ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மும்பையில் நடைபெற்ற சஞ்சய் ராவத் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "2026ம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. மோடியும், அமித்ஷாவும் விடைபெற இருக்கிறார்கள். அவர்களின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்று" தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்து தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.