search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா நைட் ரைடர்ஸ்"

    • முதல் 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்திற்கான வாய்ப்பை உருவாக்கியிருந்தது.
    • ஆனால் கடைந்து ஐந்து போட்டிகளில் மழைக்காரணமாக ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது.

    ஐபிஎல் 2024 சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தன. ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. லீக் போட்டிகளின் கடைசி கட்டங்கள் வரை எந்தெந்த அணிகள் பிளேஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டே இருந்தது.

    இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுகின்றன. ஒவ்வொரு அணியும் முதல் இடங்களை பிடிக்க விரும்பும். ஏனென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒருமுறை தோல்வியடைந்தால் மறுமுறை மோத வாய்ப்பு கிடைக்கும்.

    இந்தத் தொடரில் முதலில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை உறுதி செய்யும் என்ற நிலையில் இருந்தது. கைவசம் 5 போட்டிகள் இருந்ததால் எப்படியும் முதல் இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தொடர்ந்து நான்கு போட்டிகளில் அந்த அணிக்கு தோல்விதான் கிடைத்தது. கடைசியாக நேற்று கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2-வது இடத்திற்கு முன்னேறும் நிலை இருந்தது. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

    நாளை செவ்வாய்க்கிழமை (21-ந்தேதி) பிளேஆஃப் சுற்றுகள் தொடங்குகின்றன. நாளை நடைபெறும் குவாலிபையர்-1ல் முதல் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2-வது இடம் பிடித்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

     இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி குவாலிபையர்-2ல் விளையாட வேண்டும். இது 24-ந்தேதி நடக்கிறது.

    22-ந்தேதி புதன்கிழமை எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் 3-வது இடம் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்- 4-வது இடம் பிடித்த ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும்.

    வெற்றி பெற்ற அணி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் குவாலிபையர்-2ல் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.

    • நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி இது.
    • மழை காரணமாக ஏழு ஓவர்களாக மாற்றப்பட்டது.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெற இருந்த இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன. எனினும் மழை காரணமாக இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இடையில் மழை நின்றதால், போட்டி ஏழு ஓவர்கள் நடத்தப்படும் என்று கூறி டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்த நிலையில், டாஸ் போடப்பட்டதில் இருந்து மழை மீண்டும் துவங்கியது.

    தொடர்ச்சியாக மழை பெய்ததால், போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் குவாலிஃபையர் சுற்றின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து மே 22 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த இரு போட்டிகளும் ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. 

    • நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி இது.
    • மழை காரணமாக ஏழு ஓவர்கள் போட்டி நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    மழை காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்ட நிலையில், இது ஏழு ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

    தோல்வி அடையும் பட்சத்தில் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் ராஜஸ்தான் அணி இருக்கும். அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
    • முதல் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடைசி லீக் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி புள்ளிகள் அடிப்படையில் முன்னணி இடத்திற்கு முன்னேறும். மாறாக மழை காரணமாக போட்டி நடைபெறாத பட்சத்தில் ஐதராபாத் அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கும். 

    • முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
    • 'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார்?

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழ்ந்து விட்டன.

    வாழ்வா-சாவா ஆட்டம்

    'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா? நானா? என்ற போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் இரு அணிக்கும் வாழ்வா-சாவா போராட்டமாகும். முக்கியமான இந்த ஆட்டத்துக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றன.

    சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டாலோ அடுத்த சுற்றுக்குள் தகுதி பெற்று விடும். ஆனால் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

    பெங்களூரு அணி எப்படி?

    பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.387 ஆக உள்ளது. தனது முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தொடர்ச்சியாக தோல்வி கண்டு தத்தளித்த பெங்களூரு அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது. தொடக்கத்தில் படுமோசமாக இருந்த அந்த அணியின் பந்து வீச்சு இப்போது நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் ஒரு சதம் 5 அரைசதம் உள்பட 661 ரன்கள் சேர்த்து தொடரில் அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (3 அரைசதம் உள்பட 367 ரன்), ரஜத் படிதார் (5 அரைசதம் உள்பட 320 ரன்), தினேஷ் கார்த்திக் (2 அரைசதம் உள்பட 301 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், லோக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். கேமரூன் கிரீன் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் பொருட்டு இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜாக்ஸ் (230 ரன்), ரீஸ் டாப்லே (4 விக்கெட்) ஆகியோர் நாடு திரும்பியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    நிலையற்ற சென்னை

    5 முறை சாம்பியனான சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.528 ஆக இருக்கிறது. வெளியூரில் இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 2-ல் மட்டுமே வெற்றி கண்டு நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 583 ரன்), டேரில் மிட்செல் (2 அரைசதத்துடன் 314 ரன்) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் சொதப்பி வருகிறார்கள்.

