search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள்"

    • மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.
    • ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்கள் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடலுடன் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.


     

    நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன.

    ஐபேட் ப்ரோ மாடல் முற்றிலும் புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச வெளியீட்டை ஒட்டி புதிய சாதனங்களின் இந்திய விலையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 11 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 990

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900

    ஐபேட் ஏர் 2024 13 இன்ச் வைபை+செல்லுலார் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900

    புதிய ஐபேட் ஏர் (2024) மாடல் புளூ, பர்பில், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டார்லைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 11 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ 13 இன்ச் வைபை+செல்லுலார் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900

    ஐபேட் ப்ரோ மாடல் சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை மே 15 ஆம் தேதி துவங்குகிறது.

    ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ. 11 ஆயிரத்து 900

    11 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 29 ஆயிரத்து 900

    13 இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ. 33 ஆயிரத்து 900 

    • புதிய ஐபேட் ப்ரோ மாடல் இருவித அளவுகளில் கிடைக்கிறது.
    • ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டு அறிமுகம்.

    முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் மூலம் ஆப்பிள் முதல்முறையாக OLED டிஸ்ப்ளேக்களை வழங்கியுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடல் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பிராசஸர் ஆகும். இது முந்தைய பிராசஸர்களை விட அதிவேக செயல்திறன் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

     


    மென்பொருள் சார்ந்த எடிட்டிங் அம்சங்களை கொண்டிருக்கும் புதிய ஐபேட் ப்ரோ, மேம்பட்ட ஆடியோ எடிட்டிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் தலைசிறந்த கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கேமரா சென்சார் லேண்ட்ஸ்கேப் பக்கமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் கீபோர்டு மாடல் புதிய ஐபேட் ப்ரோவுடன் ஒற்றுப்போகும் வகையில் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் - ஆப்பிள் பென்சில் ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் ஏராளமான புதிய வசதிகளை கொண்டிருக்கிறது. மேம்பட்ட ஐபேட் ப்ரோ 256 ஜி.பி., 512 ஜி.பி., 1 டி.பி. மற்றும் 2 டி.பி. என நான்குவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    • ஐபேட் ஏர் மாடல் இரண்டு அளவுகளில் கிடைக்கிறது.
    • ஐபேட் ஏர் அதிகபட்சம் 1 டி.பி. மெமரி கொண்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது லெட் லூஸ் (Let Loose) நிகழ்ச்சியில் முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆப்பிள் வரலாற்றில் முதல்முறையாக ஐபேட் ஏர் மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.

     

    நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன. 

    • 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் ஆகும்.
    • மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    உலகளவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. 2024 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் வினியோகம் தொடர்பாக கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி இந்த காலாண்டு வாக்கில் விற்பனைான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் 5ஜி கனெக்டிவிட்டி இடம்பெற்றிருந்தது. மேலும், பயனர்கள் பிரீமியம் சாதனங்களை அதிகளவில் வாங்க துவங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்களில் 7 மாடல்களின் விலை குறைந்த பட்சம் 600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரத்து 90) என துவங்கின.

    2024 ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடலாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இடம்பெற்று இருக்கிறது. டாப் 10 விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. இதில் முதல் மூன்று இடங்களை ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் ஆகும்.

    முதல் காலாண்டின் டாப் 10 பட்டியலில் இரண்டு இடங்களை சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் பெற்றுள்ளது. இதில் கேலக்ஸி S24 அல்ட்ரா ஐந்தாவது இடமும், கேலக்ஸி S24 பேஸ் வேரியண்ட் ஒன்பதாவது இடமும் பிடித்துள்ளது.

    அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

    ஐபோன் 15

    ஐபோன் 15 ப்ரோ

    ஐபோன் 14

    கேலக்ஸி S24 அல்ட்ரா

    கேலக்ஸி A15 5ஜி

    கேலக்ஸி A54

    ஐபோன் 15 பிளஸ்

    கேலக்ஸி S24

    கேலக்ஸி A34





    • ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த புது அம்சங்கள் அறிவிக்கப்படலாம்.
    • M4 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனத்தின் லெட் லூஸ் (Let Loose) நிகழ்ச்சி நாளை (மே 7) நடைபெற உள்ளது. வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை உலகம் முழுக்க பார்வையாளர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தபடி நேரலையில் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

    அதன்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதய ஐபேட் ப்ரோ மாடல்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ப்ரோ ஆகும். இரு மாடல்களும் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இவற்றில் ஸ்கிரீனை சுற்றி மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஐபேட் சாதனங்களில் முதல்முறையாக இரு மாடல்களிலும் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய ஐபேட் மாடல்களில் M4 பிராசஸர் வழங்கப்படும் என தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், M3 பிராசஸர் கூட வழங்கப்படலாம்.

