அஜய் ஞானமுத்து எழுத்து மற்றும் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் 'டிமான்டி காலனி 3' திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இது 2015-ல் வெளியான 'டிமான்டி காலனி' மற்றும் அதன் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து உருவாகி உள்ள ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகும்.
இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.