பொது மருத்துவம்

காலை வேளையில் பாதாம் சாப்பிட்டால்...

ஆரோக்கியம் காக்கும் எளிய காலை பழக்க வழக்கமாகவும் அமையும்.

ஊறவைத்த பாதாம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. அவற்றை முறையாக உட்கொள்வது உடல் நலத்திற்கு பல வழிகளில் உதவக்கூடும். ஆரோக்கியம் காக்கும் எளிய காலை பழக்க வழக்கமாகவும் அமையும்.

நன்மைகள்

* அறிவுத்திறனும், நினைவாற்றலும் மேம்படும்.

* சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரும்.

* எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை வழங்கும்.

* நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படதூண்டும்

* செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.

எப்படி சாப்பிடுவது?

* தினமும் 4 முதல் 6 பாதாம் பருப்புகள் போதுமானது.

* இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.

*காலையில் பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு, வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

குறிப்பு:

*டீ, காபியுடன் சேர்த்து சாப்பிடுவதைக் தவிர்க்கவும்.

*இந்த பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.

*பாதாம் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் மிதமான சுடுதண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு நல்லது.