search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "annabhishekam"

    • சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

     தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

     அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.

    • காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
    • 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.

    காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.

    காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பொது விவரக்குறிப்பேடு வெளியிடப்படுகிறது.

    மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • பணிவிடை செய்வதும், அவனை நினைத்து உருகுவதும் அர்ச்சனையாகும்.
    • இறைவனை தூய்மையான மனத்துடன் பூஜிக்க வேண்டும். அதுதான் சேவை.

    கடவுளை வணங்குவதன் மூலமே ஒவ்வொரு மனிதனுக்கும் மனத்தூய்மையும், ஆத்மசாந்தியும் கிடைக்கிறது. தெய்வத்தை வணங்குவது என்பது தெய்வத்தை நாம் நெருங்கிக் காண்கிறோம் என்பதாகும். வணங்கும் முறைகளை நாம் ஒன்பது வகையாகப் பிரிக்கலாம். அற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கவனித்தல்:-

    கவனிப்பது என்பதன் அர்த்தம் `கேட்பது' என்பதாகும். இது குறிப்பிடுவது என்னவென்றால், தெய்வக் கதைகளையும், தெய்வங்கள் குறித்த பிற விஷயங்களையும் பக்தியோடும் ஆர்வத்துடனும் அமைதியான இடத்தில் இருந்து கேட்க வேண்டும் என்பதாகும்.

    கீர்த்தனம்:-

    கீர்த்தனம் ஆலாபனை செய்வதென்பது, ஆராதனையின் மற்றொரு சிறப்பம்சமாகும். பகவானின் லீலைகளை மனதில் கொண்டு பயபக்தியுடன் கீர்த்தனையை இசைக்கோர்வையாக பாடுவது.

    நினைத்தல்:-

    பகவானைப் பற்றி நிரந்தரமாக சிந்திப்பதுதான் 'நினைத்தல்' என்பதாகும். மனதை சுத்தப்படுத்தி அதிகாலை முதல் இரவு வரை இறைவனைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

    சேவை:-

    நாம் ஒவ்வொருவரும் இறைவனின் சேவகர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இறைவனை தூய்மையான மனத்துடன் பூஜிக்க வேண்டும். அதுதான் சேவை. நம்மை பகவானுக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்ய வேண்டும்.

    தாசி:-

    சேவையின் மற்றொரு வடிவம் தாசி என்பது. தாசி என்பது, தனது வாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காக அர்ப்பணித்துச் சேவை செய்வதாகும். வாழ்க்கையில் வேறு எந்தவிதமான ஆசைகளோ, மோகங்களோ இல்லாமல் களங்கமற்ற பக்தியுடன் இறைவனுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதுதான் தாசிப் பணி.

    அர்ச்சனை:-

    உலகேஸ்வரனுக்கு நாம் சேவகர்கள் என்று கருதி பணிவிடை செய்வதும், அவனை நினைத்து உருகுவதும் அர்ச்சனையாகும்.

    வணங்குதல்:-

    மனம், சொல், செயல் இவற்றால் தியானம் நடத்தி மந்திரங்கள் சொல்லி அர்ப்பணிப்பதும், சாஸ்டாங்கமாக விழுந்து இறைவனோடு அன்புகொள்வதும் வணங்குதல் எனப்படும்.

    இணைப்பு:-

    இறைவன் ஒரு மனிதனுக்கு நன்மையாகவோ அல்லது தீமையாகவோ வழங்குவது எதுவானாலும், அது அவனது நன்மைக்காகத்தான் என்பதாகும்.

    ஆத்ம சமர்ப்பணம்:-

    நமது சொந்த உடல், மனது மற்றும் சர்வ அங்கங்களையும் முழு சந்தோஷத்துடன் இறைவனுக்கு சமர்ப்பிப்பதுதான் ஆத்ம சர்ப்பணம்.

     பிரசாதம் சாப்பிடும் இறைவன்

    தினமும் சுவாமிக்கு பூஜை செய்யும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து வந்து நைவேத்தியத்தினை எடுத்துக்கொள்கிறது. இதனை இறைவனே எறும்பு வடிவில் எடுப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் இத்தல இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பு. இதனைக் காண நீங்கள் திருவெறும்பூர் செல்ல வேண்டும். எறும்பாக வரும் இறைவனின் பெயர் எறும்பீஸ்வரர்.

