார்.

மாலை மலர்

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்லூரிகள் முழுமையாக செயல்படாமல் உள்ளன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 16ந் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 10ந்தேதிக்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வை நடத்தி முடிக்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 25ந்தேதிக்குள் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.