    இதைத் தொடர்ந்து இரண்டு ஐபேட் ஏர் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவை 10.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவற்றுடன் ஹேப்டிக் ஃபீட்பேக் மற்றும் புது வசதிகளை வழங்கும் ஆப்பிள் பென்சில் மற்றும் மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய சாதனங்கள் வரிசையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த புது அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    • அளவில் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
    • சுவாரஸ்யமான ஹிஞ்ச் டிசைனை உருவாக்கியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கி வருவது தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. மடிக்கக்கூடிய ஐபோன் தொடர்பாக இதுவரை ஏராளமான புகைப்படங்கள், ரெண்டர்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இது தொடர்பாக ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    சமீபத்தில் வெளியான தகவல்களிலும், ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது. மேலும், இதற்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய சாதனம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இது அளவில் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமை சார்ந்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் கிளாம்ஷெல் டிசைன் கொண்ட புதிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமை விவரங்கள் மே 2 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

    காப்புரிமைகளின் படி ஆப்பிள் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய சாதனத்தில் சுவாரஸ்யமான ஹிஞ்ச் டிசைனை உருவாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. புதிய டிசைனின் படி புதுவித ஹிஞ்ச் காரணமாக இந்த சாதனம் தற்போது விற்பனை செய்யப்படும் மடிக்கக்கூடிய சாதனங்களை விட தடிமனாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இதன் காரணமாக ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், ஆப்பிள் நிறுவனம் மடிக்ககூடிய ஐபோன் மட்டுமின்றி மடிக்க்கூடிய ஐபேட் மாடலையும் உருவாக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. 

    • ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.
    • ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம்.

    ஆப்பிள் நிறுவனம் மே 7 ஆம் தேதி புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் லெட் லூஸ் (Let Loose) என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், புதிய சாதனங்கள் அறிமுகத்தை ஒட்டி புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஆப்பிள் பென்சில் கிராஃபிக் டிசைன் திறன்களை எடுத்துரைக்கும் சிறு வீடியோவை இணைத்துள்ளார்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இவற்றில் M3 சிப், OLED டிஸ்ப்ளே, மெல்லிய பாடி மற்றும் பெசல்கள், மேட் ஸ்கிரீன் ஆப்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    மேலும் இரண்டு புதிய ஐபேட் ஏர் மாடல்கள், ஐபேட் ப்ரோ மாடலுக்கென ரிடிசைன் செய்யப்பட்ட மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் பென்சில் விசேஷ வசதிகளை கொண்டிருக்கும் என்றும் இதில் விஷன் ஒ.எஸ். சப்போர்ட் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

    ஆப்பிளின் லெட் லூஸ் நிகழ்ச்சி மே 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) துவங்க இருக்கிறது. 

    • புது ஐபேட்கள் இருவித அளவுகளில் கிடைக்கும்.
    • இதுவே வெளியீட்டை தாமதப்படுத்தி இருக்கிறது.

    ஆப்பிள் நிருவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், புது ஐபேட் மாடல்களின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஆப்பிள் டேப்லெட் மாடல்கள் மே மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில், "ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது."

    "புது ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மேஜிக் கீபோர்டு, புதிய M3 சிப்செட்கள் வழங்கப்படலாம். புதிய ஐபேட் ஏர் மாடல்கள் 11.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் மாடல்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புது ஐபேட் ப்ரோ மாடல்களில் உள்ள OLED டிஸ்ப்ளேவை அசெம்பில் செய்ய சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதே, வெளியீட்டை தாமதப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 10 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெவலப்பர்கள் ஆப்பிள் குழுவினரை நேரில் சந்தித்து உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
    • விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் அதிக மொழிகள் சேர்க்கப்பட இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ ஹெட்செட்டின் விர்ச்சுவல் கீபோர்டில் 12 புதிய மொழிகளை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் ஆங்கிலம் (அமெரிக்க) மொழி மற்றும் எமோஜி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் விஷன் ப்ரோ சாதனம் அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையை மாற்றும் வகையில், ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ சாதனத்தை அதிக நாடுகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியாக அதிக மொழிகளை சேர்க்க இருக்கிறது. அதன்படி கான்டோனீஸ் (டிரேடிஷனல்), சைனீஸ் (சிம்ப்லிஃபைடு), இங்லீஷ் (ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், பிரிட்டன்), ஃபிரென்ச் (கனடா, ஃபிரான்ஸ்), ஜெர்மன் (ஜெர்மனி), ஜேப்பனீஸ் மற்றும் கொரியன் போன்ற மொழிகள் விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் சேர்க்கப்பட இருக்கிறது.

