திமுக 
செய்திகள்

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெற இருந்த தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:-

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுகிறது.

கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.