search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worship"

    • மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
    • நேற்று இரவு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபை உள்ளது, இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாத பூச நட்சத்திரம் நேற்று இரவு 7.45 மணிக்கு தொடங்கியது.

    இதனை முன்னிட்டு நேற்று இரவு சத்திய ஞான சபையில், 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள், அருட்பெருஞ் சோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதியை தரிசித்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான, சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர், ஜோதி தரிசனத்தை தொடர்ந்து சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் திரு மாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    ஞானசபை உள்ள பொதுவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரி குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் ஸ்ரீதேவி பூதேவி யுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்கா ரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாக னம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 1-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடை பெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 21-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகிழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார்.

    பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாட வீதியில் சென்று வந்து நிலையை அடையும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா"என்ற பக்தி கோஷம் எழுப்புவார்கள். அன்று இரவு தீர்த்தவாரி அவரோகணம், 23-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதிஉலா, 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

    • ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.
    • ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.

    ராமானுஜருக்கு எத்தனையோ சீடர்கள் இருந்தாலும், மிக முக்கியமான சீடர்களில் ஒருவர் தாசரதி என்று அழைக்கப்படும் முதலியாண்டான். இவர் ராமானுஜரின் மருமகன் ஆவார். கிபி 1027 -ம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை) எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (ராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

    இவருக்கு "ராமானுசன் பொன்னடி" என்றும் "எதிராச பாதுகா" என்றும் "ராமானுஜர் திரிதண்டம்" என்றும் "ஆண்டான்" என்றும் பல பெயர்கள் உண்டு. ராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு.

    ராமானுஜர் காஞ்சிபுரத்தில் இருந்து வைணவப் பணிகளுக்காக திருவரங்கம் சென்ற பொழுது முதலியாண்டான் கூரத்தாழ்வாரோடு இணைந்து சென்றார். அங்கே அவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தார். ராமானுஜரின் கட்டளைப்படி முதலியாண்டான், ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார்.

    முதலியாண்டனின் குமாரராகிய கந்தாடை ஆண்டான் எம்பெருமானாரின் அனுமதிபெற்று, எம்பெருமானாரின் வடிவம் ஒன்றை உருவாக்கினார். எம்பெருமானாரும் இந்த விக்ரஹத்தை மிகவும் உகந்து கட்டி அணைத்து தம் பேரருளை அதில் பாய்ச்சினார்.

    இந்த விக்ரஹம் "தாம் உகந்த திருமேனி" என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. தமிழ்மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் முதலியாண்டான். இப்படி பலவகையிலும் சிறப்பு மிக்க முதலியாண்டானின் அவதார நன்னாள் இன்று. வைணவ ஆலயங்களிலும் வைணவ அடியார்களின் இல்லங்களிலும் இந்த நட்சத்திரம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செட்டிநாட்டு பகுதிகளில் கோலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
    • எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.

    லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும்.

    செட்டிநாட்டுப் பகுதிகளில் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்பொழுது நகரங்களில் எல்லாம் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகிறார்கள். வெள்ளிக் கிழமை மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.

    கோலங்களில் பல வகைகள் உள்ளன. அவை மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி, நடுவீட்டுக் கோலம், பின்னல் கோலம் என்றெல்லாம் இருக்கின்றன. அதிகாலையில் வீட்டு முகப்பில் சாணம் தெளித்து கோலம் போட்டால், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அவரவர் இல்லங்களில் அவரவர்களே கோலமிடுவது மிகவும் சிறப்பு.

    முன்காலத்தில் தமிழர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, காலைக் கடன்களை முடித்து குளித்து, அதன்பிறகு வாசலில் நீர் தெளித்து கோலம் போடுவது வழக்கம். வாசல் தெளிக்கும் போது முன்பெல்லாம் சாணம் தெளிப்பார்கள்.

