பெண்களுக்கு காமம் என்பது ஓர் ஆண் அவளை கட்டித்தழுவி கொஞ்சும் போதே ஆரம்பமாகின்றது. ஆனால் ஆணுக்கு அது இயல்பாகவே உள்ளது.
பெண்களை பொருத்தவரை காமம் ஒரு விசயமே அல்ல. ஆண்களுக்கு தான் காமம் என்றால் ஓர் அலாதி பிரியம் இயல்பாகவே உள்ளது. பெண்களுக்கு அதற்கு பதிலாக அன்பும் அரவணைப்பாலுமே உந்தப்படுவார்கள்.
எந்த பெண்ணையுமே காம ஆசைக்காட்டி எந்த ஓர் ஆணாலும் வெல்ல முடியாது. அதனால் தான் பெரும்பாலான பெண்கள் தனது காதலனிடமே தனது கற்பை இழந்து நிற்கின்றார்கள்.
காதல் வழியாக மாத்திரமே ஒரு ஆணால் ஒரு பெண்ணின் உடலை அடைய முடியும். ஆனால் ஆணுக்கு அப்படியல்ல, அவனுக்கு ஓர் பெண்ணில் பிரதானமானது காமம் தான். பின்புதான் மற்றவை.
இதுவே ஓர் பெண்ணுக்கு ஒரு ஆணின் காதல் தான் பிரதானமானது. பின்பு தான் மற்றவைகள். அதனால் பெண்ணுக்கு காமத்தை அடக்க வேண்டிய தேவையே இல்லை. காமத்தை அடக்க வேண்டிய தேவை ஆண்களுக்கே உள்ளது. அந்த வகையில் ஆண்கள் பெண்களை விட பலவீனமானவர்கள்.
-திருமேனி