     தமிழ்ப் புத்தாண்டில் அன்னாபிஷேகம்

    சிவாலயங்களில் வழக்கமாக ஐப்பசி பவுர்ணமியில்தான் அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் தூத்துக்குடியில் உள்ள சங்கமேசுவரர் திருக்கோவிலில் தமிழ்ப்புத்தாண்டான சித்திரை முதல் நாளில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. மேலும் அங்குள்ள மற்ற மூர்த்தங்களுக்கும் அந்த நாளில் அன்னாபிஷேகம் செய்யப்படுவது அத்தலத்திற்குரிய கூடுதல் சிறப்பாகும்.

    அதிசய கிரகங்கள்

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் நவக்கிரகங்கள் புதுமையாகக் காட்சியளிக்கின்றன. ஆம், எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல் இங்கே நவக்கிரகங்கள் காட்சி தரவில்லை. மாறாக, ஒரு மண்டபத்தின் மேல் பகுதியில் இவை செதுக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தின் நேர் கீழே ஒரு மேடை உள்ளது. நவக்கிரகங்களை வழிபடும் பக்தர்கள் அந்த மண்டபத்தை வலம் வந்து, தங்கள் கிரகங்களுக்கு பக்கமாக உள்ளது போல், மேடை அருகில் நின்று வழிபடுகிறார்கள். இதுபோல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை.

    வித்தியாசமான தலவிருட்சம்

    * ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் திருக்கோவிலின் சிவலிங்கம் மணலில் வடிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள பாறை மீது தல விருட்சமான அத்திமரம் உள்ளது. மிகப் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது வியப்புக்குரியது.

     * தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசர் ஆலயத்தில் இரு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அபூர்வமான காட்சியாக அருள் தருகிறார் தட்சிணாமூர்த்தி. இவரது காலுக்குக் கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டுமே உள்ளனர்.

     * தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர் மீது பங்குனி, புரட்டாசி ஆகிய இரு மாதங்களிலும் பவுர்ணமி அன்றும், அதற்கு முன்பு இருநாளும், பின் வரும் இருநாளிலும் சந்திரனின் கிரகணங்கள் மூர்த்தியின் மீது விழுகிறது.

    • சிவபெருமானால் படைக்ககூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கக்கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி நாள் அமைகிறது.
    • 10 கிலோ சாதத்தை கொண்டும், காய்கறி, பழங்கள் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது.

    முத்தூர்:

    ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். சிவபெருமானால் படைக்ககூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கக்கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி நாள் அமைகிறது. ஆகவே சிவபெருமான் எழுந்தருளும் அனைத்து கோவில்களிலும் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் 2000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் நேற்று மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 10 கிலோ சாதத்தை கொண்டும், காய்கறி, பழங்கள் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் காங்கயம் அருகே உள்ள சின்னாரிபட்டி கம்பம் மாதேசிலிங்கம் கோவில், காங்கயம் காசிவிஸ்வநாதர் கோவில் உள்பட காங்கயம் பகுதியில் உள்ள கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    • பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கங்கை பார்வதி தேவி சமேதராக சிவேந்திரர் மற்றும் சிவபெருமான் முழுஉருவத்தில் காட்சி அளிக்கின்றனர்.

    இங்கு பிரதி பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    • தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது.
    • பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது.

    மேலும் கோவிலில் அமைந்துள்ள சூரியன், சந்திரன், சிவன், அம்பாள், ஞானாம்பிகை, தட்சிணாமூர்த்தி, அணுக்க விநாயகர், கண்ணப்ப நாயனார், கன்னி மூல கணபதிவிநாயகர், துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதி, நாகதோஷ பரிகார விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், கார்த்திகை முருகன், தண்டாயுதபாணி ,நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் ,ராகு கேது, சனி, சன்னதி நவகிரகங்கள், பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டது.

    பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
    • ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.

    இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • சிவாலயங்களில் சிவபெருமான், நந்தியம் பெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    கார்த்திகை பவுர்ணமியன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றுவது போன்று ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது சிறப்பானதாகும்.அன்னாபிஷேகத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வதால் பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் கிடைப்பதுடன் கடன், வறுமை நீங்கி, பாவங்கள் விலகி செல்வ வளம் சேரும்.இதனால் ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதற்காக உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்கள் வண்ண வண்ண விளக்குகள், மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டி விழாவுக்கு தயாராகி வருகிறது.

    பொதுமக்களும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி, பழவகைகள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை கோவில்களுக்கு கொடுத்து வருகின்றனர்.மேலும் நேற்று பிரதோஷத்தை யொட்டி சிவாலயங்களில் சிவபெருமான், நந்தியம் பெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • லஷ்மி வராஹருக்கு 1008 கலசாபிஷேகம்
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி மூன்று நாட்கள் மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் தொடங்கி நடைபெற்று வந்தது.

    அதன்படி நேற்று முன்தினம் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு வேறு எங்குமே இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக ஓளஷத பிரசாதமாக வழங்கப்பட்டது.முன்னதாக கோ பூஜை மற்றும் கணபதி பூஜையுடன் ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம் நடத்தப்பட்டு ஸ்ரீ லஷ்மி வராஹருக்கு சிறப்பு பூஜைகளுடன் 1008 கலசங்களில் நிரப்பபட்டிருந்த புனித நீர் மூலம் கலசாபிஷேகமும் நடைபெற்றது.

    அபிஷேக பூஜைகளின் அபிஷேக தீர்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் இலவச ஔஷத பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம், கலசாபிஷேகம், மூலவர்ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அன்னாபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.

    கடந்த 26-ம்தேதி முதல் இன்று 28-ம்தேதி முடிய ஸ்ரீ கார்த்தவீர்யார் ஜூனருக்கு கைவிட்ட சொத்துக்கள், களவு போன பொருள்கள், இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கவும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், தொலைந்த பொருள்கள் திரும்ப கிடைக்கவும் வேண்டி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறுகிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று மாலை ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேக விழா நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே உள்ள மடவளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோவில்களில் வருடாந்திர ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவில் கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்த தோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய கோவிலின் குலத்தவர்களும், பக்தர்களும் மடவளாகம், பாப்பினி, பச்சாபாளையம், காங்கயம் உள்பட சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும், பக்தர்களும் திரளாக கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.

    விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக தலைவர் எஸ்.தங்கமுத்து, அன்னதான கமிட்டி நிர்வாகி பாலசுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர். இக்கோவில்களின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆதி அண்ணாமலையார் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி சிவபெரு மானுக்கு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.
    • அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் அருகே சுருளி அருவி பகுதியில் ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளது, இந்த கோவிலில் பவுர்ணமியை ஒட்டி நேற்று சிவபெரு மானுக்கு அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக மூலவருக்கு தண்ணீர், பசும்பால், இளநீர், அருகம்புல் சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடை பெற்றது. பின்னர் சிவபெருமான், நந்தி சிலை மீது சாதத்தை பக்தர்கள் அன்னாபிஷேகம் செய்தனர்.அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் சுருளி அருகில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

    இதை அடுத்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சியில் கூடலூர், கம்பம், உத்தம பாளையம், சின்னமனூர், சுருளிப்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
    • ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய வழிபாடு இன்று நடக்கிறது.

    ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது. அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது 5 பேருக்காவது அன்னதானம் செய்வது புண்ணியமாகும். ஸ்ரீஅன்னபூரணியை வணங்கி வர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.

    அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜேவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். இதையே சோத்துக்குள்ளே சொக்க நாதர் என்பார்கள்.

    ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய வழிபாடு இன்று நடக்கிறது. அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும். சிவனின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

    அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் பலன் நிச்சயம் உண்டு. லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக தினமான இன்று சிவனை வணங்கினால் பஞ்சபூ தங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் பெறலாம். சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமி ஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது.

    அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    ×