விபத்து பகுதியில் நடைபெற்ற மீட்பு பணி 
செய்திகள்

கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம்தான் காரணம்- எச்சரிக்கையை மீறியதாக தகவல்

கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம் தான் காரணம் என்றும், கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் தரையிறக்க முயன்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து நேற்று முன்தினம் கராச்சி நோக்கி சென்ற பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முற்பட்டபோது அருகில் உள்ள குடியிருப்பில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 97 பேர் மரணம் அடைந்தனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை பைலட் மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.