டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து நாளை அவர் பீகாருக்கு செல்வார் என தெரிகிறது. #BiharCM #NitishKumar