     


    புதிய மொழிகள் சேர்க்கப்பட இருப்பதால், விஷன் ப்ரோ மாடல் விரைவில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோன்று ஹாங்காங் மற்றும் தாய்வானிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யபப்டலாம் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டிற்குள் மேலும் அதிக நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது. எனினும், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், ஆப்பிள் வல்லுநரான மிங்-சி-கியூ ஆப்பிள் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன்பே அதிக நாடுகளில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தெரிவித்து இருக்கிறார். 

    • ஐபோன் 15 ப்ரோ சீரிசின் புது வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
    • விலை மற்ற சாதனங்களை போன்றே அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி போன் மாடல்களை தங்கம் அல்லது வைரம் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து ஸ்பெஷல் எடிஷன் மாடல்களாக வெளியிடுவதில் புகழ்பெற்ற நிறுவனம் கேவியர். ஏற்கனவே விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு அலங்கரித்து அவற்றின் விலையை கேவியர் மேலும் அதிகப்படுத்தி வருகிறது.

    இந்த வரிசையில், கேவியர் நிறுவனம் ஐபோன் 15 ப்ரோ சீரிசின் புது வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. புது வெர்ஷன் ஆப்பிள் விஷன் ப்ரோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ விசேஷ எடிஷனில் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் குறிப்பிட்ட பாகங்கள் இடம்பெற்று இருக்கும். இதன் விலை கேவியரின் மற்ற சாதனங்களை போன்றே அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

     


    ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் வட்ட வடிவ வென்ட்கள் மற்றும் ஆரஞ்சு அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ்புறத்தில் விஷன் ப்ரோ முன்புற டிசைனை பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கிறது. இந்த டிசைன் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என இரு மாடல்களிலும் கிடைக்கிறது.

    விலையை பொருத்தவரை கேவியர் வடிவமைத்த ஆப்பிள் விஷன் ப்ரோ தழுவிய ஐபோன் 15 ப்ரோ 8 ஆயிரத்து 060 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் என்று துவங்குகிறது. கேவியர் ஃபியூச்சர் கலெக்ஷன் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கும் புதிய ஐபோனுடன் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் டெஸ்லா சைபர் டிரக் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

     


    கேலக்ஸி S24 அல்ட்ரா சைபர் டிரக் எடிஷனில் டெஸ்லாவின் சைபர் டிரக் மாடலை தழுவிய டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் சைபர் டிரக் தோற்றம் கொண்டிருக்கிறது. மேலும் சைபர் டிரக் ஹெட்லைட் நிறம், சைபர் டிரக்-இல் பயன்படுத்தப்பட்ட மெட்டல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • இவை தவிர எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடலை வாங்க நீண்ட காலம் திட்டமிடுவோர் தற்போது அதனை வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது. அதன்படி ஆப்பிளின் ஐபோன் 15 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி ஐபோன் 15 என்ட்ரி லெவல் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 16 ஆயிரம் வரை தள்ளுபடி கிடக்கிறது. இந்த மாடல் ஐபோன் 14-க்கு மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படது. இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரதது 900 விலையில் அறிமுகம் செய்யப்ட்ட ஐபோன் 15 விலை ரூ. 66 ஆயிரத்து 499 என மாறியுள்ளது.

    வங்கி சலுகைகளாக ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 9 ஆயிரத்து 901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 3 ஆயிரத்து 325 வரை குறைந்துள்ளது. இவை தவிர பயனர்கள் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 50 ஆயிரம் வரை அதிகபட்ச தள்ளுபடி பெறலாம்.

    • இதில் புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.
    • இந்த சாதனங்கள் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாதனங்கள் செய்தி குறிப்பின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    இம்முறை புதிய மேக்புக் ஏர் மாடல்களுடன் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் புதிய நிற ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் மற்றும் மேக்புக் ஏர் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சாதனங்கள் வரும் வாரத்திலேயே அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

     


    பிரபல ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில் வரும் வாரங்களில் ஆப்பிள் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள், மேம்பட்ட ஐபேட் ஏர், 12.9 இன்ச் மாடல், புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.

    மேக் சாதனங்களை பொருத்தவரை 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்கள் அதிநவீன M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சாதனங்கள் அனைத்தும் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை மிக விரைவில் அறிவிக்க ஆப்பிள் விளம்பர குழுக்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ×