தீ விபத்து 
இந்தியா

ஆந்திர ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- 2 பேர் உடல் கருகி பலி

பார்மாவில் உள்ள தக்ஷின் எனர்ஜி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் பரவாடாவில் பார்மா சிட்டி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைரோலிசிஸ் எண்ணை உற்பத்தி செய்யும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இந்நிலையில் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பலரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் பல தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் சிக்கி கொண்டனர்.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில் இரண்டு தொழிலாளர்கள் தீயில் சிக்கி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். மேலும் இரண்டு நபர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இத்தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT