என் மலர்
ஆன்மிகம்
- மேஷம் வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சேரும் வாரம்.
- கடகம் சுப விரயங்கள் அதிகரிக்கும் வாரம்.
மேஷம்
வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சேரும் வாரம். வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பாக்கிய ஸ்தான அதிபதி குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அதிர்ஷ்டமும் நிம்மதியும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க திட்டமிடுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பெருகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்ற சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் சகாயமான பலன்கள் உண்டு. தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். இழந்த அரசுப் பணி மீண்டும் கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவார்கள். உயர் கல்வியில் நிலவிய மந்த நிலைமாறும். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக சுற்றுப் பயணம் செல்வார்கள். அமாவாசை அன்று தயிர்சாதம் தானம் வழங்கவும்.
ரிஷபம்
நிறைந்த மனதோடு நிம்மதியாக செயல்படும் வாரம். தன ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் சனி சேர்க்கை உள்ளது. தன, லாப ஸ்தானம் பலம் பெறுவதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குறைந்த முயற்சியில் நிறைவான வருமானம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்த தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும்.
முதலீட்டாளர்களுக்கு அரசு வழியில் மானியங்கள், உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கையும், சேமிப்பும் அதிகரிக்கும். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். வாழ்க்கைத் துணைக்கு கவுரவமான வேலை கிடைக்கும். பெண்களுக்கு குழந்தைகள் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் மனமறிந்து நடந்து கொள்வார்கள். அமாவாசை அன்று கோ பூஜை செய்யவும்.
மிதுனம்
உற்சாகமாக சுறுசுறுப்பாக செயல்படும் வாரம். ராசியில் ஜென்ம குருவாக வக்கிரகதியில் நின்று பலன் கொடுத்த குரு பகவான் வக்ர நிவர்த்தி பெற்று முழு பலனையும் கொடுக்க உள்ளார். ஆன்ம பலம் பெருகும். நினைப்பதொன்று, நடப்பதொன்றுமாக இருந்த நிலை மாறும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோ கஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும்.
இந்த காலகட்டத்தில் எந்த விதமான கடனுக்கு முயற்சி செய்தாலும் நிச்சயம் கைகூடும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். பங்குச் சந்தை ஆதாயம் பெருகும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பல வருடங்களாக தடைபட்ட திருமணம், பேசி நிச்சயித்து நின்று போன திருமணங்களும் நன்றாக நடைபெறும். 16.3.2026 அன்று மாலை 6.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கடன், ஜாமீன் போன்ற விசயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். அமாவாசை அன்று வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவவும்.
கடகம்
சுப விரயங்கள் அதிகரிக்கும் வாரம். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 6,9-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். நவ கிரகங்களும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். திருமண முயற்சிகள் வெற்றி தரும். எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட பிரச்சனைகள் சீராகும். தொழில், உத்தியோகத்தில் திட்டமிட்டு வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழிலாளிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அடமானத்திலிருக்கும் வீட்டை, நகையை மீட்க தேவையான பண உதவி கிடைக்கும்.
பெண்களுக்கு புகுந்த வீட்டில் நல்ல பெயர் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் விலகி சாதகமான முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். 16.3.2026 அன்று மாலை 6.14 முதல் 18.3.2026 அன்று இரவு 11.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவசியமற்ற வம்பு, வழக்கை தவிர்த்தல் நலம். அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடவும்.
சிம்மம்
இழந்த இன்பம் மீண்டும் கிடைக்கும் வாரம். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் வக்கிர நிவர்த்தி பெறுவதால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். எந்த நன்மையை எழுதுவது, எந்த நன்மையை விடுவது என்றே தெரியவில்லை. எனவே அஷ்டமச் சனியை நினைத்து பயப்படாமல் உங்கள் கடமையில் கவனமாக இருந்தால் எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிலரின் மேல் இருந்த வீண் பழி விலகும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். வேலைப்பளு அதிகமாகும். மனதிற்கு இனிமை தரும் இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு தாய்மாமாவால் வீண் செலவு அல்லது கடன் உருவாகும். 18.3.2026 அன்று இரவு 11.36 முதல் 21.3.2026 அன்று காலை 2.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தோல் அலர்ஜி, அரிப்பு போன்ற சிறிய உடல் உபாதைகள் இருக்கும். சிலருக்கு எதிர் கால நன்மைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் எண்ணம் மேலோங்கும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.
கன்னி
நினைத்தது நடக்கும் வாரம். வார இறுதியில் ராசிக்கு ஆறில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தியாகிறார். வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களின் திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் இருந்த தடைகள் அகலும்.
கண் மறைவாக இருந்த, காணாமல் போன நகைகள் மீண்டும் கிடைக்கும். அடமான நகைகள் மீண்டு வரும். மாமனார் மூலம் திரளான சொத்துகள் அல்லது பணம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி பலிதமாகும். பூர்வீக குலத்தொழிலில் புதிய பங்குதாரர் இணையலாம். பழைய பங்குதாரர் விலகலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். 21.3.2026 அன்று 2.28 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அமாவாசை அன்று விஷ்ணு சஹஸ்கர நாமம் படிக்கவும்.
துலாம்
நன்மைகள் நடக்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரம் நிவர்த்தி அடைந்ததால் தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் வந்து சேரும். எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ், கவுரவம் யாவும் உயரும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டாகும்.
பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும். வராக்கடன்கள் வசூலாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. கடந்தகால வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் சுபச் செலவு ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினை இனி இல்லை. அமாவாசை அன்று சுமங்கலி பெண்களுக்கு இயன்ற தான தர்மம் வழங்கவும்.
விருச்சிகம்
அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் சனி சேர்க்கை உள்ளது. இதனால் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் யோகமும் உள்ளது. பொருளாதார நிலை சிறப்பாகி வாழ்க்கைத்தரம் உயரும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில், உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமாகும். பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும். வீடு, வாகனம் முயற்சிகள் கைகூடும். வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.தாய் தந்தை, உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். பெண்களுக்கு புதிய தொழில் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். அமாவாசை அன்று முருகன் கோவிலில் அன்னதானம் வழங்கவும்.
தனுசு
மன நிறைவான வாரம். ராசிக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. எதிர்காலம் குறித்த தெளிவு பிறக்கும். முன்னேற்ற பாதை தென்படும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு தெரியும். ஒரு சிலருக்கு இழந்த பதவிகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். முக்கிய ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கவும்.
சிலருக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷனால் ஆரோக்கிய குறைபாடு, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களின் மனதை புண்படாமல் பேசி குடும்ப பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். சில குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பித்ருக்கடன் தீர்த்து முன்னோர்களின் நல்லாசி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும்.அமாவாசை அன்று அந்தணர்களுக்கு தான தர்மங்கள் வழங்கவும்.
மகரம்
சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை உள்ளது. வாடகை வருமானம் தரக்கூடிய புதிய சொத்துக்கள் சேரும். விற்க முடியாமல் இருந்த சொத்துக்கள் விற்று முழுப் பணமும் வீடு வந்து சேரும். சகோதரிகளுடன் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தலாம். தொழில் மூலம் புகழ், வெற்றி, லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்றமும், மேன்மையும் உண்டாகும்.
அதற்கு தேவையான தொழில் கடனும் கிடைக்கும். சகோதர, தம்பதிகளுக்குள் உறவி னர்கள் மூலம் கொடுக்கல், வாங்கலில் சிறு மனக் கசப்பு தோன்றலாம். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை அமையும். திருமண வயதினருக்கு சாதகமான வரன் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி பதவி, ஊதிய உயர்வுடன் கிடைக்கும். சிலருக்கு பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உள்ளது. அமாவாசை அன்று உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவவும்.
கும்பம்
புண்ணியபலன்கள் அதிகரிக்கும் வாரம். ராசியில் உள்ள செவ்வாய் புதன் ராகுவிற்கு குரு பார்வை உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறுகிறது. பொருளாதார நிலைமை மேம்படும். கொடுக்கும் வாக்குறுதி பலிக்கும். தோல்வி மனப்பான்மை விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பதவியில் நிலவிய அவப்பெயர்கள் விலகும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவியில் அமரும் பாக்கியமுண்டு. பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும். காதல் திருமண முயற்சி சித்திக்கும்.
சிலருக்கு மறுமணம் நடக்கும். கடன் பிரச்சினையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். விண்ணப்பித்த வீடு, வாகன கடன் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். உடல் பாதிப்புகள் அகலும். சிலர் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை தவணை முறையில் வாங்குவீர்கள். திருமணமானஇளம் பெண்களுக்கு கருவுறுதல் நடைபெறும் வாய்ப்புள்ளது. அமாவாசை அன்று வயது முதிர்ந்தவர்களின் நல்லாசி பெறவும்.
மீனம்
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம் ராசியில் சூரியன் சுக்கிரன் சனி சேர்க்கை உள்ளது. அதாவது ராசியில் விரய அதிபதி சனிபகவான் அஷ்டமாதிபதி சுக்கிரன் ஆறாம் அதிபதி சூரியன் உள்ளார்கள். அதிக முதலீடு கொண்ட செயல்களில் ஆர்வம் குறைத்து ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். ஏலத்திற்கு போகவிருந்த பூர்வீகச் சொத்து சித்தப்பாவின் முயற்சியால் காப்பாற்றப்படும்.
அறிமுகம் இல்லாத நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. கை, கால், மூட்டு வலியால் அசதி உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை ஒத்திவைக்கவும். சில தம்பதிகளிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். சிலருக்கு வாரிசு அடிப்படையிலான தந்தையின் அரசு வேலை கிடைக்கும். தேர்வு மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவும், சுகமும் அதிகரிக்கும். அமாவாசையன்று சித்தர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- சர்வ ஏகாதசி. திருவோண விரதம்.
- திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு பங்குனி-1 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி காலை 8.23 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : திருவோணம் மறுநாள் விடியற்காலை 5.13 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : அமிர்த, மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம். வழிபாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-விருத்தி
கடகம்-வரவு
சிம்மம்-நன்மை
கன்னி-நலம்
துலாம்- பெருமை
விருச்சிகம்-இன்பம்
தனுசு- உயர்வு
மகரம்-ஆதரவு
கும்பம்-உதவி
மீனம்-கடமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நினைத்தது நிறைவேறும் நாள். உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். மாற்று மருத்துவம் உடல்நிலையை சீராக்கும். உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
புகழ் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் சந்தோஷம் தரும்.
மிதுனம்
எதிரிகள் பலம் மேலோங்கும் நாள். எதிலும் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் வீண்பழிகள் வந்து சேரும்.
கடகம்
வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.
சிம்மம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். விலகிச்சென்ற வரன்கள் விரும்பி வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.
கன்னி
செல்வ நிலை உயரும் நாள். சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உடன் இருப்பவர்கள் உள்ளத்தை அறிந்து செயல்படுவது நல்லது. நட்பால் நன்மை உண்டு.
துலாம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். வரவு திருப்தி தரும்.
விருச்சிகம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
தனுசு
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தனித்து இயங்க வேண்டுமென்று நினைப்பீர்கள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி கிடைக்கும்.
மகரம்
மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். பண வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
கும்பம்
புதிய பாதை புலப்படும் நாள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்
உடன் இருப்பவர்களால் நன்மை ஏற்படும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்தி வந்து சேரும். இடம் வாங்குவது சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.
- மகர ராசியினரே பொதுவாக ராசியையோ ராசி அதிபதியையோ எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது மிக நல்லது.
- முதலீட்டாளர்கள் தொழில் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
நியாயவாதியான தனுசு ராசியினரே
ராசி அதிபதி குரு வக்க நிவர்த்தி அடைவதால் இரக்கமும் தயாள குணமும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும்,தெய்வ நம்பிக்கையும் ஏற்படும்.மனதில் தெம்பு , தைரியம் ஏற்படும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள், எதிரிகள் தொல்லைகளை தீரப்போகிறது. அடமான நகைகள் மற்றும் சொத்துக்களை மீட்கும் சந்தர்ப்பம் உருவாகும்.வாழ்க்கை, தொழில் முன்னேற்றத்திற்கு புதிய கடன் கிடைக்கும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிட்டும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பையை தூக்கிக் கொண்டு கோவில் குலம் என்று சுற்ற ஆரம்பித்து விடுவீர்கள். ஆன்மீக சொற்பொழிவு, பட்டி மன்றங்களில் கலந்து கொள்வீர்கள். தான தர்மங்கள் செய்து மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் மிகும். தர்ம ஸ்தாபனங்கள் நிர்ணயம் செய்வதில் ஆர்வம் பிறக்கும். நதிகளில், கடல்களில் புனித நீராடல் செய்து பெரும் பாக்கிய பலன்களை அதிகரிப்பீர்கள். மகான்களை தரிசிப்பது, சித்தர் ஜீவ சமாதிகளை போன்ற புண்ணிய வாய்ப்புகள் தேடி வரும். புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து மனம் ஆனந்தம் அடையும்.
சொத்து, வியாபாரத்தை பிரித்து பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு நான் ஏன் பிறந்தேன்? .என் பிறப்பின் நோக்கம் என்ன? என் முன்னோர்கள் எனக்கு பாவம் சேர்த்துச் சென்றனரா? புண்ணியம் சேர்த்தவர்களா? என் சந்ததிகளை முன்னோர்களின் பாவத்திலிருந்து காப்பாற்ற முடியுமா? போன்ற கேள்விக்கு விடை காண முயல்வீர்கள். குல தெய்வம் , பூர்வீகம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்ள கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தந்தையின் உடல் நலம் சிறக்கும். ஆயுள் பலம் அதிகரிக்கும். நோயின் தன்மை புரியும். பூர்வீக தொழிலால் மிகப் பெரிய கெளரவம் கிடைக்கும்.
சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள். மாணவ, மாணவிகள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வார்கள். சிலர் மதம் மாறுவார்கள். இல் வாழ்க்கையில் விருப்பக் குறைவு ஏற்படும். தூக்கமின்மை இருக்கும்.ஆன்மீக நாட்டம் கூடும். திருமணத் தடை அகலும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். சிலருக்கு கலப்புத் திருமணம் நடைபெறும். வசதியான நல்ல வாழ்க்கைத் துணை.அமையும். மறுமண யோகம் உள்ளது.கண், கண் புரை தொடர்பான நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை பலன் தரும். எதிரிகள் தொல்லை இருந்தாலும் பாதிப்பு எதிரிக்கே ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தந்தையுடன் நல்ல புரிதல் ஏற்படும். பல வருடமாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். அந்நிய தேசத்தில் வாழ விருப்பம் அதிகரிக்கும்.
குருமங்கள யோகம்
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் உங்களின் ராசியின் அதிபதியான குரு பகவானை 5,12ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார்கள். பொருளாதார முன்னேற்றம் பெருகும் வருடம். பல வருடங்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு உருவாகும். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை கூடும். வாக்கால் வருமானம் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.தாய் தந்தையின் பிறந்த குலத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். தாயாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க முயல்வீர்கள். வாகனம், நகைகள், விதவிதமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.நிலம் விற்றல் , வாங்குதல் போன்ற பணிகள் சிறு தடை தாமதத்துடன் நடக்கும். நிலம் தோட்டம் வாங்கி விவசாயத்தில் புதுமையை புகுத்தும் எண்ணம் மிகும். விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு தேடி வரும். பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.
பொருளாதாரம்
பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பாரத தனவரவினால் ஏற்படும் மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும்.விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். வீடு, வாகனம் ஆடம்பர பொருள் சேரும். இன்சூரன்ஸ், ஏலச் சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை கைக்கு வரும்.பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். அநாவசிய ஆடம்பர செலவு செய்விட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள்.
முதலீட்டாளர்கள்
தொழில் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.புதிய தொழில் ஒப்பந்தம் வந்து கொண்டே இருக்கும்.சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.பெரிய தொகையை கடன் பெற்று அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நாளை வரப் போகும் வருமானத்திற்குரிய செலவு தொகை இன்றே செலவாகிவிடும். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது.தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். தொழில் கூட்டாளிகளால் அவதி ஏற்படும்.புதிய தொழில் கூட்டாளிகளை சேர்க்க கூடாது. கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.மன சஞ்சலம் மிகுயாக இருக்கும். மற்றபடி சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். மன திருப்தி கிடைக்கும். மேலதிகாரிளிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். புதிய வேலைக்கு முயற்சி பலன் தரும் நல்ல வேலை கிடைக்கும். அலுவ லகத்தில் உங்களுக்கு தனி மதிப்பு மரியாதை உயரும்.
அரசியல்வாதிகள்
தசாபுத்தி சாதகமற்ற அரசியல் வாதிகள் களத்தில் இறங்கும் முன்பு சுய ஜாதகத்தை சரிபார்க்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு எதிரிகளை வெல்ல பலம் பெற வேண்டும். ஒரு சிலருக்கு உஷ்ணம் தொடர்பான நோயால் குறுகிய கால பாதிப்பு இருக்கும். இது பொற்காலம். எனினும் கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிகமாக போராட நேரும். அசட்டுதனமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் நாளில் வருந்தும் நிலை ஏற்படும்.
பெண்கள்
பெண்களுக்கு மிக சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும்.தந்தை வர்க்கத்தால் பல நன்மைகள் ஏற்படும்.விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே சுமூகமான உறவு நீடிக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும்.எதிர்காலத் தேவைக்கான திட்டமிடுதல் சாதகமாகும்.நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது. பொன், பொருள் சேரும்.உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலம்.
செவ்வாய் சனி சேர்க்கை
ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 5,12ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்கள். எதிர்காலத்தை பற்றிய பயஉணர்வு மிகுதியாகும்.சிலர் பரிகாரம் என்ற மூட நம்பிக்கையில் ஈடுபடுவார்கள். ஓடி ஓடி ஒளிந்தாலும் பிரச்சனை தேடித்தேடி வரும். தடை தாமதங்களை அதிகம் சந்திக்கும் காலம். கர்ம வினை அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தெரியும் .ஆயுள் பலம் உண்டு.வேற்று மதத்தினர் அல்லது புரியாத பாஷை அதிகம் பேசும் இடத்தில் குடியிருக்கும் நிலை ஏற்படும். மூத்த சகோதரர் உங்களுக்கு விட்டு கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஒப்புதலுடன் பாகப்பிரிவினை நடக்கும். அவர்கள் மூலம் லாபம், சொத்துக்கள் கிடைக்கலாம்.வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முயற்சிகள் வெற்றி தரும். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசாபுத்தி இல்லாதவர்களுக்கு புனர் பூ தோஷம் ஏற்பட்டு ஜான் ஏறினால் முழம் சறுக்கும். மனத்தில் வெறுமை குடிபுகும். இது என்ன வாழ்க்கை என சந்யாநிசியாக போகி விடலாம் என்ற எண்ணம் ஏற்படும். நன்றி கெட்ட குடும்ப உறவுகளை நினைத்து மனம் வெதும்பும்.
பரிகாரம்
உடல் ஊனமுற்றோருக்கு கருப்பு கம்பளி தானம் வழங்க தொழிலில் ஸ்திர தன்மை உண்டாகி நல்ல லாபம் கிடைக்கும்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மகர ராசியினரே
பொதுவாக ராசியையோ ராசி அதிபதியையோ எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது மிக நல்லது.இந்த வகையில் பங்குனி மாதம் முழுவதும் ராசிக்கு எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை. இது மகர ராசிக்கு திறமையை மெருகேற்றி கொடுக்கும் அமைப்பாகும்.கோட்ச்சார சந்திரன் மட்டும் ராசியை கடப்பார் அல்லது பார்ப்பார். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும்.விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அலைச்சல் மிகுந்த பயணங்கள், பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு சிறிய தடை தாமதங்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் உபாதைகள் இருந்தால் உரிய சிகிச்சையை பெற வேண்டும்.மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.வாடிக்கையாளர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும்.
பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீர்க்க முயற்சிப்பீர்கள்.நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகலாம். பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல் பேரன் பேத்தி எடுத்து அடுத்த தலைமுறையை உருவாக்குதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். நண்பர்கள் மூலமாக வீண் அலைச்சலும் காரியத்தடையும் உண்டாகும். தொழில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும். திருமணத் தடை அகலும். தடைபட்ட சுப காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற காரணங்களால் தந்தை மகன் உறவிலும் விரிசல் ஏற்பட்டு குடும்பம் பிரியும். தம்பதிகளின் உறவில் அந்நோன்யம் நீடிக்கும். அனைத்து விதமான நல்ல முயற்சிகளும் பலிதமாகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பல மடங்கு ஆதாயம் தரும். உயில் எழுதுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். சொத்துக்களின் விற்பனை சாதகமாகும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும்.கூட்டுத் தொழில் புரிபவர்கள் பொறுமை, நிதானத்துடன் இருக்க வேண்டும். தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.மாணவர்கள் நல்ல நண்பர்களுடம் நட்பு வைக்க வேண்டும். கூடா நட்பு கேடில் முடிந்து கெட்ட பெயர் எடுத்து தரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
குருமங்கள யோகம்
மகர ராசிக்கு 3 ,12 ஆம் அதிபதியான குரு பகவானை 4,11ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையினால் பார்ப்பது குருமங்கள யோகமாகும்.சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். சொத்து வாங்குதல் விற்றல் போன்றவற்றின் மூலம் அபரிமிதமான லாபம் கிடைக்கும் ரியல் எஸ்டேட்,கட்டுமான துறையில் பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம் உயரும்.புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.வெளிநாட்டு வேலைக்கான முயற்சி சித்திக்கும்.சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும். ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் அதிகமாகும்.தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து யோகா, மெடிடேசன் , உடற்பயிற்சி, தியானம் போன்ற விஷயங்களில் மனதை செலுத்த வேண்டும்.
பொருளாதாரம்
தேவைக்கு மிகுதியாகவே வருமானம் கிடைக்கும்.கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏதாவது ஒரு வழியில் ரொட்டேஷன் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள்.வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.கால்நடை வளர்ப்பில் ஆர்வம் மிகும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டை விரிவுபடுத்தவும் பராமரிப்பு செலவு மிகும். ஒரு சிலர் வசதி அதிகமான நல்லவாடகை வீட்டிற்கு செல்ல நேரும்.விவசாயிகளுக்கு கால் நடைகள் மூலமாகவும் அதிக விளைச்சலாலும் வருமானம் அதிகரிக்கும் காலம்.சிலருக்கு வீடு வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும்.அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் சூழல் உருவாகும்.திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமாகும். தேவையில்லாத சிந்தனையில் மனதை சிதற விடக் கூடாது.எல்லாம் எனக்கு தெரியும் என்று நினைத்து செயல்பட்டு எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த நீங்கள் உலக மாற்றத்தை கண்டு புதிய வழிகளை தேடி சிந்திப்பீர்கள். இள வயது மகர ராசி வாலிபர்கள் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி பெற்றோர், உற்றார் உறவினரிடம் கெட்ட பெயர் எடுப்பீர்கள். சிறிய செயலுக்கு அதிக முயற்சியும் உழைப்பும் தேவைப்படும்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சனிபகவானுடன் 4,11ம் அதிபதியான செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.முகத்தில் கவலை, துக்கம் நிறைந்து இருக்கும். தோற்றப் பொலிவு குறையும். முடி நரைக்கும்.முகத்தில் கரும்புள்ளிகள் தழும்புகள் தோன்றும்.மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். எனக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள். அதிர்ஷ்டம் என்னை தேடி வருமா? என அதிர்ஷ்டத்தை தேடி காலம் தள்ளுவீர்கள். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத முன்னோர் சொத்துக்காக இருக்கும் பொன், பொருளையும் ஏமாந்து பிறருக்கு கொடுத்து பின்னர் அதற்காக வருந்துவீர்கள்.உடல் சோர்வு, கை, கால், மூட்டு வலி மிகுதியாகும்.ஜனன கால ஜாதகத்தில் உங்களின் தசா புத்தி சாதகமாக இருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது.தவறான சிந்தனையில் மனதை அலை பாய விடாமல் இருந்தால் மட்டுமே கவுரவத்தை கட்டிக் காக்க முடியும். வாழ்க்கை என்பது கண்ணாடி பாத்திரம் அதை கவனமாக கையாள வேண்டும்.
பரிகாரம்
பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது நல்லது.
உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே
ராசியில் உள்ள ராகு பகவானுக்கு வக்ர நிவர்த்தி பெற்ற குருவின் ஒன்பதாம் பார்வை உள்ளது. குருபகவானின் அருட் கருணையால் அனைத்து செயல்களும் சாதகமாக முடியும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கூடும். விரும்பியதை மன பலத்தால் அடைவீர்கள். தடைகள் அகன்று எதிர்பார்த்த அனைத்து சுப பலன்களையும் அடையமுடியும். நல்ல செய்திகள் தேடி வரப்போகிறது. முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற தடைபட்ட சுப நிகழ்வுகள் நடக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள் குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது.
பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மனதளவில் உற்சாகமாகவும், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். மனத் தடுமாற்றம் பய உணர்வு அகலும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.புதிய சொத்துக்கள் வாகனங்கள் சேரும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். தாயின் மூலம் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளின் மனக்கவலை அகலும். கடன் தொல்லைக் கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் தொடர்பான இழுபறியான விசயங்கள் சித்திக்கும். அரசின் ஆதரவு மானியம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். முக்கிய செயல்களில் நன்மை தீமை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. போதிய பண வரவு இருந்தாலும் எதிர்பாராத செலவும் இருக்கும். அனைத்து துறையினருக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வு, திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். பங்குச் சந்தை ஆதாயம் பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். பூர்வீகச் சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம் இது. பிள்ளைகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும். மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர் பாலினத்தவரிடம் தேவையறிந்து பழகவும். காதல் விவகாரங்கள் வம்பு, வழக்கில் முடியும்.வேற்று மதத்தவரால் இன்னல்கள் ஏற்படும். சிலர் மதம் மாறவும் செய்யலாம் . காதல் கலப்பு திருமணம் நடைபெறும். வெளி நபர்களால் குடும்பத்தில் குழப்பம் வரலாம் என்பதால் மனதை கட்டுப்படுத்தி தெரியாதவர்களிடம் பழகுவதை தவிர்த்தல் நலம்.
குருமங்கள யோகம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினை 3,10ம் அதிபதியான செவ்வாய் பார்ப்பது குருமங்கள யோகமாகும்.மன சஞ்சல மிகுதியால் கட்டுப்பாடு இல்லாமல் அலைந்த மனம் கட்டுப்படும். எவை நல்லவை, எவை தீயவை என மனதால் பகுக்க முடியும். உங்களை ஏளனம் பேசியவர்கள் எல்லாம் புகழ்வார்கள். தன் நம்பிக்கையும் தைரியமும் மிகுதியாகும்.தோற்றப் பொலிவு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் தேவையில்லாத மன சஞ்சலம் உருவாகலாம்.உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி அடையும். வீட்டில் சுபமங்கள காரியங்களால் தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பொருளாதாரம்
பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமங்களை சந்திக்க வேண்டும்.உண்ண உறங்க நேரம் இல்லாமல் அதிகம் உழைக்க நேரும்.கண் நோய் வரும். கண்களில் சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். கண்ணாடி அணிய நேரும். நிம்மதியான தூக்கம் இருக்காது. அந்நிய மொழிப் புலமை ஏற்படும். அந்திய மொழிய கற்றுக் கொடுப்பதால் வருமானம் வரும். பணப்புழக்கம்அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம், பண வரவுகள் ஏற்படும். அதிர்ஷ்டம், பண வரவு உங்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் , வேலைப் பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு மிகும். உங்களை விட தகுதி குறைந்த நபருக்கு பதவி உயர்வு கொடுத்து கவுரவிப்பது உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும். பதவி உயர்வு தடைபடும். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் மெமோ வாங்க நேரும். குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை செய்ய நேரும் உயர் அதிகாரிகளுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படும். இதற்காக மனம் வருந்தி வேலையை விட்டால் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு .வேலையில் விரும்பிய மாற்றம் கிடைக்கும்.அரசு உத்தியோக வாய்ப்பு சித்திக்கும். எதிரிகள் தாமே விலகுவார்கள்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சனியுடன் 3,10 அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.வார்த்தையில் நிதானம் தேவை. தீயினால் சுட்ட புண் ஆறும். நாவினால் சுட்ட வடு ஆறாது. நீங்கள் விட்ட வார்த்தையே அம்பாக மாறி உங்களை பதம் பார்க்கும். அதே நேரத்தில் வெளுத்தது எல்லாம் பால் என எல்லோரையும் நம்பி திறந்த மனதாக உங்களின் மனக் குமுறலை கொட்டக் கூடாது. உங்கள் முன் நல்லவர் போல் ஆமாம் போட்டு உங்களுக்கு பின்னால் நீங்கள் பேசியதை திரித்து பேசி குற்றவாளி கூண்டில் ஏற்றிவிடுவார்கள். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி திட்டி சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக்குவார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வு மிகுதியாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். குடும்ப உறுப்பினர்கள் உண்மையில் உங்களிடம் பாசம் காட்டினால் பாசங்கு செய்வது போன்ற மன உணர்வு தோன்றும். பெற்றோரே உலகம் என்று நம்பி வாழ்ந்த உங்களுக்கு பெற்றோரே உரிய நேரத்தில் பாசம் காட்டாமல் இருப்பார்கள்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் சக்ரத்தாழ்வார் நரசிம்மர் வழிபாடு செய்ய மன நிம்மதி தேடி வரும்.
கருணை உள்ளம் கொண்ட மீன ராசியினரே
ராசியில் சூரியன், செவ்வாய், சனி, புதன் சேர்க்கை உள்ளது. வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் வரப்போகிறது.மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சோதனைகள் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். பல விதமான மாற்றங்கள் , ஏற்றங்கள் ஏற்படும். விருப்பமும் கனவுகளும் நிறைவேறும். குடும்ப உறவுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு ஆனந்தமாக இருப்பீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். தடைபட்ட சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் குத்தகை பணம் கிடைக்கும். சகோதர வழியில் நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து ஆதாயம் ஏற்படும்.
வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவரின் தசாபுத்திக்கு ஏற்ப இடமாற்றம் ஏற்படும். தகவல் தொடர்புகள் மூலம் ஆதாயம் ஏற்படும். தொலைந்த கை மறதியாக வைத்த ஆவணங்கள், முக்கிய பொருட்கள் கிடைக்கும்.செய்தொழில் விருத்தியாகும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும். சிலர் முன்னோர்கள் செய்த தொழிலையே சீர்திருத்தி செய்யலாம். ஜென்ம ராசியில் சனி என்பதால் மிகப் பெரிய முதலீட்டில் மிகக் குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை பரிசோதித்து அதில் உள்ள தசாபுத்தி மற்றும் கோட்ச்சார கிரகங்களின் சாதக பாதகம் அறிந்து தொழிலை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.
தசாபுத்தி சரியாக இல்லாத போது தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள்.குடும்பத்துடன் விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருள் சேரும்.சொத்துக்கள் சேரும்.மனக் கவலைகள் அகலும்.உங்க ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்பார்கள். சிலர் உயில் எழுதலாம் அல்லது குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும்.நோய்,நொடிகள் நிவர்த்தியாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஒரு சிலர் வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் செய்ய நேரும். மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். நீண்ட காலமாக தடைபட்ட அனைத்து மங்கல நிகழ்வுகளும் நடைபெறும்.பாக்கிய பலன்களும், புண்ணிய பலமும் கூடும். குல தெய்வ, குடும்ப தெய்வ, முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.தடைபட்ட திருமணம் நடக்கும். காதல் கலப்புத் திருமணம் அதிகரிக்கும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு இரண்டாம் திருமணத்திற்கு வரன் அமைந்து திருமணம் நடைபெறும். 40 வயதைக் கடந்தும் திருமணமாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.
குருமங்கள யோகம்
மீன ராசிக்கு ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவானுக்கு செவ்வாயின் 4ம் பார்வை உள்ளது. இது குருமங்கள யோகமாகும்.குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக கஷ்டத்தில் தவித்த மன ராசியினருக்கு பங்குனி மாதம் நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய மாதமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மனக் கட்டுப்பாடு கூடும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். உடல் நலக் கோளாறுகள் சீராகும்.இறை வழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும். சொத்துக்களினால் வருமானம் உண்டு. தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.தொலைத்து போன, கை மறதியாக வைத்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் திரும்பவும் கிடைக்கும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும்.வர வேண்டிய பணம்வரும்.
பொருளாதாரம்
ஜென்ம சனி காலத்தில் தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு இனி நிம்மதியான தூக்கம் வரும். இழந்த பணத்தை திரும்ப பெறப்போகிறீர்கள். அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டு.பண விசயத்தில் நிலவிய கெட்ட பெயர்கள் நீங்கப்போகிறது. எவ்வளவு வருமானம் வந்தாலும் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். விரயத்தை சுப செலவுகளான சொத்து, நகை வாங்கவும், குடும்பத்திற்கு சுப நிகழ்வு நடத்தவும் பயன்படுத்தினால் சிறப்பான வெற்றிகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள்
வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்த வேற்றுமை மறையும்.ஊடகங்களில் பணி புரிவர்களின் தனித்திறமை வெளிப்படும்.அரசு போட்டி தேர்வு எழுதியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை இருக்கும். வேலையை தக்க வைக்க அடிமட்ட ஊழியர்களை இது பாதிக்காது.அரசுப் பணியாளர்களின் உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் திருப்பம் ஏற்படும்.
பெண்கள்
சுய ஜாதக தோஷத்தாலும் கோட்சார கிரகங்களாலும் தடைபட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் இனிதே நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முழு தைரியத்தோடு வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள்.புதிய அணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவனுக்கோ, மனைவிக்கோ திடீர் அதிர்ஷ்டமாக தாத்தா பாட்டி வீட்டுச் சொத்து பெரும் பணம் போன்றவை கிடைக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, புதையல், உயில் மூலம் ஆதாயம் கிடைக்கலாம்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ஜென்ம ராசியில் உள்ள சனியுடன் 2,9ம் அதிபதியான செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். குடும்பத்தினரின் அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். முக்கிய வழக்குகளை ஒத்தி வைக்கவும். பூர்வீகத்தை விட்டு தொழில், உத்தியோகத்திற்கு வெளியூர் சென்றவர்கள் நல்ல பொருளாதாரத்துடன் பூர்வீகத்தில் வந்து செட்டிலாவார்கள்.சிலருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. அதீத வேலை பளுவினால் சோர்வு, உடல் ரீதியான சில பாதிப்புகள் ஏற்படலாம். யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். கை விட்டு போன சொத்துக்கள் வீடு தேடி வர வாய்ப்புள்ளது. விற்று விட்ட பூர்வீக சொத்துக்களை திரும்ப வாங்க முயற்சி செய்வீர்கள்.
பரிகாரம்
பங்குனி உத்திர நாளில் இளநீர் அபிசேகம் செய்து குல தெய்வத்தை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- கன்னி ராசி அதிபதியான புதன் மாதத் துவக்கத்தில் வக்ரமாக 6ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.
- துலாம் ராசியினரே மாத துவக்கத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரன் பங்குனி 11ம் நாள் மேஷ ராசிக்கு செல்கிறார்.
ஆளுமை தன்மை நிறைந்த சிம்ம ராசியினரே
பங்குனி மாதத்தில் உங்களின் ராசி அதிபதி சூரியன் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் மற்றும் புதனுடன் சஞ்சரிப்பார்.தைரியத்துடன் வீரமும் அழியாப் புகழும் பெருமையையும் அதிகமாகும்.தெய்வ பலம் மனித பலத்தை விட உயர்ந்தது என்பதை உணர்வீர்கள்.ஒரு சிலர் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும்.பல வருடங்களாக நீங்கள் செய்த பிரார்த்தனை, வழிபாடுகள் பலன் தரும். பள்ளிக்கு சென்று கற்றதை விட வெளி வட்டாரத்தில் அனுபவத்தில் கற்ற பாடம் உங்களுடன் பயணம் செய்யும். காலம் உங்களுக்கு பல வித அனுபவங்களை பாடமாக நடத்தும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும்.
அந்நிய மொழி, பாஷை பேசுபவர்களின் நட்பு கிடைக்கும், அந்நிய மொழி பேசுபவர்களிடையே வாழும் நிலை ஏற்படும். சிலருக்கு மத நம்பிக்கை குறையும். சிலர் அதீத மத நம்பிக்கையால் சட்ட சிக்கலை சந்திக்க நேரும்.பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.நியாயவாதியான நீங்கள் தவறு செய்தவர்களின் குறையை சுட்டி காட்டி அதனால் பிரச்சனைகள் உருவாகும். தாய், தந்தையிடம் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் மன வேதனை அதிகமாகும். சில வயதான பெற்றோர்களுக்கு தாங்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு விடுவோமோ என்ற பய உணர்வு இருக்கும்.
எந்த செயலிலும் நாட்டம் இல்லாமல் மனதில் வெறுமை வாழ்வில் பிடிப்பு இல்லாத நிலை, மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். பிதுர் வழி சொத்துக்கள் தொடர்பான மனக்குழப்பம் சஞ்சலம் இருக்கும். ஒரு சிலருக்கு ஆசிரியர், பெற்றோர்களின் நல்லாசியுடன் வெளிநாட்டிற்கு சென்று உயர் கல்வி கற்கும் வாய்ப்பு உருவாகும். உயர் கல்விக்கு முயற்சி செய்யும் மாணவ, மாணவிகளுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.பேச்சில் நிதானமும் பொறு மையும் அவசியம்.
முன் கோபத்தில் பகைமை உருவாகும் என்பதால் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காரியத்தடையால் மன சஞ்சலம் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கி யம் குறையும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.ஜனன கால ஜாதகத்தில் பாதகமான தசை , புத்தி நடந்தால் சுகவீனத்தால் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரலாம்.சிலர் ஆன்மீகத்தை பயன்படுத்தி பொருள் சம்பாதிக்க முயலலாம்.
குருமங்கள யோகம்
சிம்ம ராசிக்கு 5,8-ம் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரை 4,9ம் அதிபதி ஆன செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார்.தொழில் சிறப்பாக நடைபெறும். தொழில் ரீதியான வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பெரிய லாபம் எதுவும் தங்காது. கூட்டம் கூடும் கல்லா கலை கட்டாது. அதிக பணப் புழக்கம் இருக்கும். கையில் பணம் தங்காது.தொழில் போட்டிகளை சமாளிக்க அதிக சிரமங்களை சந்திக்க நேரும். உங்கள் இன, மத இயக்கங்களின் முதன்மை பதவியும், கௌரவமும் தேடி வரும். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகு முறை எல்லோரிடமும் நன்மதிப்பை பெற்றுத் தரும். குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். அவ்வப்போது குழந்தைகளைப் பற்றிய மன சஞ்சலமும் மனதை வாட்டத் தான் செய்யும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கி தவித்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சிம்ம ராசியினர் புதிய காதல் வலையில் மாட்டாமல் மனதை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும். பங்குச் சந்தையால் பெரும் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வாழ்ந்தவர்கள் பூர்வீகம் வந்து செல்வார்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணத்தின் சிறு பகுதி உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, என எதிர்பாராத பணம் உங்களை மகிழ்விக்கும்.
பொருளாதாரம்
மனக் குழப்பம் விலகி தெளிவான மன நிலையுடன் சிந்தித்து செயல்படுவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். பணப்புழக்கம்அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வார்கள்.லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தையில் எதிர்பாராத திடீர் மாற்றம் உங்களை நிலை தடுமாற வைக்கும். சிலர் கடன் பெற்று வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வார்கள்.குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். அழகு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.
முதலீட்டாளர்கள்
திருப்புமுனையான வருடம்.தொழில் முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.அஷ்டமச் சனி உள்ளதால் எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.
அஷ்டமச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் லாப இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது.புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனையை கொடுத்து பின் வெற்றியை தரும். தொழிலுக்கு அரசு அதிகாரிகளின் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். பெரிய தொகையை கடனாக பெற்று அதன் மூலம் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் 'தனி வருமானம் ' மகிழ்சியை தரும். தொழிலாளர்களுக்கு குறைந்த வேலைக்கு நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். செலவுகளை கட்டுக்குள் வைத்து சேமிப்பை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். நேர்மைவாதியான நீங்கள் எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் மிகும்.அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. அடிக்கடி கட்சி மாற்றம் செய்வதையும் வம்பு, வழக்கைத் தவிர்த்தல் நல்லது. உலகத்திற்கும்,கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும்.உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். அரசியலில் புகழையும் செல்வாக்கையும் பெற்று தனித் தன்மையுடன் திகழ்வீர்கள். எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். லாப ஸ்தான குரு பகவானால் உங்களுக்கு மதிப்பு மரியாதை உயரும் திடீர் லாபம் கிட்டும்.
பெண்கள்
புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும்.தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சில வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாயின் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். மாதவிடாய் கோளாறு சீராகும்.திருமணத்திற்கு இந்த மாதம் நாள் குறிக்கலாம். பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனியுடன்4,9ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வாட்டி எடுக்கும். ஆண்களுக்கு சிறுநீரக பிரச்சனையும் பெண்களுக்கு கருப்பை பிரச்சனையும் உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நிலவும். பெண் களுக்கு நோய் தாக்கம் அதிகம் இருக்கும். மிகக் குறிப்பாக கருப்பை தொடர்பான நோய் ஏற்படும். தவறான உணவு பழக்கம் காரணமாக இளம் பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது கருத்தரிக்கும் தன்மை குறையும். பெண்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். காசோலை , பண மோசடி வழக்கு , விவாகரத்து வழக்கு என வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படும். தங்க நகைகள் என்று போலி நகைகள் வாங்கி ஏமாறுவீர்கள். அழகு , ஆடம்பர பொருட்களை நம்பி ஏமாற்றம் அடைவீர்கள். விரயங்கள் அதிகரிக்கும். சிலர் மனத் தாங்கல் அதிகரிப்பால் தலை மறைவு வாழ்க்கை வாழலாம். இனம் புரியாத வெறுமையும் தூக்கமின்மையும் ஏற்படலாம். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும்.
பரிகாரம்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய ஹ்ருதயம் படிக்க வேண்டும் அல்லது ஒலிக்க செய்து கேட்க வேண்டும். சனிக்கிழமை அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வழிபடவும்.
அதிபுத்திசாலியான கன்னி ராசியினரே
கன்னி ராசி அதிபதியான புதன் மாதத் துவக்கத்தில் வக்ரமாக 6ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். மாத இறுதியில் பங்குனி 27ல் ராசிக்கு ஏழாமிடம் சென்று சூரியன், செவ்வாய், சனியுடன் இணைகிறார்.புதிய சிந்தனைகள் உதயமாகும். முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்வீர்கள். குல இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை சிறப்பாக வழிநடத்தும்.சுப செலவுகள் அதிகரிக்கும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.குடும்ப உறவுகளின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களின் அன்பு, ஆதரவு, ஆசீர்வாதம் கிடைக்கும்.
பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்க முடியும். சிலர் கட்டிய வீட்டில் ,சொத்துக்களில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்துவார்கள். புதிதாக வாங்கிய சொத்துக்கள் மீது வில்லங்கம் ஏற்படும். மாணவர்கள் கல்வி நாட்டத்தை அதிகரிக்க வேண்டும். சிலர் பள்ளி மாறலாம். போரிங் போடலாம். விவசாய நிலத்தில் கிணறு தோண்டலாம்.உடல் ஆரோக்கியத்தை சீராக்க வைத்தியச் செலவு செய்ய நேரும். பஞ்சம ஸ்தான ராகுவின் காலம் என்பதால் சுய ஜாதகம் அறிந்து புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக வெளியூர் செல்லலாம்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். சிறிய இடப்பெயர்ச்சி செய்ய நேரும். குடியிருக்கும் வீடு,தொழில் நடத்துமிடம் என ஏதாவது ஒரு இடமாற்றம் செய்ய நேரும்.வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்கள் நான்கைந்து மாதங்கள் பூர்வீகம் வந்து செல்லலாம்.பூர்வீகத்தில் இருப்பவர்கள் வேலை விஷயமாக குறுகிய காலம் வெளிநாடு சென்று வரலாம்.பல்வேறு சுப பலன்கள் தேடி வந்து கொண்டே இருக்கும். முறையான திட்டமிடல் மன சஞ்ச லத்தை குறைக்கும். ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும். அலைச்சலும் மந்த தன்மையும் இருக்கும். இயன்றவரை வம்பு வழக்கு சண்டை, சச்சரவுகளை விட்டு ஒதுங்க வேண்டும்.
வழக்குகளில் உங்க ளுக்கு சாதகமாக தீர்ப்பு வராது. ரேஸ் சூதாட்டம் லாட்டரி போன்றவைகள் மீள முடியாத இழப்பில் கொண்டு நிறுத்தும்.உடன் பிறந்தவர்களின் வெறுப்பை சம்பா திக்காமல் விட்டு கொடுத்து செல்லவும்.உற்றார் உறவினரிடம் பகையை வளர்க்க கூடாது. சிலருக்கு திருமணம் தடைபடும். திருமணம் நடந்தவர்கள் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்வார்கள். அல்லது கல்யாணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பற்று குறைந்து இல்லற சந்நியாசியாக வாழ்வார்கள்.
குருமங்கள யோகம்
கன்னி ராசிக்கு 4,7ம் அதிபதியான குரு பகவான் தற்போது தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரை 3,8ம் அதிபதியான செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார். வெகு சுமரான காலம். நல்லது செய்தால் கூட கெட்டதாகவே முடியும்.மாமியார் மருமகள் பிரச்சனை மிகும். புகுந்த வீட்டாருடன் இணக்க மற்ற சூழல் ஏற்படும். நீங்கள் செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவிக்கும் காலம். பெற்றோருடன் கருத்து வேறுபாட்டால் தனிக் குடித்தனம் செல்வீர்கள். சிலருக்கு கண் பார்வை குறைவின் காரணமாக கண்ணாடி அணிவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்தது வாங்க கூடாது.சொத்து வாங்குதல் , விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. கணப்பொழுதில் தவறான பத்திரப் பதிவு , தவறான விலை நிர்ணயம், பூமி தோஷம் உள்ள இடம் , விருத்தியில்லாத வீடு போன்ற வில்லங்கத்தில் மாட்டி மீள முடியாத விரயத்தை தந்து விடும். குடும்ப செலவு, மருத்துவ செலவு என்று செலவை சமாளித்தே மனம் விரக்தி அடையும். சிக்னம், சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் பெற நேரும். உங்களுக்கு எதிரி என்று ஒருவர் வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியை அதிகரிக்கும்.மன சஞ்சலம் மிகுதியான காலம் என்பதால் ஸ்ரீ ராம ஜெயம் ஜெபிக்க வேண்டும்.
பொருளாதாரம்
உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். தங்கம் இல்லாதவர்களுக்கும் நகை சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. இதுவரை சொத்து இல்லாதவர்களுக்கு சொத்து கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் செயல்பாட்டினை மாற்றி அகலக் கால் வைக்காமல் இருப்பதை வைத்து நிம்மதி அடைய முயற்சி செய்ய வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தொல்லைகள் படிப்படியாக குறையும். சொத்துக்களை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வார்கள். காவல் துறையினரின் உதவியால்மீ ட்டு விடுவீர்கள். விவசாயிகள் அதிக கவனத்துடன் பணிகளில் ஈடுபட்டால் நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.
முதலீட்டாளர்கள்
பல தொழில் ஞானம் உண்டு. இவர்களின் தொழில் ஞானம் பிறருக்கு பயன்படும். சுய தேவைக்கு பயன்படாது .உங்களின் திறமைகளை உங்களைச் சார்ந்தவர்கள் பயன்படுத்துவார்கள்.வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும் அல்லது தொழிலாளிகள் மூலம் வழக்கை சந்திக்க நேரும். தொழிற்சாலைகள், சுய தொழில் நடத்துபவர்கள் தங்கள் பணியாளர்களின் செயலில் மாறுபாடு கண்டு மன வேதனை ஏற்படும். எவ்வளவு செய்தாலும் தொழிலாளர்களிடையே அதிருப்தி நிலவும் என்பதால் முன்பை விட முழு கவனத்துடன் அனைத்து பணி களிலும் ஈடுபட வேண்டும். முன்னோர்கள் வழி நோய் தாக்கம் உரு வாகலாம்.
உத்தியோ கஸ்தர்கள்
சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு, மன பாரம் குறையும். வேலைக்கான நேர்காணலில் வெற்றி உறுதி.வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் வாய்ப்பு கிடைத்தாலும் குடும்ப உறவுகளை பிரிய விருப்பமின்றி கிடைத்த வாய்ப்பை வற விடுவார்கள்.சில திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கடனால் வம்பு, வழக்கால் பாதிப்பு அடைவார்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது அல்லது ஆதாயம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும்.
அரசியல்வாதிகள்
நாணயமானவர்கள் என்று பெயர் எடுப்பீர்கள். புதிய திட்டத்துடன் சளைக்காமல் செயல் ஆற்றுவீர்கள். கள்ளம், கபடம் இல்லாமல் வெள்ளை மனதுடன் கடமையாற்றுவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். எடுத்த சில செயல்கள் சவ்வாக இழுத்துக் கொண்டே போகும். அதனால் குழப்பமான மனநிலை நிலவும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும்.ஒரு சிலருக்கு கவரவப் பதவிகள் அதிகாரப் பதவிகள் தேடி வரும்.இது வரை பணம் சம்பாதிக்கும் ஆர்வம் மிகுந்த அரசியல்வாதிகள் கூட தியாக மனப்பான்மை மிகுந்தவர்களாக மாறுவார்கள். உங்களின் விரோதிகள் உங்களை வம்பில் மாட்ட தயராக இருக்கிறார்கள் என்பதையும் மறக்க கூடாது. அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து அசிங்கப் படாமல் பேச்சை குறைத்து இறை வழிபாட்டில் நாட்டம் செலுத்த வேண்டும்.
பெண்கள்
கல்வி அறிவு கூடும். கற்ற கல்வியால் பயன் உண்டாகும். ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்வீர்கள். அழகு, ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.மனித நேயமும் தொழில் நியாயமும் நோக்கமாக இருக்கும்.தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்கள்ந டக்கும். பணியாளர்களை அனுசரித்து வேலை வாங்குவீர்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இருக்கும். கணவனின் அன்பு, அனுசரனைக்காக ஏங்கிய கன்னி ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இதுவரை புரிந்து கொள்ளாத உங்களின் கணவர் உங்களை புரிந்து கொண்டு உங்கள் மனதிற்கேற்ற மணாளனாக மாறுவார். கூட்டுக் குடும்ப த்தில் இருக்கும் பெண்கள் மாமியாரால் புகழப்படுவீர்கள். சுருக்கமாக எந்த சூழ்நிலையிலும் உங்க ளையும், உங்களைச் சார்ந்த வர்களையும் காப்பாற்றிக் கொள்வீ ர்கள்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு 7ம்ம்மிடமான சம சப்தம ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 3,8ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.இது கன்னி ராசிக்கு சுபத்துவத்தை ஏற்படுத்தும் அமைப்பு அல்ல. மனதுக்குள் பாதுகாப்பற்ற உணர்வு அடிக்கடி தோன்றும். அதனால்தான் யாரையும் இவர்கள் நம்புவதில்லை. வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. தம்பதிகளுக்குள் கெளரவ பிரச்சனையால் அன்யோன்யம் குறைந்து பிரிவினை ஏற்படலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழும் தன்மை இருக்காது. கடன் பெற்று நிர்வாகச் செலவு, ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சிறிய வீட்டில் இருக்கும் சிலர் வசதியான வீட்டிற்கு செல்வார்கள். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும்.புத்திர பாக்கியத்தில் கால தாமதம் ஏற்படலாம். சிலர் ஆன்ம பலம் இழந்து சூழ்நிலை கைதியாக வாழ்வார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தா லும் சளைக்காமல் உழைப்பார்கள்.இவரின் உழைப்பு இவரைவிட பிறருக்கே பயன்படும். தந்தை மகன் கருத்து வேறுபாடு உண்டு.
பரிகாரம்
பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
மகிழ்ச்சியை விரும்பும் துலாம் ராசியினரே
மாத துவக்கத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரன் பங்குனி 11ம் நாள் மேஷ ராசிக்கு செல்கிறார். சமசப்தம ஸ்தானத்தில் நின்று தன் வீட்டை தானே பார்க்கிறார்.இது துலாம் ராசியினருக்கு விரும்பத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மாதம் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது .குரு கடாட்சத்தால் அனைத்து செயல்களிலும் துணிந்து செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். தோற்றத்தில் மிடுக்கும், செயலில் வேகமும் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்த உங்கள் வாழ்வில் புது வசந்தம் வீசப் போகிறது. உங்களை வாட்டி வதைத்த நோய் தாக்கம் குறையும். உங்கள் வாழ்க்கை நிலை உயரப் போகிறது. பிறந்த பலனை அடையப் போகிறீர்கள்.
தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் உங்களை வந்து அடையும்.ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும்.ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிக ரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும். சுய முயற்சி, உழைப்பினால் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்டு தேவையானதை அடைவீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.பாக்கிய பலன் மிகுதியாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப் புள்ளியாகும். உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்தும் சாதமாக உள்ளது.மறு திருமண முயற்சி பலிதமாகும்.
சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும்.சிலர் சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும்.வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு.சொத்துக்கள் தொடர்பான முக்கிய விஷயங்களை பிறரை நம்பி ஒப்படைக்கக் கூடாது. பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.
நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். ஆரோக்கியத்தை காக்க யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவ உதவியில் சீராக வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆண் வாரிசு கிட்டும். ஜனன ஜாதகத்தில் ஏழாமிடத்தில் உள்ள கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணத்திற்கு சாதகமான தசை புத்தி நடப்பில் இருந்தால் திருமணத் தடை அகலும். சிலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடைபெறும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.நெருங்கிய சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
குருமங்கள யோகம்
துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குரு பகவானை 2,7ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். இது குரு மங்கள யோகம் ஆகும். உங்களின் புகழ், கவுரவம் உயரும். புதிய நட்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.பணவரவு அதிகரிக்கும்.உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். கலைப் பொருட்கள் சேமிப்பீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். குழப்பங்கள் தீர்ந்து தெளிவான நிலை உண்டாகும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புண்ணியத் திருத்தலம் யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும்.கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் வெறுப்பு மறையும். பள்ளி, கல்லூரி பருவத்தில் இருக்கும் துலா ராசி குழந்தைக ளின் பெற்றோர்கள் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலம் . பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வக் குறைவு ஏற்படும். மந்த தன்மை மிகுதியாகும்.
பொருளாதாரம்
விபரீத ராஜ யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட பொருள், வருமானம் போன்றவைகள் கிடைக்கும்.கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகி லாபம் கூடும்.தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும்.தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும்.மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள்.காணாமல் போன பொருட்கள் கண்ணில் தென்படும். வீட்டு மனைக்கு அட்வான்ஸாக கொடுத்த பணம் கிணற்றில் போட்ட கல்லாக வீணாகும்.
முதலீட்டாளர்கள்
தொழில் அபிவிருத்தி மூலம் வளர்ச்சி உண்டாகும். தொழில், வேலைக்காக அங்கும், இங்கும் அலைந்து, திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் பணிபுரியும் நிலை உண்டாகும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தொழில் அபிவிருத்தி உண்டாகும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.கல்வி நிறுவனங்கள், நூல் வெளியீட்டாளர்கள், அச்சுத்துறை போன்ற தொழிலில் இருப்பவர்கள் பெரும் பலன் அடைவார்கள். ஏப்ரல் வரை விரயங்கள் சற்று அதிகமாக இருக்கும். அதன்பிறகு விரயங்கள் அனைத்தும் சேமிப்பு, முதலீடாக மாறி உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்.
உத்தியோகஸ்தர்கள்
வேலைக்காக அங்கும், இங்கும் அலைந்து, திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் பணிபுரியும் நிலை உண்டாகும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள். இழந்த வெளிநாட்டு வேலை மீண்டும் கிடைக்கும்.சிலர் மற்றவரின் பணியையும் இழுத்துப் போட்டு வேலை செய்து பொருளீட்டும் நிலை உருவாகும். அரசுப் பணியாளர்கள் ஆதாயம் அடைவார்கள்.அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க உகந்த காலம்.சம்பந்தமில்லாத நபர்களின் குறிக்கீட்டால் மன சஞ்சலம் அதிகரிக்கும். கோட்சாரம் சுமராக உள்ளதால் நண்பர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது.
அரசியல்வாதிகள்
பய உணர்வு நீங்கும்.மன சஞ்சலம் அகலும்.ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.6ம்மிடத்தில் பதவி ஷ்தான அதிபதி சனி பகவான் நிற்பதால் எதிரிகள் நண்பர்கள் போல் நடித்து உங்களைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொண்டு உங்களை கவிழ்க்க முயலலாம். எனவே புதிய நண்பர்களிடம் கவனம் தேவை. அதே நேரத்தில் ஏழாமிடம் சமுதாய பழக்க வழக்கம் பற்றிக் கூறுமிடம் என்பதால் பொதுமக்களிடம் கவுரவம் பார்க்காமல் சகஜமாக பழகினால் தேர்தல் காலத்தில் அது ஓட்டாக மாறும்.ஆரோக்கியத்தை காப்பது நல்லது. யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்களிடம் கவனம் தேவை.
பெண்கள்
அனைத்து தடைகளும் தகறும். வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில் முன்னேற்றமான, சிறப்பான நன்மைகளை அடையக் கூடிய நிலை உண்டாகும். புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம்.பதவி உயர்வு, வருமான உயர்வு உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் நடைபெறும். உங்கள் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். சொத்துக்களின் மதிப்பு உயரும்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை துலாம் ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 2,7ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.இது வரையில் பெற்ற வெற்றிகள் எல்லாம் தடைபட்டது போன்ற உணர்வு மேம்படும். உங்களின் செயல்களில் சுயநலப் போக்கு உருவாகும். பேராசையால், முறையான திட்டமிடுதல் இன்மையால் குழப்பமான மன நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஞாபக மறதி உண்டாகும் . பய உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் வரும். திருமணம், குழந்தை பாக்கியம் தடைபடும். குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகமாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனை யாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்கலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதனால் மன வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும்.இயற்கை உணவுகளை உண்பதால் ஆரோக்கியத் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.
பரிகாரம்
வெற்றிலை, பாக்கு பழத்துடன் பால் பாயசம் வைத்து வெள்ளிக் கிழமை இஷ்ட குலதெய்வம் , மகாலட்சுமியை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.
அரசியல் ஆர்வம் மிகுந்த விருச்சிக ராசியினரே
பங்குனி மாதத்தில் உங்களின் ராசி அதிபதி செவ்வாய் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய (பங்குனி 19 (2.4.2026) ஸ்தானத்தில் உள்ள சனியுடன சேரப் போகிறார்.இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். செயல்திறனில் மாற்றம் ஏற்படும். சுப நிகழ்வுகள் சுப செலவுகளையும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பல வழிகளில் பணம் வந்து மனதையும் பையையும் நிரப்பும்.கஷ்டங்கள், கவலைகள் நீங்கி பொருளாதார நிலைமை சீராகும்.வீடு, நிலம், வாகனம் போன்ற சுப விரைய செலவுகள் உண்டாகும்.
வேலையில் லகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வீர்கள். குலதெய்வத்தின் கருணை முழுவதுமாக கிடைக்கும்.பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு இப்போது சாதகமாக பலன் தரும்.முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். நடப்பதெல்லாம் கனவா? என்று நினைக்க தோன்றும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், வரதட்சணை பணம், எதிர்பாராத தன லாபம், லாட்டரி, புதையல், உயில். ஆயுள் காப்பீடு போன்ற வகையில் கிடைக்கும். உங்களின் திறமையின் மீது நீங்கள் கொண்ட வைராக்கியம், பிடிவாத குணம், ஆளுமை திறன் உங்களின் தொழில், உத்தியோகம் மூலம் உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் காணாமல் போவார்கள்.
தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கனவான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்பு தேடி வரும். ஏற்கனவே வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். இயன்ற வரை பெரிய கடன் வாங்கி விவசாயம் செய்தலை தவிர்க்க வேண்டும். உங்களின் சொந்த வீடு, வாகன கனவை நிறைவேற்ற ஏற்ற காலம்.
இந்த மாதம் கடனும் விரையமும் உங்களுக்கு வரப்போவது உறுதியாகி விட்டது. கடன் வாங்கி சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. தாய், தந்தையின் ஆரோக்கியம் சீராகும். உற்றார், உற வினர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்விக்கும். மேலும் போட்டித் தேர்வு எழுதும் விருச்சிக ராசி குழந்தைகள் மாநில, மாவட்ட , பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெறுவது உறுதி.கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பால் பூர்வீக தொழிலை பிரிக்க நேரும். மனதில் சில சில சங்கடங்கள் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.
குருமங்கள யோகம்
விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் 2,5ம் அதிபதியான குருவை தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார் இது குருமங்கள யோகமாக பலன் தரும்.மிகப்பெரிய வாழ்வியல் மாற்றங்களைத் சந்திப்பீர்கள்.பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.ஆன்ம பலம் பெருகும். புத்திரப் பிராப்த்தத்தில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல திருப்பு முளையான சம்பவங்கள் நடைபெறும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும்.குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. விட்டு விலகிய சொந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு நாடி வந்து பேசுவார்கள்.மனக்கவலைகள் நீங்கும். இழுபறி நிலை மாறி மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும்.வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது.பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.
பொருளாதாரம்
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இலக்குகளை நிர்ணயித்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும்.தன வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத் துணையின் வருமானம் இரட்டிப்பாகும்.பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். தொழில் , திடீர் உயில் சொத்து, லாட்டரி , ரேஸ், பங்குச் சந்தை என அனைத்து வழிகளிலும் பண வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். அடமான நகைகள் சொத்துக்களை மீட்க கூடிய வகையில் உபரி வருமானம் கிடைக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் கட்டுக்கடங்காத விரயமும் இருக்கும். பணம் வந்த சுவடு இருக்கும் போன சுவடு தெரியாது. தாங்க முடியாத விரயம் மன உளைச்சலை தரும்.
முதலீட்டாளர்கள்
இது வரை ஒரு தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னொரு தொழில் செய்யும் எண்ணம் வரும். சில்லரை வணிபம் செய்தவர்கள் மொத்த வியாபாரம் செய்வார்கள். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும்.தொழில் போட்டி அதிகமாகும். போட்டியை சமாளிக்க உலகத்தில் எத்தனை குறுக்கு வழி உண்டோ அத்தனையையும் பின்பற்றும் சூழல் ஏற்படும். மூளையை மூலதனமாக்கி தொழில் செய்பவர்களுக்கு நல்ல சிந்தனை என்றால் என்ன? என்று கேட்கும் வகையில் கள்ளத்தனம் மிகும்.கூட்டம் கூடினாலும் கல்லா கலை கட்டாது.அரசின் வரிச் சுமைகாரணமாக குலத் தொழிலைச் செய்து வருபவர்கள் அதிலிருந்து விடுபட்டு வேறு தொழிலுக்கு செல்வார்கள்.வெளியூரில் வேலை பார்ப்பவர்கள். குலத் தொழிலை செய்வதற்காக சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள்
படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலையில் சேர உத்தரவு வரும். பணிச்சுமை அதிகரிப்பால் செயல்பாடுகளில் மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். தீர்க்க யோசிக்காமல் எடுத்த முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிலருக்கு சிறிய பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் வேகம், விவேகத்தை கடைபிடித்தால் மட்டுமே உங்களை காத்துக் கொள்ள முடியும்.
அரசியல்வாதிகள்
பொது வாழ்க்கையில், மிகப் பெரிய பதவியில் இருப்பவர்கள் கவனமாக காய் நகர்த்த வேண்டும்.அரசு சார்ந்த ஒப்பந்தங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் அரசு ஒப்பந்தங்களை மீறுவது , அலட்சியம் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆக்க பூர்வ பணிகளை செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள் இழந்த பதவி உங்களை தேடி வரும். அரசியலில் இருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.சனி பகவானின் அருள் இருந்தால் மட்டுமே பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். தசாபுத்திகள் சாதகமான அரசியல் வாதிகள் ஜெயிப்பது உறுதி.
பெண்கள்
பெண்களுக்கு மிக சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு நீடிக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். குடும்ப ஒற்றுமை'பலப்படும்.பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது. பொன், பொருள் சேரும்.உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலம். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.
செவ்வாய் சனி சேர்க்கை
விருச்சிக ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பங்குனி 19 (2.4.2026) அன்று சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறி வேறு மத வழிபாடு செய்வார்கள். நிம்மதியான தூக்கம் இருக்காது. பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவாசிகளுடன் எதாவது கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். நட்பு பாராட்டும் மனம் இல்லாவிட்டலும் பகையை வளர்க்காமல் இருந்தாலே போதும். சிலர் உண்ண உறங்க நேரமில்லாமல் அலைய நேரும். உறவினர்களால் மதிப்பு, மரியாதை குறையும். மன வெறுப்பால் பூர்வீகத்தை விட்டு வெளியேறி வாழும் எண்ணம் தோன்றும்.தீய பழக்கங்களை மனம் நாடும். சனியின் ஆதிக்கத்தினால் உடல் மெலியும். சனியின் தானியமான எள்ளை சாப்பிட்டால் உடலில் சதைப்பிடிப்பு கூடும். கடினமாக உழைத்து வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
பரிகாரம்
பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- செல்வாக்கை விரும்பும் மேஷ ராசியினரே உங்களின் ராசி அதிபதி செவ்வாய் பங்குனி 19 வரை 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்.
- ஆடம்பரத்தை விரும்பும் ரிஷப ராசியினரே மாத துவக்கத்தில் உச்சம் பெற்ற உங்களின் ராசி அதிபதி சுக்கிரன் பங்குனி 11 முதல் 12ம்மிடமான விரய ஸ்தானம் செல்கிறார்.
செல்வாக்கை விரும்பும் மேஷ ராசியினரே
உங்களின் ராசி அதிபதி செவ்வாய் பங்குனி 19 வரை 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். அதன் பிறகு 12ம்மிடமான விரய ஸ்தானம் செல்வார். உங்களின் திட்டமிடுதல் மற்றும் செயல்படும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் நல்ல சாதனை படைக்கலாம். இது சுப விரயமா? அல்லது அசுப விரயமா? என்பது உங்களுடைய சுயசாதக ரீதியான தசா புத்தியே முடிவு செய்யும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் முதலீடுகளை அதிகரிக்க முடியும்.
சேமிப்பு, சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம். சிலருக்கு தனிமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். மனம் எளிமையை விரும்பும். உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும். சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். கடந்த வந்த நாட்களில் நடந்த எதிர்மறையான சம்பவங்களை மனிதில் இருந்து விலக்க வேண்டும். நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். தூக்கம் குறையும். பயணங்களால் சில அசௌகரியங்கள் உண்டாகும்.
ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும். கண், கை கால் மூட்டு வலி போன்றவற்றிற்கு சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் உள்ளது. வரவிற்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமத்தை சந்திப்பார்கள். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். விவசாயிகளுக்கு போதிய நீராதாரம் இன்மையால் அவஸ்த்தையாக இருக்கும். விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காது. அரசின் உதவிகள் காலதாமதமாக வந்து சேரும். குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டக் குறைவு, மெத்தனப் போக்கும் நிலவும். சோம்பலும் மறதியும் மிகுதியாகும். சொந்த வீடு, வாகனம் வாங்க விரும்புபவர்கள் சுய ஜாதகத்தை பரிசோதித்து சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடவும்.
ஜனன கால ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் மேஷ ராசியினர் வாழ்வில் செட்டில் ஆகுவதற்கும் நல் வழி கிடைக்கும். ஜனன கால ஜாதக ரீதியான பல்வேறு தோஷங்களால் திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல வரன் வரும். திருமணத் தடை அகலும். முதல் திருமணத்தில் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் தற்போது முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். சுய ஜாதகத்தில் 7,8ம் பாவகங்களில் பிரச்சனை இருந்து திருமணத் தடை இருந்தால் அதற்கு உரிய பரிகார வழிபாட்டு முறையை கடைப்பிடித்து திருமணத்தை நடத்த வேண்டும். ஆண், பெண் ஜாதகத்தில் இருக்கும் குறைகளை நிறைவு செய்யும் விதமான
குருமங்கள யோகம்
ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு விதமான யோகங்களில் குருமங்கள யோகம் சிறப்பான யோகமாகும். ராசி அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் மேல் பதிகிறது இது குரு மங்கள யோகமாகும். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும் அற்புதமான மாதம். புகழ் ,அந்தஸ்து கெளரவம் அதிகரிக்கும். நம்பிக்கை, நாணயம் உயரும். குடும்ப நலனுக்காக ஆன்மீக யாத்திரை சென்று வர திட்ட மிடுவீர்கள். சிலருக்கு அரசிடமிருந்து இலவச வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.சில சமூக ஆர்வளர்களுக்கு அரச கௌரவம் கிடைக்கும்.வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள்.
பொருளாதாரம்
மாத துவக்கத்தில் தன ஸ்தான அதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் நிற்கும் வரை பொருளாதாரம் மந்த நிலை நிலவும். விரய ஸ்தானம் பலம் பெறுவதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். இரண்டாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம் அதிகமாகும் ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
முதலீட்டாளர்கள்
உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும்.ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவரின் வேலையில் மற்றவர் குறுக்கிடாமல் இருந்தால் தப்பித்து விடுவீர்கள். தொழில் கூட்டாளிகள், பங்குதாரர்கள் தங்களின் வரைமுறைக்கு உட்பட்ட பணிகளை மட்டும் செய்து அடுத்தவர் விசயத்தில் தலை இடாமல் இருந்தால் எந்த வம்பு தும்பும் இல்லாமல் காலத்தை கடத்தலாம். திரைத்துறையினர் மிகப் பெரிய முதலீட்டில் புதிய படம் எடுப்பது நல்லதல்ல. கலைத்துறையினருக்கு வரும் வாய்ப்பு திடீரென கை நழுவிப் போகும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. சிலர் பணிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. சிலருக்கு கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். சிலருக்கு மனதிற்கு பிடிக்காத உத்தியோக இடமாற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வேலையை தக்க வைக்க முடியும்.
அரசியல்வாதிகள்
பதவி ஸ்தான அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில மறைவதால் அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் உங்களை வந்து பார் என்று வம்புக்கு இழுக்கும். பிறரை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது.எனினும் சுய ஜாதகர் ரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் எதிர்பாராத சம்பவங்களையும் திருப்பங்களையும் நடத்துவார் என்பதால் மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். பெரிய பதவிகளும் உங்களுக்கு கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.
பெண்கள்
உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்காது.எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற உணர்வு வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தலை தூக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவதோடு குற்றச்சாட்டுகள் மன வேதனையை தரும்.மறைமுக எதிர்ப்புகளும், சூழ்ச்சிகளும் போட்டிகளும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் நயவஞ்சக செயலால் சமுதாயத்தின் மேல் வெறுப்பு ஏற்படும். சற்று அலைச்சல் மிகுந்த பணியாக இருக்கும். சரியான நேரத்திற்கு ஓய்வு எடுக்க முடியாது. நேரத்திற்கு உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் பகைவர்களிடம் கூட அன்பாக பேசி காரியத்தை சாதிக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால் வீட்டு விஷயம் வெளியே வராமல் காக்கப்படும்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை - 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் உள்ள சனியுடன் ராசி அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். விரய ஸ்தானத்தில் சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுவதால் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீண் அலைச்சலை ஏற்படுத்தும் பயணங்கள் செய்ய நேரும். உங்கள் முன்னோர்களின் பரம்பரை நோயான சுகர், பிரஷர், பிபி உங்களை தாக்க தயாராகும் காலம். இதிலிருந்து தப்பிக்க முறையான உடற்பயிற்சி அவசியம். இல்லையேல் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய வியாதி தாக்கும். அதுமட்டுமல்லாமல் சரியான மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்வது நலம்.வெகு சிலருக்கு காதில் சீழ் வடிதல், காது வலி போன்ற காது தொடர்பான பிரச்சனையால் தலை வலி வரும். 2, 4 சக்கர வாகனங்களில் செல்லும் போது உரிய ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும். இரண்டு சக்ர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்ல கூடாது. நான்கு சக்ர வாகனங்களை இயக்குபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது. ஜாதகத்தை பொருத்த வேண்டும்.
பரிகாரம்
தொழில் தடை, கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, பெளர்ணமி தோறும் சத்திய நாராயணர் பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.
ஆடம்பரத்தை விரும்பும் ரிஷப ராசியினரே
மாத துவக்கத்தில் உச்சம் பெற்ற உங்களின் ராசி அதிபதி சுக்கிரன் பங்குனி 11 முதல் 12ம்மிடமான விரய ஸ்தானம் செல்கிறார். ராசி அதிபதி விரய ஸ்தானம் சென்றாலும் லாப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சனி புதன் சேர்க்கை ஏற்படுவதால் பல்வேறு விதமான சுப பலன்களும் நடக்கும் எண்ணங்களும் லட்சியங்களும் கனவுகளும் ஈடேறும். புகழ் அந்தஸ்து கீர்த்தி உயரும். கெளரவத் தோற்றம் ஏற்படும். தெய்வ நம்பிக்கை கூடும்.
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். இது திறமையை மெருகேற்றி கொள்ள உகந்த அமைப்பாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தாய் வழி குடும்ப விசேஷங்களில் நடைபெறும் உறவுகளின் சந்திப்பு இன்பங்களை மலரச் செய்யும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள்.அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொலிவு பெறச் செய்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். வேலையாட்களிடம் நிலவி வந்த குழப்பம் மறையும்.
மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட ப்ரபஞ்ச சக்தியை உணர்வார்கள் தடைபட்ட வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வருவதில் சற்று கால தாமதம் எற்படும். பொருளாதார நிலையில் சிறு ஏற்றத்தாழ்வு இருக்கும். கடன் சுமை குறையும். நோய் நொடி நீங்கும். வம்பு வழக்குகள் எதிர்பாராத வெற்றியைத் பெற்றுத் தரும் அல்லது அல்லது தள்ளிப்போகும். பணம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் ஏற்படும். யோகா மெடிடேசன், பிராணயாமம் கை கொடுக்கும். இயற்கை வைத்தியம் நல்ல பலன் தரும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதம் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். மனைவி மூலம் பொருள் வரவு எற்படும். திடீர் அதிர்ஷ்டம், புதையல் லாட்டரி, உயில் மூலம் எதிர்பாராத வகையில் பண வரவு வரும். இளம் காதலர்களுக்கு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடக்கும்.
இரண்டாம் திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தை வழி சுற்றத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். இரவு நேரத்தில் வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலர் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து புதிய கவலைகளை உருவாக்குவார்கள். யாருக்கேனும் நன்மை செய்தால் அது உங்களுக்கு தீமையாகவே வந்து முடியும். உறவினர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டு அவமானத்தை தேடிக் கொள்வீர்கள்.
குருமங்கள யோகம்
ரிஷப ராசிக்கு 7,12ம் அதிபதியான செவ்வாயின் நான்காம் பார்வை ராசிக்கு 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் 8.11ம் அதிபதி குருவின் மேல் பதிகிறது. இது குருமங்கள யோகமாகும்.ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.தொட்டது துலங்கும். ராஜயோக அதிர்ஷ்டத்தை கொடுக்கும் மாதம் என்றால் அது மிகையாகாது.முக்கியமான செயல்களைத் தெளிவாக செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும்.குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறித சிறிதாக அடைக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். பெரும் விரயம் ஏற்படாது.
வீடு, வாகனம் தொடர்பான உங்களின் கனவுகள் பலிதமாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள்.வங்கிகள் , நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும். ஒரு சிலர் பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். சுமாரான வீட்டில் குடி இருந்தவர்கள் சூப்பர் வீட்டிற்கு செல்வார்கள். தாயின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக செலவு செய்ய நேரும். அண்ணன், தம்பிகளிடம் யார் அம்மாவை பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடுமிகும்.
பொருளாதாரம்
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும் . இனிமேல்வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும். என்றாலும் வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதானமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் உண்டாகும். வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும் .குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும்.சுப நிகழ்வுகள் நடைபெறும்.
முதலீட்டாளர்கள்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் மிகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மிகும். தொழில் ரீதியான மிகப் பெரிய வளர்ச்சியை பார்ப்பீர்கள். மிகக் குறுகிய காலத்தில் தொழிலுக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைக்கும். உங்கள் திறமைகள் அனைவராலும் போற்றப்படும். சிலருக்கு மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். எப்படி பணம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணவரவு இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிப்பால் கெளரவம் அந்தஸ்து அதிகரிக்கும். உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு மிகைப்படுத்தலான நன்மைகள் உண்டு.தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் சட்டத்தின் பிடியில் சிக்க நேரும்.
