இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாக்கு பையை மீட்டு சோதனை செய்ததில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வடக்கு துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி கூறியதாவது:-
சாக்கு பையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருந்தது. உடலில் வாய் மற்றும் வலது கால் விரவில் சிறிது ரத்தம் கசிந்து இருந்ததைத் தவிர, வெளிப்புற காயங்கள் எதுவுமின்றி இருப்பது கண்டறியப்பட்டது.
சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த நபரை அடையாளம் காண விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை?- அமைச்சர் பதில்