சினிமா

மீண்டும் சரித்திரப் படத்தில் நடிக்கும் ராணா?

`பாகுபலி-2' படத்தை தொடர்ந்து நடிகர் ராணா தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான சுதாகர் இயக்கத்தில் மீண்டும் சரித்திரப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

`பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராணா, அடுத்ததாக `நேனு ராஜா நேனு மந்திரி' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக ராணா தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநரான குணசேகர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்து புராணத்தில் இடம்பெறும் பக்தப் பிரகலாதனின் கதையை படமாக இயக்க இருக்கிறாராம். இதில் பிரகலாதனின் தந்தையான இரணியகசிபு கதாபாத்திரத்தில் நடிக்க ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.