உத்தியோகஸ்தர்கள்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாகும். நிம்மதியான மனநிலையில் பணிபுரிவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். சம்பள உயர்வு பதவி உயர்வு என வாழ்வாதாரம் உயரும். வாங்கிய கடனை அடைப்பீர்கள்.பிறர் விஷயங்களில் தலையிடாமல் கொடுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும்.அதிக வெளியூர் பயணம் செல்ல நேரும். பணிபுரியும் இடத்தில் உள்ள விதிகளை மீறாமல் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோக ரீதியான இடமாற்றம் சற்று ஆறுதலாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்து சேரும். வெளிநாட்டு வேலை அரசு வேலை முயற்சி வெற்றி தரும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். நினைத்த இடமாற்றம் கிடைப்பது உறுதி. அடிக்கடி பிராயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவும்.
அரசியல்வாதிகள்
இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த யோகமாகும். சொல்வாக்கு செல்வாக்கு ஓங்கும். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களது சமூக அந்தஸ்து உயரும் நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். தலைமையிடம்,கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பொது மக்களின் ஆதரவும் உண்டு. நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் உங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். பொது நிகழ்ச்சியில் மிகுந்த எச்சரிக்கையாக பேச வேண்டும். எதிர் கட்சியினர் உங்கள் வார்த்தையை கொண்டே உங்கள் கட்சியில் கலகத்தை ஏற்படுத்துவார்கள்.
பெண்கள்
பெண்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும்.விதவிதமான நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். புகுந்த வீட்டில் உங்களின் பேச்சுக்கு தனி மதிப்பும் மரியாதையும் ஏற்படும். அந்தஸ்து கெளரவம் உயரும் . தாய் வழிச் சீதனம் கிடைக்கும்.அடகு வைத்த நகைகள் மீண்டு வரும்.புதிய ஆடம்பர ஆடைகள் நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பொருள் பற்றாக்குறை அகலும்.குடும்பத்தில் அமையும் நிம்மதியும் நிலவும்.பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் கூடும்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை 11ம்மிடமான விரய ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 7,12ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்கள் .ஞாபக மறுதி , மனக்குழப்பம் அதிகரிக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வெளி பேச்சில் நல்ல வராகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்து பேசுவார்கள். பூர்வீக சொத்து இன்று வந்து விடும் நாளை வந்து விடும் என இலவு காத்த கிளியாக நாளை கடத்த வேண்டும்.மதுப்பழக்கம் இருப்பவர்கள் மனக்குழப்பத்தால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற நேரும். எனவே போதை பழக்கத்தை கைவிட்டு அம்மன் வழிபாடு செய்ய மாற்றங்கள் தேடி வரும். உங்களின் செயல்களில் சுயநலப் போக்கு உருவாகும். குழப்பமான மனநிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஞாபக மறதி உண்டாகும். பய உணர்வு அதிகரிக்கும்.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிக்கலாம். காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள்.
பரிகாரம்
நெய், பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்த பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க, தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
விவேகமான மிதுன ராசியினரே
பங்குனி மாத துவக்கத்தில் வக்ரகதியில் இருக்கும் உங்கள் ராசி அதிபதி புதன் பங்குனி 6 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். மாத இறுதியில் பங்குனி 27ல் மீன ராசியில் நீசம் அடைகிறார். பல்வேறு சோதனைகள் சாதனையாகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். அழியாத புகழ் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிறும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். இதுவரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும். முகப் பொலிவு ஏற்படும். தன வரவு இரட்டிப்பாகும்.
சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடிபுகும் ஆர்வம் மிகும். உங்கள் எண்ணம் போல் வீடு, வாகன யோகம் அமையும். சிலர் வீட்டை புதுப்பித்து நவீனமயமாக்குவர்கள். 2 சக்கர வாகனம் வைத்து இருப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். தாயருக்கு சிறு, சிறு உடல் நலக் குறைவு ஏற்படலாம். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆறுதலும் கிடைக்கப் பெறும். தாய் வழி உறவினர் மூலம் தன வரவு வரும். தாய் வழி குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும்.
குடும்பத்துடன் சென்று குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். குல தெய்வ,இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மன அமைதி அடைவீர்கள். மனம் தனிமையை நாடும். பாவம் எது? புண்ணியம் எது?வாழ்நாளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் போன்ற சிந்தனைகள் தோன்றும்.
மோட்சம் அடையும் மார்க்கத்தில் ஈடுபடும் ஆர்வம் மிகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. திருமண வயதில் இருக்கும் உங்களின் மகள், மகனின் திருமணத்தை சீரோடும் சிறப்போடும் நடத்துவீர்கள். பல வருடங்களாக தடைபட்ட எண்ணற்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். உங்களின் காதல் விசயம் பெற்றோருக்கு தெரிய வரும். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு காதல் திருமணம் நடைபெறும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும். புத்திர பிரார்த்தம் உண்டாகும்.
குருமங்கள யோகம்
ராசியில் சஞ்சரிக்கும் 7,10 ம் அதிபதி குருவை 6,11ம் அதிபதி செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார் இது குருமங்கள யோகமாக பலன் தரும். தான தர்மங்களில் நாட்டம் மிகும். ஆசை, பேராசை, எதார்த்தம் இந்த மூன்றில் எது நிராந்தரமாக மனிதனை வழி நடத்தும் என்ற உண்மை புரியும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும். சொத்து அடமானத்தின் பெயரில் கடன் பெரும் எண்ணம் தோன்றும். யாருக்கேனும் ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கி கொள்ள கூடாது. விற்கப்பட வேண்டிய சொத்தாக இருந்தால் நல்ல விலைக்கு விற்க முடியும். பூர்வீகம் சென்று உற்றார், உறவினரை கண்டு மகிழ்வீர்கள். வேகம் கலந்த விவேகத்துடன் செயல்பட்டு சந்தோஷ மழையில் நனையப் போகிறீர்கள். பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பெரிய மனி தர்களின் நட்பு கிடைக்கும். தேங்கி கிடந்த பழைய பணிகள் மளமளவென முடியும். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் கௌரவமும் கிடைக்கும்.
பொருளாதாரம்
புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாழ்க்கை வளமாகும். கட்ட முடியாத வீட்டை கட்ட முடியும். விற்க முடியாத சொத்தை விற்க முடியும். தொழில், வியாபார அபிவிருத்தி, பண வரவு என அனுகூலமான பலன்களை பெறுவார்கள். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். விட்டதை பிடிக்கும் நேரம் என்று கூட கூறலாம். கடன்கள் நிவர்த்தியாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ முடியும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் எதிர்பாராத உதவிகளும் உங்களை மகிழ்விக்கும் காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்த தகுந்த வைத்திய உதவிகள் கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்
புதிய தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். உங்களுக்கு தெரிந்த நன்கு பரிட்சயமான தொழிலே சிறக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். எல்லாத் துறையை சேர்ந்தவர்களுக்கும் லாபம் அடைய வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்று கருத்து மறையும். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். அரசின் சலுகைகள், மானியங்கள் எளிதில் கிடைக்கும். அல்லது சம்பளம் வாங்காமல் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ப வர்களுக்கு பாதிப்பு இல்லை. தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களும் முறையாக வைத்து இருக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாத தொழில் உங்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும்.சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும் அல்லது பணி நிமித்தமாக நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் வெளிநாடு சென்று வருவீர்கள். ஒரு சிலருக்கு தலைமை பொறுப்பு கிடைக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் காப்பாற்றுவீர்கள். எப்போது விடிவு காலம் வரும் என்று காத்து இருந்த உங்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது. சுயதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்பு உருவாகும். தொழில் நிலவி வந்த மந்த நிலை மாறும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். பலருக்கு சொந்த ஊருக்கு பணி மாற்றம் கிடைக்கும்.
பெண்கள்
முன்னேற்றமான காலம். ஆளுமைத் திறன் மேம்படும். வீடு, மனை என சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல் என உங்கள் சிந்தனை எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். எதிர்பார்த்த அனைத்து வழிகளிலும் வரவுகள் இருக்கும். சுய தொழிலில் நிலவிய சங்கடங்கள், குறுக்கீடுகள் விலகும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.அலுவலகத்தில் உங்கள் மீது ஏற்பட்ட வீண் பழி விலகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சுப நிகழ்வுகள் மங்களகரமாக நடக்கும். நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி ஊடல் கூடலாக மாறும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். உடல் நிலை தேறும்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 6,11ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். அடமான பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் நிலவிய மன அழுத்தம் குறையும். நவீன கரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீர்க்க உகந்த மாதமாகும். வீண் அலைச்சலும் காரியத்தடையும் வரலாம். உயில் எழுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். சொத்துக்களின் விற்பனை சாதகமாகும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அரசின் சட்ட திட்டங்களில் முறையாக கடைபிடிக்க வேண்டும் பணம் கொடுக்கல் வாங்கலுக்கு முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். எதிலும் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது முக்கியமாகும்.
பரிகாரம்
மன சஞ்சலத்திலிருந்து விடுபட விநாயகரை தினமும் 21 முறை வலம் வர வேண்டும்.
கனிவான கடக ராசியினரே
கடக ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சனி, செவ்வாய் புதன் சேர்க்கை ஏற்பட போகிறது. எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள்.எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் செயலிலும் பேச்சிலும் அறிவு மேம்படும்.இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் உள்ளது. அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.மனம் மகிழும் சம்பவம் நடைபெறும்.
தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.உடன் பிறந்தவர்களுடன் தாய் வழிச் சொத்து விஷயத்தில் நிலவிய சலசலப்பு மாறும். புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டம் சார்ந்த ஆதாயம் உண்டாகும். கடந்த கால கடன்கள், பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதக மாகும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும்.
புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம் அல்ல.உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடை வீர்கள். திருமணத்தடைத் அகலும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை நிறைவேற்றுதல் போன்ற சுப செலவு உண்டாகும்.தடைபட்ட குலதெய்வ நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று மகிழ்வீர்கள்.
உங்களின் குல தெய்வமும், இஷ்ட தெய்வமும் உங்கள் வீட்டில் குடியிருந்து அருளாசி வழங்கும்.உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். தந்தையால் ஆதாயம் உண்டு. பூர்வ புண்ணியம் வினைப் படி நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களையும் நியாயமானதாக இருந்தால் நடந்து விடும். இள வயது கடக ராசியினருக்கு தாய், தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். வயதானவர்களுக்கு தாத்தா பாட்டி என்ற பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலர் குழந்தை பிறப்பிற்கான மருத்துவம் எடுப்பார்கள்.பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு பணவரவு, அதிர்ஷ்டம் நிறைய கிடைக்கும். அதிக பணத்தை பார்த்தவுடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பணம் ஸ்வாகா தான்.பொருளாதார இழப்பு தொடர்பான வம்பு வழக்கு உண்டாகும்.
குருமங்கள யோகம்
ராசிக்கு 12ம்மிடமான மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானை 5,10ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். கடக ராசிக்கு 6, 9 ஆம் அதிபதியான குரு பகவானை செவ்வாய் பார்ப்பது நன்மையும் தீமையையும் கலந்த பலனை வழங்கும்.முன் யோசனையுடன் முறையான திட்டமிடுதல் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். இது வரை எதிரி, போட்டி என்றால் என்னவென்றே தெரியாது இருந்த உங்களுக்கு நண்பர்களே எதிரி என்ற உண்மை புரியும். சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு இடைஞ்சல்களை சந்தித்து கொண்டே இருப்பீர்கள். எனினும் ஆன்மீக சிந்தனை, இறை நம்பிக்கையால் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றியை நோக்கி செல்வீர்கள்.கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த விசுவாசமான வேலையாட்கள் ஒதுங்குவார்கள். வேலைக்கு முயற்சி செய்பவர்கள் குடும்ப சூழல் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு செல்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உயர் அதிகாரிகள் பணிச்சுமையை அதிகரித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவார்கள்.
பொருளாதாரம்
அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் மாதம். தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். நவீனமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் ஏற்படும்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.
முதலீட்டாளர்கள்
சொந்த தொழில் செய்பவர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். தடைகள் விலகுவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.தொழிலால் கவுரவம், அந்தஸ்து. கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். அதிருப்தி மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் கூட்டாளிகளும் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள். முன்னோர்களின் பரம்பரை தொழிலை நடத்துபவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலை விரிவு படுத்த தேவையான நிதி உதவி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள்
இதுவரை உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். அரசு, தனியார் ஊழியர்கள் வசதி குறைவான ஊருக்கு மாற்றம் செய்யப்படுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக் கான ஒப்பந்தம் போன்றவற்றை சரி பார்த்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.அரசின் சட்ட திட்டங்களில் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த மாதம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். கட்சி மாறும் எண்ணத்தை கைவிட வேண்டும். முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்தி அதிக செலவு செய்து சமூக தொண்டாற்றி மக்கள் மனதில் இடம் பிடிக்க உழைக்க வேண்டும். கட்சிக்காகவும், மக்களுக்காவும்தொண்டர்களுக்காகவும் உழைக்க வேண்டும். தான் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற கர்வத்துடன் செயல்படக் கூடாது. பொது நிகழ்ச்சியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பெண்கள்
நியாயமான ஆசைகள் நிறைவேறும் காலம்.திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்டவர்கள் மேன்மை அடைவார்கள். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசா பிரச்சனை சீராகும்.தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். ஆசைகளால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை கடக ராசிக்கு 7,8ம் அதிபதியான சனி பகவானும் 5,10ம் அதிபதியான செவ்வாயும் பங்குனி 19 (2.4.2026) அன்று பாக்கிய ஸ்தானத்தில் இணைகிறார்கள்.ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சில அசெளகரியங்கள் நடந்தாலும் முதலாளிக்காக நன்றியுடன் வேலை செய்வீர்கள். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மூத்த சகோதர, சகோதரி சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும்.சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். பலவீன மனத்தினர் சிலர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள்.
