உள்ளூர் செய்திகள்

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உயர் அதிகாரிகளை கண்டித்து நடந்தது ஏராளமனோர் கலந்து கொண்டனர்

மாலை மலர்

போளூர்:

செங்கல்பட்டு மாவட்டம் காட்டான் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பார்த்திபன் பணி சுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளை கண்டித்து போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆணையாளர் பரணிதரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அதிகாரி பாபு மேலாளர் அருள் உள்பட 30 ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுப ட்டனர்.