search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிப்ஹாப் தமிழா"

    • ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது .

    ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக காஷ்மிரா மற்றும் அனிகா சுரேந்திரன், பிரனதி, பிரபு, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், முனீஸ் காந்த், மதுவந்தி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . இதையொட்டி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது.

    விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எங்கள் நிறுவனத்தில் இந்தப் படத்தை தயாரித்தது திருப்திகரமாக உள்ளது. இந்த கதையை ஆதி என்னிடம் கூறியவுடன் உடனே தயாரிக்க சம்மதம் சொன்னேன். இப்பொழுது படத்தை பார்க்கும் பொழுது முழு திருப்தி ஏற்படுகிறது.

    இந்த படத்தில் வருவது போல பி.டி. சாருக்கும், இங்கிலீஷ் டீச்சருக்கும் காதல் என்பது பல இடங்களில் நடந்து கொண்டிருப்பது தான்.என்னுடைய பள்ளி பருவ காலத்திலும் பிடி சாரும் இங்கிலீஷ் டீச்சரும் காதலித்தனர். அவர்கள் காதலை சேர்த்து வைத்து திருமணத்தையே நான் தான் செய்து வைத்தேன். அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் நல்ல செய்தி இருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இது இருக்கும் என்றார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஐசரி கணேஷ்,  ரஜினிகாந்த் நடிக்கும் 172-வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே என்று கேட்டதற்கு, இது தொடர்பாக ரஜினிகாந்த்தை சந்தித்தது உண்மை. அவரிடம் பேசி உள்ளோம் விரைவில் நல்ல செய்தி வெளியாகும், இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹிப்ஹாப் ஆதி. இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார்.
    • படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹிப்ஹாப் ஆதி. இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இது இவர் இசையமைக்கும் 25-வது படமாகும். காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

    இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது. தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பள்ளிக் கூடத்தில் அன்பான பி.டி வாத்தியாராக நடித்துள்ளார் ஆதி. அதன்பிறகு அந்த பள்ளிக் கூடத்தில் சிறுமி பாலியல் ரீதியாக பாதிக்கப் படுகிறாள். அதை ஆதி தட்டி கேட்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
    • இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார்.

    2011 ஆம் ஆண்டு க்லப்புல மப்புல பாடலின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை ஹிப்ஹாப் ஆதி ஆரம்பித்தார்.

    அதைதொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா என்ற ஆல்பம் பாடலை உருவாக்கினார். இந்த ஆல்பம் பாடல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின் பல தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடகராக பாடியுள்ளார்.

    2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

    அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடலான குட்டி பிசாசே வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் டிரெயிலர் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது
    • அரண்மனை 4 படம் வரும் மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் 'அச்சச்சோ' என்ற முதல் பாடலும் வெளியாகின.

    படத்தின் டிரெயிலர் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது. இதுவரை 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ராஷி கண்ணாவும், தமன்னாவும் இணைந்து ஆடிய கவர்ச்சி நடனமான அச்சச்சோ பாடலும் ரசிகர்கலின் மனதை கவர்ந்தது. படம் வரும்  மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், நடிகை தமன்னா தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதனுடன் பகிர்ந்த பதிவில், அரண்மனை 4 படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லா சண்டைகாட்சிகளிலும் நடித்தேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோஷம். இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
    • இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    இதன் வெற்றி காரணமாக, 'அரண்மனை-2' திரைப்படத்தை 2016-ல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து சுந்தர் சி இயக்கினார். அந்த படமும் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, 2021-ல் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தை இயக்கினார். அப்படத்தில், ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. எப்படி ஹாலிவுட் படங்களில் ஃப்ரேன்சீஸ் படங்கள் என கூறப்படும் மிஷன் இம்பாஸிபில், ஜேம்ஸ் பாண்ட், ஃபைனல் டெஸ்டினேஷன் படங்கள் மாதிரி தமிழுக்கு அரண்மனை படமாகும்.

    இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெயிலர் வெளியிடும் விழா தற்பொழுது சென்னையில் நடைப்பெற்று வருகிறது.

    சுந்தர்.சி, தமன்னா, யோகி பாபு, ஹிப்ஹாப் ஆதி, ராஷி கன்னா ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். படத்தின் இறுதியில் தமன்னாவும் ராஷி கண்ணாவும் இணைந்து "அச்சோ அச்சோ" என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். படத்தில் டிரெயிலர் இன்று மாலை வெளியாகிறது.

    இந்நிலையில், இப்படம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

    அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்கள் போலவே இந்த பாகமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×