உள்ளூர் செய்திகள்

திருமழிசையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் என்பவர் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமழிசை:

ஃபெஞ்ஜல் புயலின்போது விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் என்பவர் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க கோரி திருமழிசையில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அருகே திருவள்ளூர் கிழக்கு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலர் தனசேகர், ஐ.என்.டி.யூ.சி மாநில தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT