உதவி இயக்குநராக இருக்கும் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள், சென்னையில் இருந்து பாலக்காட்டில் உள்ள ஒரு பழமையான வீட்டை வாங்குவதற்காக நேரில் செல்கிறார்கள்.
மகிழ் கோமான் என்ற பழைய ஜமீனின் வீடு – எண் 24. அந்த வீட்டைச் சுற்றி நிகழும் எதிர்பாராத சம்பவங்களே படத்தின் மையம். சாதாரண பார்வைக்கு தெரியும் ஒரு வீடு, பின்னணியில் மர்மம் மறைத்து இருக்கிறது. அங்கு நடந்த சம்பவங்களிலிருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? அந்த வீட்டின் கடந்தகாலம் என்ன? என்பதையே படம் சஸ்பென்ஸ் கோட்டில் சொல்கிறது.
நடிகர்கள்
பிரணவ் மோகனன் மற்றும் ஜஸ்டின் விஜய்.ஆர் கதையின் நாயகர்களாக நடித்து, இளமையான அணுகுமுறையை வழங்குகிறார்கள். சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி. எம் ஆகியோர் கதையில் தேவையான இடத்தில் தோன்றுகிறார்கள்.
வில்லன் தரப்பில் ஆட்டோ சந்திரன் மற்றும் அப்துல் பஷில் உள்ளிட்டவர்கள் கதைக்கு இருண்ட நிறத்தை கூட்டுகின்றனர். பல புதிய முகங்கள் இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பரப்பில் இயல்பாக நடித்துள்ளனர்.
இயக்கம்
அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக், ஒரு குறுகிய லொகேஷனை மையமாக வைத்து மர்மம் உருவாக்க முயற்சித்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் திரைக்கதை, இடைப்பட்ட பகுதிகளில் சற்று மந்தமாகினாலும், இறுதியில் மர்மம் வெளிப்படும் தருணங்களில் கவனம் ஈர்க்கிறது. நீளமான காட்சிகள் படத்திற்கு பலவினம். எடிட்டிங் பகுதியில் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம்.
ஒளிப்பதிவு
பாலாஜி மற்றும் நவீன் குமார் ஒளிப்பதிவில் பாலக்காட்டின் பழமையான வீடு மற்றும் அதன் சுற்றுப்புறம் சஸ்பென்ஸ் மனநிலையை உருவாக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இசை
சதாசிவ ஜெயராமனின் இசை மற்றும் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.