ஆதாயம் நிறைந்த வாரம். ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று ராசியில் நிற்கும் சனி பகவானை பார்க்கிறார்.பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். தம்பதிகளிடையே சுமூக உறவு நிலவும். ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். பய உணர்வு, நோய் தாக்கம், சொத்துக்களால் பயனற்ற நிலை, வறுமை, உறவுகளால் ஏற்பட்ட மன வேதனை போன்ற பாதிப்புகள் விலகும். அசையும், அசையாச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகமாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். எதிர்ப்புகள் இல்லாத நிலையை உண்டாகும். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரணச் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும்.வீடு, வாகனம், வயல்வெளி, தோட்டம் வாங்கும் யோகம் உள்ளது. சொத்துக்கள் விற்பனையில் நிலவிய தடைகள் அகலும். நியாயப்படி உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் நிலவும்.மனக் கவலைகள் அகலும். கை,கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். சனிக்கிழமை ராகு வேளையில் காளியை வழிபடவும்.