இந்தியா

மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் அம்மா 58 வயதில் கர்ப்பமாகியுள்ளார்

58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது.தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்

மாலை மலர்

மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் அம்மா சரண் சிங் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை கருத்தரித்தல் முறையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். வரும் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.