    சாணம் ஒரு கிருமி நாசினி. செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் மாவிலைத் தோரணங் களை வாசலின் நிலைப்படியில் கட்டுவார்கள். கிருமிகளை ஈர்க்கக்கூடிய ஆற்றலும் உண்டு.

    காலையில் பெண்கள் குனிந்து கோலமிடுவதன் மூலம் உட ற்பயிற்சியோடு, நல்லதொரு கோலக்கலையும் வளர வழிவகுத்தனர். பண்டிகை தினங்களான புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களில் வண்ணக் கோலம் இடுவதும் நம் வழக்கம்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டிற் குள் கிருஷ்ணர் அடியெடுத்து வைப்பது போல சிறிய பாதங்களை வரைவார்கள். வீதியில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணன் பாதக் கோலம் வரையப்படும். நம்வீட்டில் நடக்கும் பூஜையை கண்ண பரமாத்மா வந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை.

    மாதங்களிலேயே மார்கழி மாதத்தில்தான் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின் றோம். மற்ற மாதங்களில் மக்கள் கோலத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் அலங்கோலமான வாழ்வை மாற்றுவது மாக்கோலமிட்டு செய்யப்படும் வழிபாடுதான் என்பதை அனுபவத்தில் தான் உணர முடியும்.

    `கோலம்' என்றால் 'அழகு' என்று பொருள். வீட்டை அலங்கரித்தால் மகிழ்ச்சியும் குடியேறும். மனதை அழகு படுத்தினால் இறைவனும் குடியேறுவான். நமது வாழ்வில் சகல நாட்களும் சந்தோஷம் பெருக வேண்டுமானால், அன்றாடம் சமையலறையில் அடுப்பிற்கு கோலம் இட வேண்டும்.

    துளசி மாடத்தின் முன்பும், வீட்டின் முன் வாசலிலிலும் கோலம் இட வேண்டும். அடுப்பில் கோலமிட்டு அன்னலட்சுமியை வரவேற்றால், அஷ்டலட்சுமிகளும் தாங்களாகவே வந்துசேர்வார்கள்.

    இதயக் கமலம், ஐஸ்வரியக் கோலங்கள் இடும்பொழுது கண்டிப்பாக கால்களில் மிதிக்கக் கூடாது. பொதுவாக யாருமே கோலத்தை மிதிக்கவோ. அழிக்கவோ கூடாது. கோலத்தை நாம் மங்கலமாகக் கருதி கொண்டாட வேண்டும். கோலம் இடுவதில் அழகும் இருக்கிறது, புண்ணிய மும் சேர்கிறது.

    கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவை உபயோகப்படுத்துவது நல்லது. அதாவது நாம் அரிசி மாக்கோலம் போடும் பொழுது, அந்த அரிசி மாவை எறும்புகள் மற்றும் ஊர்வன சாப்பிடுவதன் மூலம் அன்னதானம் செய்த பலன் நமக்கு கிடைத்து புண்ணியம் வந்து சேரும்.

    எனவே லட்சுமி இல்லத்தில் குடியேற ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வீட்டு முகப்பில் அழகிய கோல மிட்டு வரவேற்போம். ஆரோக்கியமான வாழ்வும். செல்வச் செழிப்புமிக்க வாழ்வும் அமைய வழிவகுப்போம்.

    • நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.
    • 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதுடன் நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர்.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும் 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது. இது மட்டுமின்றி 21 அடி நீளமுள்ள அலகு குத்தி கோவிக்கு வந்து காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். இதனால் சித்திரை திருவிழா களைகட்டியது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நல்ல காரியங்களை செய்யும்போது காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம்.
    • மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

    தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒரு சில விஷயங்கள் நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம்.

    நல்ல காரியங்களை நாம் செய்யும்போது தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாளா, கீழ்நோக்கு நாளா, சமநோக்கு நாளா என்று பார்ப்போம். மேல்நோக்கு நாளில் சுபகாரியங்களை செய்வோம். ஆனால் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்றால் என்ன என்று தெரியுமா...?

