உள்ளூர் செய்திகள்

பெண்ணுக்கு தைராய்டு சுரப்பி அகற்றம்

அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக பெண்ணுக்கு தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டது. கீழக்கரை அரசு மருத்துவ மனை மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கீழக்கரை

கீழக்கரை முத்துச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் குருவம்மாள் (50). திருமணம் ஆகவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக கழுத்தில் தைராய்டு சுரப்பி ஏற்பட்டு பெரும் அவதி அடைந்து வந்துள்ளார். இந்நிலையில்கீழக்கரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தைராய்டு சுரப்பி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கீழக்கரை அரசு மருத்துவ மனையில் குருவம்மாள் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரத்குமார்.

மயக்க மருந்து நிபுணர்கள் ராஜேஸ்வரன். மேகலா ஆகியோர் தலைமையில் 3 மணி நேரம் ஆபரேஷன் நடத்தி சுரப்பியை அகற்றினர். தலைமை செவிலியர்கள் ஆனந்தி. சுமதி ஆகியோர மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் குருவம்மாள் கூறுகையில், 2 வருட காலமாக இந்த தைராய்டு சுரப்பி பிரச்ச னையால் கடும் அவதிக்குள்ளா னேன்.

வசதியின்மை யால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் இருந்து வந்தேன். கீழக்கரை அரசு மருத்துவ மனையில் தற்போது நிரந்தர தீர்வு கிடைத்து ள்ளது. அறுவை சிகிச்சை செய்து சுரப்பிஅகற்றிய பின்பு தற்போது குண மடைந்துள்ளேன்.

கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.