பரிகாரம்
வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட இனம் புரியாத அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து விடுபடுவீர்கள்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- கார்த்திகை: காஞ்சநகரம் கத்ர சுந்தரேஸ்வரர் கோவில், நாகப்பட்டினம்.
- ஆயில்யம்: திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் கோவில், தஞ்சை.
தமிழ்நாட்டில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கு உரிய பிரத்யேகக் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் தங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் வழிபடுவது தோஷங்களை நீக்கி நன்மைகளை தரும். திருநின்றியூர் (அனுஷம்), நல்லடை (பரணி), குருவித்துறை (சித்திரை), கோமல் (ஹஸ்தம்), காஞ்சநகரம் (கார்த்திகை) ஆகியவை முக்கியமான நட்சத்திரத் தலங்களாகும்.
இந்த 27 நட்சத்திரங்களையும் ஒருசேரக் கொண்டு ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில் புதுவையில் 108 அடி உயர சிலையுடன் பிரமாண்டமாக சதாசிவமூர்த்தி கோவில் கட்டப்பட்டுள்ளது.
27 நட்சத்திரங்கள் மற்றும் சில முக்கிய கோவில்கள்:
அஸ்வினி: திருத்துறைப்பூண்டி பிரவி மருந்தீஸ்வரர் கோவில், திருவாரூர் மாவட்டம்.
பரணி: நல்லடை அக்னீஸ்வரர் கோவில், நாகப்பட்டினம்.
கார்த்திகை: காஞ்சநகரம் கத்ர சுந்தரேஸ்வரர் கோவில், நாகப்பட்டினம்.
ரோகிணி: தாழமங்கை சந்திரசேகரர் கோவில், தஞ்சை.
மிருகசீரிஷம்: எண்கண் ஆதித்த நாராயணப் பெருமாள் கோவில், திருவாரூர்.
திருவாதிரை: அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்.
பூசம்: வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில், நாகப்பட்டினம்.
ஆயில்யம்: திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் கோவில், தஞ்சை.
மகம்: பொறையார் மயானக் கோட்டையம்மன், நாகப்பட்டினம்.
பூரம்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோவில், புதுக்கோட்டை.
உத்திரம்: பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருவாரூர்.
அஸ்தம்: கோமல் கிருபா குபரேச்வரர், நாகப்பட்டினம்.
சித்திரை: குருவித்துறை வல்லபபெருமாள், மதுரை.
சுவாதி: திருக்கண்டீஸ்வரம் சிவானந்தேஸ்வரர், புதுச்சேரி.
விசாகம்: திருநெல்வேலி வேணுவனநாதர், திருநெல்வேலி.
அனுஷம்: திருநின்றியூர் மகாலக்ஷ்மேஸ்வரர், நாகப்பட்டினம்.
கேட்டை: பழைய வாணியம்பாடி வரதராஜப் பெருமாள், வேலூர்.
மூலம்: மாந்துறை மாமூலநாதர், திருச்சி.
பூராடம்: காடுவெட்டி காசி விஸ்வநாதர், தஞ்சாவூர்.
உத்திராடம்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர், சிவகங்கை.
திருவோணம்: திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வேலூர்.
அவிட்டம்: கீழக்கொருக்கை பிரம்மஞான புரீசுவரர், தஞ்சை.
சதயம்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர், நாகப்பட்டினம்.
பூரட்டாதி: திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர், தஞ்சை.
உத்திரட்டாதி: நாகைக்காரூர் மகாதேவர், நாகப்பட்டினம்.
ரேவதி: திருவாறவூர் கைலாசநாதர், நாகப்பட்டினம்.
இந்த நட்சத்திரத் தலங்கள் பெரும்பாலும் சிவனை மூலவராகக் கொண்டிருந்தாலும், சில பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களும் இதில் அடங்கும்.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
- மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-30 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி காலை 7.22 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : உத்திராடம் பின்னிரவு 3.39 மணி வரை பிறகு திருவோணம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி வரதராஜ மூலவருக்கும், திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கும் திருமஞ்சனம்
இன்று காரடையான் நோன்பு நோற்க உகந்த நேரம் இரவு 6.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள். குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர், நாமகிரிப்பேட்டை ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு ஸ்திரவார திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உற்சாகம்
ரிஷபம்-போட்டி
மிதுனம்-சாந்தம்
கடகம்-ஓய்வு
சிம்மம்-ஆதாயம்
கன்னி-நட்பு
துலாம்- உண்மை
விருச்சிகம்-செலவு
தனுசு- கடமை
மகரம்-பெருமை
கும்பம்-பரிசு
மீனம்-இன்பம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணிச்சுமை அதிகரிக்கும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிறரை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம்.
ரிஷபம்
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வரும் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
மிதுனம்
விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் மேலோங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
கடகம்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
செல்வாக்கு உயரும் நாள். தொழில் வெற்றி நடைபோடும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் வந்த பிரச்சனை அகலும்.
கன்னி
இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும் நாள். வியாபாரத்தில் ஏற்றமும், மாற்றமும் ஏற்படும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.
துலாம்
வரவு திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராகும். சகோதர வழியில் சந்தோஷத் தகவல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
மனக்குழப்பம் அகலும் நாள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திட்டமிட்ட பயணம் வெற்றிகரமாக முடியும்.
மகரம்
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நிலை உயரும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகை உண்டு.
கும்பம்
எதிர்பாராத வரவு இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்பர்.
மீனம்
முன்னேற்றம் கூடும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
- மன்னன், நாரதர் மூலமாக “சத்தியவான் ஒரு இளவரசன். ஆனால், குறைந்த ஆயுள் கொண்டவன்” என்பதை அறிந்தான்.
- சத்தியவானின் உயிரை கவர்ந்துச் சென்ற எமதர்மரை பின் தொடர்ந்தாள், சாவித்திரி.
மாசி மாதம் முடியும் நேரமும், பங்குனி மாதம் மாதம் பிறக்கும் தருணமும் கூடும் நேரத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதம், 'காரடையான் நோன்பு' ஆகும். இந்த விரதத்தை 'சாவித்திரி விரதம்' என்றும், காமாட்சி விரதம்' என்றும் அழைக்கிறார்கள். திருமணமான பெண்கள், தங்கள் மாங்கல்ய பலத்தை பெருக்குவதற்காக இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
சாளுவ தேசத்தை ஆட்சி செய்த துயமத்சேனன் என்ற மன்னனுக்கு சத்தியவான் என்ற மகன் இருந்தான். சிறப்பாக ஆட்சி செய்த மன்னன், வயது முதிர்வு காரணமாக கண் பார்வையை இழந்தான். இதைப் பயன்படுத்திக் கொண்ட எதிரிகள், மன்னனிடம் இருந்து நாட்டை கைப்பற்றினர். இதையடுத்து, சத்தியவானுக்கு தன் பெற்றோருடன் காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.
ஒரு முறை அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி, காட்டிற்கு சென்றபோது, சத்தியவான் தன் பெற்றோருக்கு பணிவிடை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சத்தியவானை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதுப்பற்றி தன் தந்தையிடம் சாவித்திரி கூறினாள். மன்னன், நாரதர் மூலமாக "சத்தியவான் ஒரு இளவரசன். ஆனால், குறைந்த ஆயுள் கொண்டவன்" என்பதை அறிந்தான்.
இதனால் வருத்தம் அடைந்த மன்னன், சத்தியவானுக்கு தன் மகளை திருமணம் செய்துகொடுக்க தயங்கினான். ஆனால் சாவித்திரி, சத்தியவானை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தாள். மன்னன் வேறு வழியில்லாமல், சத்தியவானுக்கே சாவித்திரியை திருமணம் செய்து கொடுத்தான். இதையடுத்து, சத்தியவானும், சாவித்திரியும் காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
சத்தியவானுக்கு குறைந்த ஆயுள் என்பதை அறிந்த சாவித்திரி, நாரதரின் அறிவுரைபடி சில விரதங்களை மேற்கொண்டு வந்தாள். ஒரு வருடம் முடிந்த நிலையில், ஒரு நாள் சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவானின் உயிர் பிரிந்தது. அப்போது சத்தியவான் உயிரை எடுத்துச்செல்ல வந்த எமதர்மர், கற்புக்கரசியான சாவித்திரியின் கண்ணுக்கு தென்பட்டார்.
சத்தியவானின் உயிரை கவர்ந்துச் சென்ற எமதர்மரை பின் தொடர்ந்தாள், சாவித்திரி. இதைப் பார்த்த எமதர்மர், "எதற்காக என்னை பின்தொடர்கிறாய்" என்று கேட்டார். ஆனால் சாவித்திரி எந்த பதிலும் சொல்லாமல் எமதர்மரை பின்தொடர்ந்தார். உடனே எமதர்மர், "உன் கணவன் உயிரை திருப்பி கொடுக்கவே, பின்தொடர்கிறாய் என்பதை அறிவேன். ஆனால், பிரிந்த உயிர் திரும்புவது என்பது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் கேள்" என்றார்.
எமதர்மர் கேட்டதும் சாதுர்யமாக, "எனக்கு பிறக்கும் நூறு குழந்தைகளை, நான் மடியில் வைத்து கொஞ்சுவதை, என் மாமனார் கண்குளிர காண வேண்டும்" என்று கேட்டாள். உடனே சற்றும் யோசிக்காமல் "அப்படியே ஆகட்டும்" என்று வரம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். எமதர்மரை தடுத்த சாவித்திரி, "தாங்கள் கொடுத்த வரத்தின்படி, என்னுடைய கணவன் உயிரை திருப்பி தாருங்கள்" என்று கேட்டார். அதன்பின்பு தான், எப்பேர்பட்ட வரத்தை அளித்தேன் என்பதை எமதர்மர் உணர்ந்தார். கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால் சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார், எமதர்மர்.
சாவித்திரியின் வரத்தின்படி, சத்தியவான் உயிர் பெற்றதோடு, சாவித்திரியின் மாமனாருக்கும் கண் பார்வை கிடைத்தது. இதையடுத்து இழந்த ராஜ்ஜியத்தை மீட்டனர். சத்தியவானும், சாவித்திரியும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். சத்தியவானின் உயிரை மீட்பதற்கு உதவியாக இருந்தது, அவள் கடைப்பிடித்து வந்த 'காரடையான் நோன்பு'. இதனால் தான் இது 'சாவித்திரி நோன்பு' என்றும் அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்மனும் இந்த விரதத்தை கடைப்பிடித்த காரணத்தால் 'காமாட்சி விரதம்' என்றும் பெயர் பெற்றது.
காரடையான் நோன்பு இருக்கும் பெண்கள், அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின்பு, பூஜை அறையில் கோலம் இட்டு, அம்மன் படம் வைத்து விளக்கேற்ற வேண்டும். கோலத்தின் மீது கும்பம் ஒன்றை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூ சூட வேண்டும். ஒரு நூலில் மஞ்சள் தடவி நோன்பு கயிறு தயார் செய்து, அதை கும்பத்தின் மீது கட்ட வேண்டும்.
அரிசி மாவு, காராமணி சேர்த்து காரடை செய்து, நைவேத்தியமாக படைக்கலாம். அம்மனுக்குரிய பாடல்களை பாடி வழிபட வேண்டும். பின்பு, கணவன் கையால் நோன்பு கயிற்றை கழுத்திலோ, கையிலோ கட்டிக் கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும், திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன் அமைவார், குடும்பம் மகிழ்ச்சியோடு நடைபெறும் என்பது நம்பிக்கை.
- திருப்பதியில் நேற்று 68,754 பேர் தரிசனம் செய்தனர்.
- திருப்பதியில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒருவாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று மாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.
பக்தர்கள் கிருஷ்ணதேஜா மாளிகை வரை 3 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மோர், குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,754 பேர் தரிசனம் செய்தனர். 25,569 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை நேரங்களில் இதமான காற்று வீசுகிறது.
இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
கியாஸ், சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை பக்தர்களுக்கு வழக்கம்போல அன்னதானம், லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-29 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி முழுவதும்
நட்சத்திரம் : பூராடம் பின்னிரவு 2.19 வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. காரியநாயனார் குரு பூஜை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பருக்கும் ஸ்ரீ காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் அலங்கார திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யான வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-கனிவு
கடகம்-போட்டி
சிம்மம்-பொறுப்பு
கன்னி-கடமை
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்-நலம்
தனுசு- லாபம்
மகரம்-வரவு
கும்பம்-சிறப்பு
மீனம்-உவகை






