திசையன்விளை:
திசையன்விளை தாலுகாவிற்கு உள்பட்ட இரண்டு குருவட்டங்களுக்கான ஜமாபந்தி திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட ஆய்வு குழு அலுவலர் மூர்த்தி தலைமை தாங்கி முதியோர் உதவிதொகை, விதவை உதவிதொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
விழாவில் திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் துரைசாமி செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், இட்டமொழி இசக்கியப்பன், சத்தியவாணி, அயூப் கான் ஜேம்ஸ், செல்வக்குமார், சந்தனகுமார், அய்யாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.