கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். மகர ராசிக்கு அஷ்டமாதிபதியான சூரியன் தனது மற்றொரு மறைவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் மறைகிறார். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, முறையான ஆவணம் இல்லாத சொத்து, வில்லங்கம் ஜாமீன் பிரச்சனை, கடன் பிரச்சனை, நோய் தாக்கம், எதிரி தொல்லை, செய்வினைத் தாக்கம், பய உணர்வு, நிரந்தரமில்லாத உத்தியோகம், அடிக்கடி வேலையை மாற்றுவது, தாய் மாமன், உடன் பிறப்புகளால் மன வேதனை, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற பாதிப்புகள் விலகும்.ராசியை குரு பார்ப்பதால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப்புள்ளியாகும். வீண் விரயங்கள் குறையும். அதிக முதலீடு செய்ய வேண்டிய புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சில்லறை வணிகர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு மறு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் நடைபெறும். கூட்டுத் தொழில் புரிபவர்களிடம் சிறு மன பேதம் ஏற்படலாம்.சனிக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடவும்.