    அந்த வகையில் தினசரி நாள்காட்டியில் உள்ள ஒரு விஷயம்தான் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் போன்ற நாட்கள். இந்த நாட்கள் அனைத்து நாள்காட்டியிலும் இருக்கும். ஆனால் நாம் அதை பொதுவாக, "மேல்நோக்கு" என்றால் "நல்ல நாள்" என்றும், "சமநோக்கு" என்றால் "சுமாரான நாள்" எனவும், "கீழ்நோக்கு நாள்" என்றால் "கெடுதலான" நாளாகவும் எண்ணி அந்த நாட்களில் தவறான காரியங்களில் ஈடுபடுகிறோம்.

    மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

    நட்சத்திரங்கள் மொத்தம் 27 இவைகளை நம் முன்னோர்கள் ராசிமண்டல அடிப்படையில் மூன்றாக பிரித்தனர்.

    1. "ஊர்த்துவமுக" நட்சத்திரம்

    2. "அதோமுக" நட்சத்திரம்

    3. "த்ரியமுக" நட்சத்திரம்.

    1. ரோகிணி,

    2. திருவாதிரை,

    3. பூசம்,

    4. உத்திரம்,

    5. உத்திராடம்,

    6. திருவோணம்,

    7. அவிட்டம்,

    8. சதயம்,

    9. உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் "ஊர்த்துவமுக" நட்சத்திரங்கள்.

    இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் "மேல்நோக்கு நாட்கள்" எனப்படும்.

    இன்னாட்களில்… "மேல்நோக்கி" வளர்கின்ற பயிர்களுக்காக விதை விதைத்தல், மரங்களை நடுதல், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள்(வீடு), உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

    இரண்டாவதாக,

    1. பரணி,

    2. கிருத்திகை,

    3. ஆயில்யம்,

    4. மகம்,

    5. பூரம்,

    6. விசாகம்,

    7. மூலம்,

    8. பூராடம்,

    9. பூரட்டாதி

    ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "அதோமுக" நட்சத்திரங்கள் எனப்படும். அதாவது… இந்த நட்சத்திரம் கொண்ட நாட்கள் "கீழ்நோக்கு நாள்" எனப்படுகிறது.

    இந்த நாட்களில்… கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், பூமிக்கடியில் வளரும் கிழங்கு வகைச் செடிகளைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

    மூன்றாவது வரும் 9 நட்சத்திரங்கள்:

    1. அஸ்வினி,

    2. மிருகசீரிஷம்,

    3. புனர்பூசம்,

    4. ஹஸ்தம்,

    5. சித்திரை,

    6. சுவாதி,

    7. அனுஷம்,

    8. கேட்டை,

    9. ரேவதி

    ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "த்ரியமுக" நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் கொண்ட நாட்கள் "சமநோக்கு" நாட்கள் எனப்படும் இந்த நாட்களில்… வாகனங்கள், கார், பைக் வாங்குதல், செல்லப்பிராணிகள், ஆடு, மாடு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல்(ஏறு) உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.

    மேற்கண்ட நாட்களை நினைவில் வைத்துக்கொண்டால், எந்த நாளில் என்ன காரியங்கள் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை, எளிதாக அறிந்து கொள்ளலாம்.

    இதுபோன்ற எளிமையான விஷயங்களை நாமே அறிந்துகொண்டு அந்த அந்த நாட்களுக்குரிய பணிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    நமது முன்னோர் பல விஷயங்களை மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து அனுபவப்பூர்வமாக விளக்கியும் வைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார்.
    • இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர்.

    விவசாய நாடான இந்தியாவில் குறிப்பாக கிழக்கு இந்தியாவில் அட்சய திருதியை நன்னாளை முதல் உழவு நாளாக தொடங்குகின்றனர். அட்சய திருதியை நன்னாளில்தான் கடவுளர்களின் பொருளாளர் பதவியை ஏற்று குபேரர் லட்சுமி தேவியை வணங்கி போற்றினார்.

    புதிய தொழில் தொடங்குவதற்கும் வீட்டின் கட்டுமான பணியை ஆரம்பிப்பதற்கும் மிகவும் சிறப்பான நாளாக அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாள் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் அதிக அளவிற்கு பொருள் சேரும் என இந்த குறிப்பிட்ட நாளில் தங்க ஆபரணங்களை வாங்க மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாளின் சிறப்பு என்னவென்றால் விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள். பரசுராமர் அவதரித்த தினம்.

    பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார். அன்னபூரணி தேவி பிறந்த நாளும் இதுவே. என இந்த நாளுக்கும் அட்சய என்கின்ற பதத்திற்கும் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்

    தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்கிர பட்சத்தில் மூன்றாவது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர் பலர் திருமணங்களை இந்த நாளில் முடிவு செய்கின்றனர்.

    இந்த நன்னாளில் நாம் செய்கின்ற நற்காரியங்களும் நமக்கு பல மடங்கு வாழ்வில் நன்மை பயக்கும் மேலும் தொடர்ந்து நல்ல செயல்கள் பல செய்யக்கூடிய சூழலை நம் வாழ்வில் ஏற்படுத்தி எல்லா வளங்களையும் இறைவன் நமக்கு அருள்வார். எனவே தான் இந்நன்னாளில் மக்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து மகிழ்கின்றனர் குறிப்பாக அட்சய திருதியை கடும் கோடையில் வருவதால் பலர் நன்னாளில் தங்களால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பானகம் மோர் விநியோகிக்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்ஷய்ய திருதீயா புண்ய காலே
    • பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    தானம் அளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...

    அக்ஷய்ய திருதீயா புண்ய காலே அக்ஷய்ய புண்ய ஸம்பாதனார்த்தம் (பித்ரு ப்ரீத்யர்த்தம்) தர்மகடாக்ய உதகும்ப தானமஹம் கரிஷ்யே..

    ஏஷ தர்மகடோ தத்தோ ப்ரும்ஹ விஷ்ணு சிவாத்மக: அஸ்ய) பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.
    • பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும்.

    மகாத்மாவான தருமரை, துரியோதனன் தன் தாய்மாமன் சகுனியின் உதவி கொண்டு சூழ்ச்சி செய்து சூதாட்டத்தில் தோற்கடித்தான். இதனால் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தது. அவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து திரவுபதியோடு வடக்கு நோக்கி யாத்திரையை தொடங்கினார்கள். அப்போது இந்திராதி தேவர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் மற்றும் மிகுந்த பற்றுள்ள மக்களும் பாண்டவர்களின் பின் சென்றனர்.

    பஞ்சபாண்டவர்கள் அவர்களை நோக்கி, "உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். எனது அருமை மக்களே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்" என்று வேண்டிக்கொண்டனர்.

    ஆனால் மக்களோ, பாண்டவர்களை நோக்கி பலவிதமாக புகழ்ந்தனர். அப்போது தருமர் அவர்களிடம், "நீங்கள் அன்பால் என்னை இவ்வாறு புகழ்கிறீர்கள். எங்களிடம் இல்லாத உயர்ந்த குணங்களை கூட எங்களிடம் உள்ளது போல் சொல்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். இருப்பினும் நீங்கள் திரும்பி செல்லுங்கள்" என்று கூறினார். பின்பு பஞ்ச பாண்டவர்கள், கங்கை கரையில் இருந்த பிரமாணக்கோடி என்னும் ஆலமரத்திற்கு அருகில் சென்று, அன்று இரவை அங்கேயே கழித்தனர்.

