இந்நிலையில், கனமழையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சமூக வலைத்தளங்களில் போலி தகவல் வைரலாகி வருகிறது. கொங்கன் பகுதியை சேர்ந்த கர்வார் பகுதியில் நிலச்சரிவு காரணமாக ரெயில்வே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கில் தகவல் பகிரப்படுகிறது.
நிலச்சரிவு காரணமாக ரெயில் தண்டவாளம் பாதிக்கப்பட்டிருப்பதால், ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வைரல் பதிவினை ஆய்வு செய்ததில், இது முற்றிலும் போலி என தெரியவந்துள்ளது.
ரெயில்வே சேவை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முயன்றதில், கொங்கன் ரெயில்வே கார்ப், அப்பகுதியில் ரெயில் சேவை இயங்கி வருவதாக தெரிவித்திருக்கிறது. எனினும், கொங்கன் பகுதியில் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதாக கொங்கன் ரெயில்வே தெரிவித்திருக்கிறது.
அந்த வகையில் கொங்கன் பகுதியில் ரெயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஃபேஸ்புக்கில் வைரலாகும் தகவல் முற்றிலும் பொய் என உறுதியாகியுள்ளது.