செய்திகள்

எங்களை வீழ்த்த வேண்டும் என இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும்: நியூசிலாந்து பந்து வீச்சாளர்

எங்களை வீழ்த்த வேண்டும் என இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

அதேபோல் இந்திய அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் நாளை மறுதினம் நாட்டிங்காமில் நடக்கிறது. இதில் வெற்றி பெற இரு அணிகளும் ஆர்வமாக இருக்கும் என்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் மழை குறுக்கிடாமல் இருந்தால் ரசிகர்கள் ஜோராக ரசிக்கலாம்.

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியிருந்தது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்தியா விளையாடும்.

இந்நிலையில் எங்களை வீழ்த்த வேண்டும் என இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும் என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெர்குசன் கூறுகையில் ‘‘இந்திய அணி வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த இந்திய அணியில் ஏராளமான தரமான வீரர்களும், சில எதிர்பார்ப்புக்குரிய தனித்துவமான வீரர்களும் உள்ளனர். தொடர் வகையிலான கிரிக்கெட் (Tournament cricket) மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

எங்களை வீழ்த்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும். எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த விரும்பும். பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அதை வைத்து தொடரை கணக்கிடக்கூடாது. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.

எங்களுடைய தொடக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து ஸ்விங் செய்து விக்கெட்டுக்களை வீழ்த்தினால், மிடில் ஓவர்களில் என்னுடைய வேலை எளிதாக இருக்கும்.