சினிமா செய்திகள்

யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும் இந்த இரண்டையும் விட்டுவிடக்கூடாது- நயன்தாரா

ஃபெமி 9 மெகா கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பங்கேற்றனர். நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை.

மாலை மலர்

ஃபெமி 9 மெகா கொண்டாட்டம் 2025 நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் நயன்தாரா குஷியானார். இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது நயன்தாரா கூறியதாவது:-

நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை. யார் என்ன சொன்னாலும், எப்படி நம்மை கீழ்தரமாக பேசினாலும், தப்பாக நடந்தாலும் காலையில் எழுந்தவுடன் நம் வேலையை உண்மையாகவும், உறுதியாகவும் செய்தால் தானாகவே Self Confident வரும். அது நம் வாழ்க்கையை மாற்றிவிடும்.

என நயன்தாரா கூறினார்.