செய்திகள்

மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் அடைப்பு

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. #MedicalsStrike

ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருந்து கடை வணிகர்கள் சங்க அமைப்புகள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தன. அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் 1500 மருந்து கடைகள் மூடப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மருந்து, மாத்திரைகள் வாங்க மிகவும் சிரமப்பட்டனர்.