    அப்போதும் சில அந்தணர்களும் குறிப்பாக அக்னி ஹோதிரிகள் (தினமும் யாகம் செய்யக்கூடிய அந்தணர்களும்) மற்றும் அவர்களது உறவினர்களும் திரும்பி செல்லாமல் நூற்றுக்கணக்கில் பாண்டவர்களுடன் வந்தனர். அவர்களை நோக்கி தருமர், "ராட்சசர்கள் மற்றும் கொடிய மிருகங்கள் வசிக்கும் இந்த இடத்தில் எங்களுடன் ஏன் வருகிறீர்கள்" என்று கேட்டாலும், அவர்களின் அன்பான பேச்சால் மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் ஒரு காரியம் அவர் மனதை நெருடியது. "சன்னியாசிகளும், அந்தணர்களும், உறவினர்களும் நம்முடன் வருகின்றனர். இவர்களின் பசியை போக்க வேண்டியது எனது கடமை. தர்ம சாஸ்திரத்தில் விதித்தபடி தேவர்களுக்கும், நம்மை தேடி வந்த விருந்தினர்களுக்கும், நாய்களுக்கும், காக்கைக்கும், அன்னம் இடாவிட்டால் மகா பாவம். எனவே இதற்கு என்ன செய்யலாம்" என வருத்தப்பட்டார்.

    அப்போது சவுனகர் என்ற மகா முனிவர் அங்கு வந்தார். அவர் தருமரை நோக்கி, "தவத்தின் மூலம் உன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். யோக சித்தியை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தவத்தின் மூலம் அடைய முடியாதது எதுவுமில்லை" என்றார்.

    இதையடுத்து தருமர் தன் புரோகிதரான தவுமியரிடம் ஆலோசனை கேட்டார். தவுமியரோ, "தர்ம ராஜாவே.. பிராணிகள் எல்லாம் ஒரு சமயம் கடும் பசியால் துன்பமடைந்த பொழுது, சூரியபகவான் அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் கொண்டு பூமியில் மேக ரூபமாக மாறி மழை நீரை வெளிப்படுத்தினார். அந்த மழை நீரால் பூமி செழித்து, அனைத்து ஜீவ ராசிகளின் பசியும் தீர்ந்தது. சூரியன் அன்ன ரூபம் ஆனவர். அனைத்து உயிரையும் காக்கக்கூடியவர். எனவே நீ அவரை நோக்கி தவம் செய்" என்றார்.

    தருமரும் ஒரு மனதுடன் அன்ன ஆகாரம் இன்றி சூரிய பகவானின் விசேஷமான 108 நாமத்தை கூறி தவம் இயற்றினார். பின்னர் சூரிய பகவானை நோக்கி, "12 ஆதித்யர்களும், 11 ருத்திரர்களும், அஷ்டவசுக்களும், இந்திரனும், பிரஜாபதியும், ஆகாசத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களும், உங்களை ஆராதித்து சித்தி அடைந்தனர். தங்களை ஆராதிப்பதால் ஏழு வகை பித்ருக்களும் திருப்தி அடைகின்றனர். தாங்கள் எனக்கு உதவ வேண்டும்" என்று தருமர் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு சூரிய பகவான், "தர்மராஜா.. நீ வேண்டியது அனைத்தும் உனக்கு கிடைக்கும்படி செய்கிறேன். இப்பொழுது நான் தரும் பாத்திரம் உனக்கு 12 ஆண்டு வரை சக்தி உள்ளதாக இருக்கும். இந்த பாத்திரத்தை பெற்றுக்கொள். இதில் நீ இடும் பழமோ, கிழங்கோ, கீரையோ, காய்கறிகளோ அல்லது அவற்றை கொண்டு தயார் செய்த உணவோ, தான் உண்ணாமல் திரவுபதி அந்த உணவை பரிமாறிக் கொண்டே இருக்கும் வரை, அது வளர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய தினத்தில் இருந்து நீ இதை பயன்படுத்தலாம்" என்றார்.