    அத்துடன் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 389 ரன்) கடந்த 4 ஆட்டங்களில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பேட்டிங் வலுப்பெற அவர்கள் நிலைத்து நின்று கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சிமர்ஜீத் சிங் நம்பிக்கை அளிக்கின்றனர். முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா விலகலால் ஏற்பட்டுள்ள பலவீனத்தை சரிக்கட்ட ஷர்துல் தாக்குர் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    பெங்களூருவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க மல்லுக்கட்டும்.

    அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்த பெங்களூரு அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூரு அணி 10 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இரவு 7.30 மணிக்கு...

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மேக்ஸ்வெல், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் அல்லது யாஷ் தயாள், கரண் ஷர்மா, முகமது சிராஜ், லோக்கி பெர்குசன்.

    சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி அல்லது ஷர்துல் தாக்குர், டோனி, மிட்செல் சான்ட்னெர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.
    • இதில் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடியும் தறுவாயில் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுவரை கொல்கத்தா அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளன.

    இதற்கிடையே, ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மழையால் போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மைதானத்தில் விழுந்த பந்தை ரசிகர் ஒருவர் மறைத்து எடுத்துச் செல்வதையும், அதை கவனித்த போலீசார் அவரிடம் இருந்து பந்தை பறிமுதல் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த ரசிகருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்துகள் பதிவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
    • பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது குஜராத் அணி.

    அகமதாபாத்:

    நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அமகதாபாத்தில் இன்று நடைபெற உள்ள 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத இருந்தது.

    ஆட்டம் இரவு 7.30 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மாலை முதல் அகமதாபாத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வந்ததால் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதேவேளை இரவு 11 மணிக்குள் மழை நின்றால் குறைந்தது 5 ஓவர்கள் ஆட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியேறியது.

    • இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.
    • மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.

    கொல்கத்தா:

    17-வது ஐ.பி.எல். தொடர் கடைசி கட்டத்தை எட்டியது. இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 60-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்ததால் டாஸ் வீசுவதில் தாமதமாக ஏற்பட்டது. இதனையடுத்து 9 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதில் முதல் 5 ஓவர்கள் மட்டும் பவர் பிளே ஆகும். ஒரு பவுலர் அதிகபட்சம் 4 ஓவர்கள் பந்து வீசலாம். 3 பவுலர்கள் அதிகபட்சம் 3 ஓவர்கள் வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

    அதே சமயம் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    • கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன.
    • சென்னை, சன்ரைசர்ஸ், லக்னோ தலா ஆறு வெற்றிகள் பெற்றுள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

    இதனால் புள்ளிகள் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பின்னுக்குத் தள்ளி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 10 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது.

    இரண்டு அணிகளும் தலா 16 புள்ளிகள் பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் (NRR) அடிப்படையில் கொல்கத்தா முதலிடம் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது இடம் பிடித்துள்ளது.

    5-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ ஆகிய மூன்று அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதுவரை 3-வது இடத்தில் இருந்து லக்னுா 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6-வது இடத்தில் உள்ளது. 10 அணிகள் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக இன்னும் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கவில்லை.

    • லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது.
    • கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் - சால்ட் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ரன்களில் (14 பந்துகள்) ஆட்டமிழந்தார். சுனில் நரைன், லக்னோ பந்து வீச்சை வெளுத்து வாங்கிய 39 பந்துகளில் 81 ரன்கள் அடித்த நிலையில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் அடித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - குல்கர்னி களமிறங்கினர். குல்கர்னி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய கேஎல் ராகுல் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 5 ரன்னிலும் அதிரடியாக விளையாடி ஸ்டோய்னிஸ் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ரானா 3 விக்கெட்டுகளையும், ரஸல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • கொல்கத்தா அணியில் சுனில் நரேன் 81 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ - கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் - சுனில் நரைன் களமிறங்கினர்.

    இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி நரைனுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் அரை சதம் விளாசினார். தொடர்ந்து ஆடிய நரேன் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த ரஸல் 12 ரன்னிலும் அங்கிரிஷ் ரகுவன்ஷி 32 ரன்னிலும் ரிங்கு சிங் 16 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இறுதியில் ஷ்ரேயாஸ் அய்யர் ரமன் தீப் சிங் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது.
    • கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது.

    ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது. அந்த அணி கடந்த 2 ஆட்டங்களில் டெல்லி, மும்பை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன.

    ×