உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 1202 மி.மீ. மழை அளவு பதிவு

இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டியது.

விடிய விடிய மழை பெய்தது.

இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரே நாளில் 1202.40 மி.மீ. மழை பெய்துள்ளது.

அதிகபட்ச மாக அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

அதிராம்பட்டினம்-153, திருக்காட்டுப்பள்ளி -127.60, பூதலூர் -114.60, மதுக்கூர் -90.29, பட்டுக்கோட்டை -83, வெட்டிக்காடு -64.60, தஞ்சாவூர் -41 ஆகும்.