    தருமரும் ஒரு அடுப்பு மீது அந்த பாத்திரத்தை வைத்து சமையல் தயார் செய்தார். அதில் தயாரித்த உணவு சிறிய தாக தோன்றினாலும், அந்த பாத்திரத்தின் சக்தியால் அது வளர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் உணவளித்த பிறகு மீதமிருந்த அன்னத்தை பிரசாதமாக தருமரும் மற்றவர்களும் சாப்பிட்டனர். இறுதியாக திரவுபதி சாப்பிட்டாள். அட்சய பாத்திர மகிமையால் அங்கிருந்த அனைவரும் பசி நீங்கி மகிழ்ந்தனர். 

    தருமர், மற்றவர்களின் பசியை தீர்க்க சூரிய பகவானிடம் இருந்து, சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அன்று அட்சய பாத்திரம் பெற்றதால் அந்த தினம் 'அட்சய திருதியை' என அழைக்கப்பட்டது.

    'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய இந்த திருதியை மிக விசேஷமானது. அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளோ, அபிஷேகமோ, ஜபமோ, ஹோமமோ மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களைத் தரும். அன்றைய தினம் ஏழைகளுக்கு வழங்கப்படும் அன்னதானம், நீர் மோர் போன்றவை நமக்கு குறைவற்ற செல்வத்தை பெற்றுத் தரும். சிலர் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் அது தானத்தையும், தர்மத்தையும் தான் சிறப்பாக சொல்லியுள்ளது.

    முன்னோர்களின் (பித்ருக்களின்) பிரீதிக்காக நீர் நிறைந்த ஒரு செப்பு பாத்திரத்தை தானம் செய்வார்கள். இதற்கு 'தர்மகட தானம்' என்று பெயர். இதனால் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் தாகமின்றி இருப்பார்கள். ஒரு செப்பு பாத்திரத்தில் அல்லது கலசத்தில் நல்ல நீரை நிரப்பி ஏலக்காய் மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து அதற்கான மந்திரத்தை சொல்லி தானம் அளிப்பது மிகச் சிறப்பானது. 

    இந்த நாளில் எந்தவிதமான பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அனைவருக்கும் அன்னதானம் அளிப்பது உயர்ந்த பலனை தரும். மேலும், பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும். இறந்த முன்னோர்களுக்கு நல்ல கதி உண்டாகும். வேதம் படித்த பெரியோர்களுக்கு குடை, விசிறி, நீர் மோர் போன்றவை அளிப்பார்கள். மேலும் அட்சய திருதியை அன்று தான் கிரத யுகம் ஆரம்பித்த நாள். எனவே அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    - 'ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    • 108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை.
    • சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம்.

    தாண்டவம் என்பதை வடமொழியில் நிருதயம் என்பர். தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் வெவ்வேறு உறுப்புகளும் இயங்குவது தாண்டவம். சிவன், காளி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் தாண்டவங்களை நிகழ்த்தி உள்ளனர் என்பதை புராணங்கள் மூலம் அறிகிறோம்.

    108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை எனப்படுகிறது. அவை காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கவுரி தாண்டவம், சங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்தத் தாண்டவம் என்பன. இவை ச, ரி, க, ம, ப, த, நி என்ற சப்த (7) சுரங்களிலிருந்து தோன்றியவை. பஞ்ச சபைகளில் ஆடியவை, சிவனது நடன சபை (அரங்குகள்) ஐந்து. திருநெல்வேலி தாமிர சபையில் ஆடியது. காளிகா தாண்டவம். மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடியது சந்தியா தாண்டவம்.

    பாண்டி நாட்டுத் திருப்புத்தூரில் ஆடியது (சிற் சபையில்) கவுரி தாண்டவம். இருண்ட நள்ளிரவில் சங்கார தாண்டவம், திருக்குற்றால சித்திர சபையில் திரிபுர தாண்டவம்; திருவாலங்காட்டு ரத்தின சபையில் ஊர்த்துவ தாண்டவம் (காளியுடன் போட்டியிட்ட தாண்டவம்), ஆனந்தத் தாண்டவம் தில்லை பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) ஆடியவை.

    சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம். துடியேந்திய கையில் 'சி' எழுத்தும், வீசிய கரத்தில் 'வா' என்ற எழுத்தும் அபய கரம் 'ய' என்ற எழுத்தையும் தீச்சுடர் ஏந்தியகரம் 'ந' என்ற எழுத்தையும் திருவடியின் கீழ் உள்ள முயலகன் 'ம' என்ற எழுத்தையும் பொருத்திக் காணலாம்.

    துடி ஏந்திய வலக்கரம் படைத்தல் தொழிலையும், அபயகரம் காத்தலையும், தீச்சுடர் ஏந்திய கரம் அழித்தலையும், மற்றொரு கரம் உயிர்களுக்கு முக்தி அருளும் திருவடியையும் காட்டுகிறது. முயலகனை மிதித்துள்ள திருவடி அருள் புரிதலையும் குறிப்பிடுவதாகும். இவ்வாறு சிவாயநம என்ற ஐந்தெழுத்தும் நடராஜர் திருஉருவத்தில் உள்ள தத்துவங்களாகும்

    • வீடுகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதற்கு குத்துவிளக்கைப் பயன்படுத்துகிறார்கள்.
    • தொங்கும் விளக்குகளைச் சாதாரணமாக வீடுகளில் ஏற்றுவதில்லை.

    விளக்குகள் பலவிதம் உண்டு. பித்தளையில் தயாரிக்கப்படும் விளக்கு தான் மிகவும் சிறந்தது. பழைய காலத்தில் பித்தளையில் செய்த விளக்கைத்தான் அனைவரும் பயன்படுத்தினார்கள்.

    இக்காலத்தில் ஸ்டீல் விளக்கு, வெள்ளி விளக்கு முதலியவை உண்டு. மாலை வேளையில் விளக்கேற்றுவதற்கும், விசேஷ நாட்களில் விளக்கேற்றுவதற்கும், தொடக்க விழாக்களுக்கும், திருமணம் போன்ற சடங்குகளுக்கும் பித்தளையில் தயாரிக்கப்பட்ட விளக்குகளையே பயன்படுத்துகிறார்கள். 

    விளக்குகளில் குத்துவிளக்கு (சாதாரண விளக்கு, ஐந்து திரி விளக்கு, ஏழு திரி விளக்கு), தொங்கும் விளக்கு, கோல் விளக்கு, சங்கிலிவட்ட விளக்கு என்று பலவகைகள் உண்டு.

    வீடுகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதற்கு குத்துவிளக்கைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஐந்து திரி விளக்கேற்றுவார்கள். கோல் விளக்கு, கோவில்களில் இறைவன் எழுந்தருளும் வேளைகளில் ஏற்றி வைப்பார்கள்.

    தொங்கும் விளக்குகளைச் சாதாரணமாக வீடுகளில் ஏற்றுவதில்லை. இவை பொதுவாக கோவில்களில் மட்டுமே ஏற்றப்படும். அஷ்டமங்கள காரியங்களுக்கு சங்கிலிவட்ட விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள்.

    • மாலையில் துளசிக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
    • துளசி இலை விஷங்களை முறிக்கக்கூடிய தன்மை படைத்தது.

    ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் கட்டாயம் இருக்க வேண்டும். துளசி செடியை வைத்து வளர்த்து வழிபட வேண்டும். குளித்து முடித்தபின் தூய நீரும், பாலும் விட்டு துளசியை வளர்க்க வேண்டும். தினமும் வலம் வந்து வழிபட வேண்டும். மாலையில் துளசிக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். விசேஷ நாட்களில் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

    இப்படியெல்லாம் பக்தியுடன் வழிபட்டால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள். உயர்ந்த நிலையை அடைவார்கள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் தாண்டவமாடும். துளசி இலை விஷங்களை முறிக்கக்கூடிய தன்மை படைத்தது. துளசிக்காற்றுப்படும் இடத்தில் விஷ ஜந்துக்களோ, விஷக் காற்றோ இருக்காது என்பது வைத்திய சாஸ்திரம்.

    ×