செய்திகள்

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்தவித இழுபறியும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #DMDK #PremalathaVijayakanth

மாலை மலர்

விஜயகாந்திடம் இன்று ரஜினி உடல் நலம் விசாரித்து சென்ற பிறகு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தவித இழுபறியும் இல்லை. எனவே விரைவில் தொகுதி பங்கீடு பற்றிய தகவல்கள் வெளிவரும்.

தே.மு.தி.க. வின் நிலைப்பாடு பற்றிய முழு விவரமும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். கூட்டணியில் எங்களுக்கான தொகுதிகள் கிடைக்கும்.