கார்

மாருதி சுசுகி கார்கள் விலை மீண்டும் உயர்வு

மாருதி நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில்தான் இதேபோல தங்களது கார்களின் விலையை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தியிருந்தது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் அடுத்த மாதம் முதல் உயர்த்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முறை காரின் மாடல் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.30,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது.

விலை உயர்வு

கார்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாததால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

கவலை

ஆட்டோமொபைல் துறையில் இந்த அறிவிப்பு கார் வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மாருதி நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில்தான் இதேபோல தங்களது கார்களின் விலையை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெறும் இரண்டு மாத இடைவெளிக்குள் மீண்டும் ஒருமுறை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், நடுத்தர வர்க்கக் கார் வாங்குபவர்கள் கவலையடைந்துள்ளனர்.

முன்பதிவு

ஒவ்வொரு குறிப்பிட்ட மாடலுக்கும் எவ்வளவு ரூபாய் உயரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான புதிய விலைப்பட்டியல் அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய மாருதி கார் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள், இந்த மாத இறுதிக்குள் முன்பதிவு செய்வது ஓரளவு பணத்தைச் சேமிக்க உதவும்.