என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம்.
    • ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.

    நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், எத்தனை நல்லவை செய்திருப்பினும், எவ்வளவு அல்லவை செய்திருந்தாலும், அரங்கனை, ரங்கநாதனை, ரங்கநாதப் பெருமாளை இறுதியில் சரணடைந்துவிட்டால் மோட்சம் நிச்சயம்; வைகுண்டத்தில் சொர்க்கவாசல் நமக்குத் திறக்கப்படும் என்று புராணம் சொல்லிவைத்த மாபெரும் விஷயத்தை மிக எளிதாக உணர்த்தியிருக்கிறார்கள்,

    இத்தனை பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம். காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், இன்றைக்கும் தன் அழகுடன், தனியழகுடன், மிகுந்த சாந்நித்தியத்துடன் அமைந்திருக்கிறது. சயனித்த திருக்கோலத்தில் இருந்தபடி, இந்த உலகுக்கும் உலக மக்களுக்கும் விடியலைத் தந்து சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார் ரங்கநாதப் பெருமாள். வைகுண்டத்தை திருநாடு என்று போற்றுவார்கள். அந்தத் திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் எனும் எந்த உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பார்களாம்.

    தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியையொட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் 10 என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும் அரையர் சேவை இன்றைக்கும் நடந்து வருகிறது.

    ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதான 'ஆராவமுதே' என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு அதில் மெய்மறந்து போனார்.

    அதில் 'ஓராயிரத்துள் இப்பத்தும்' எனும் அடி வந்தது. அவர்களிடம், ''நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்து பாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?'' என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார் திருநகரி சென்று இந்தக் கேள்வியை மதுரகவி ஆழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டார்.அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவி ஆழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். நாதமுனிகளும் 12 ஆயிரம் முறை மதுரகவி ஆழ்வாரின் பாசுரத்தைப் படித்தார்.

    ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார்.

    அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடச் செய்தார் என்கிறது ஸ்ரீரங்கம் புராணம்.

    மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஸ்ரீரங்கரையும் ரங்கநாயகித் தாயாரையும் ஒருமுறை வழிபட்டாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகும்; பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அரங்கனின்சந்நிதிக்கு வருவோம்.

    அவனின் பேரருளைப் பெறுவோம்!

    • கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 3-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.43 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    இந்த நேரத்தில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

    • தன்னம்பிக்கை நிறைந்த தனுசு ராசியினருக்கு 2026ம் ஆண்டு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.
    • உழைப்பினால் காரியம் சாதிக்கும் மகர ராசியினருக்கு 2026ம் ஆண்டு. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    தெய்வ நம்பிக்கையில் சிறந்த தனுசு ராசியினரே

    தன்னம்பிக்கை நிறைந்த தனுசு ராசியினருக்கு 2026ம் ஆண்டு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும் நிம்மதியாக சுதந்திரமாக செயல்படுவீர்கள்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    மே மாதம் வரை சம சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். விழிப்புடன் செயல்பட வேண்டிய வருடம். அர்த்தாஷ்டம சனி மற்றும் அஷ்டம குருவின் தாக்கம் இருப்பதால் தேவையற்ற அலைச்சலும் மன உளைச்சலும் வரலாம். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் அவசரப்படக்கூடாது. குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். இடப்பெயர்ச்சி வீடு மாற்றம் நாடு மாற்றம் ஊர் மாற்றம் வேலை மாற்றம் வரலாம்.

    பெரிய மனிதர்களின் தொடர்பால் சமுதாய அங்கீகாரம் கூடும்.மாணவர்கள் சிந்தனையை ஒரு நிலைப்படுத்தினால் வளமான எதிர்காலம் உண்டு. ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும். தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. தடை பட்ட சொத்து விற்பனை சாதகமாகும். உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    ஆண்டு முழுவதும் தனுசு ராசிக்கு 4ம் மிடமான சுகஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். விரயம், வைத்திய செலவு, காரியத் தடை முற்றிலும் நீங்கும். ஜூன் மாதத்தில் குரு பார்வை சனி பகவானுக்கு கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தம் இல்லாத குற்றத்தில் சிக்கியவர்கள் வம்பு, வழக்கிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள். சொத்துக்களின் மதிப்பு உயரும். பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்துக்கள் விற்று விடும்.

    பிரிந்து வாழ்ந்த குடும்ப உறவுகள் இணைந்து வாழும் யோகமும் ஒற்றுமையும் உண்டாகும். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். சிலருக்கு புதிய மனை வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்கம்டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் கணக்கை முறையாக வைத்துக் கொள்வது அவசியம். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்தில் ராகு பகவானும் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிப்பார்கள். டிசம்பர் 5, 2026 முதல் ராகு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது பகவான் 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சுரிப்பார்கள். ஆற்றலுக்கும், திறமைக்கும் பெருமை சேர்க்கும் சம்பவங்கள் நடக்கும்.ஊர் மாற்றம் வேலை மாற்றம், வீடு மாற்றம், பள்ளி மாற்றம் என அவரவர் வயதிற்கேற்ற மாற்றம் உண்டாகும். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும்.

    புதிய தொழிலுக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல மாற்றத்தை தரும். முதலாளி, தொழிலாளிகளிடம் கருத்து ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. சிலருக்கு மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். மூட்டு வலி, வயிறு சார்ந்த உபாதைகள் தீரும். பூர்வீக சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த தாய் வழி சீதனம் தேடி வரும்.

    மூலம்

    நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும் வருடம். இதுவரை இருந்த பயம் அகலும்.வேலையில் நல்ல சம்பளத்துடன் கூடிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம் வேலையில் கடினமாக உழைக்க நேரும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த உகந்த காலம். வராக்கடன்கள் வசூலாகும். பெண்களுக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    திருமண முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லைகள் அகலும். உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். தாயார் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். வெளிநாடு சென்றவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பும் சந்தர்ப்பம் உருவாகும்.நீண்ட கால பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். உயில் எழுத ஏற்ற காலம். வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். பிரதோஷ வழிபாடு செய்யவும்.

    பூராடம்

    சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறும் வருடம். மே மாதம் வரை ராசிக்கு குரு மற்றும் சனியின் பார்வையிருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். கடந்த காலத்தில் நிலவிய தடைகள் நீங்கும். புதிய வேலைக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு சொந்த தொழில் பற்றிய எண்ணம் அதிகமாகும். சிலருக்கு உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.பெரிய பதவிகளும் கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.சிலர் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும்.

    பெண்கள்,அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர்காலத்திற்கு திட்டமிட்டு படிப்பது அவசியம். எதிர்பாராத சில செலவுகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவதால் மன ஒற்றுமை அதிகரிக்கும்.ஆஞ்சநேயரை வழிபடவும்.

    உத்திராடம் 1

    பொருளாதார தேவைகள் நிறைவு பெறும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.தந்தையுடன் ஏற்பட்ட பிணக்குகள் சீராகும். அர்த்தாஷ்டம சனியின் காலம் என்பதால் பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. புதியதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு தள்ளிப்போகும். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும்.

    வீண் அவமானம் மறைமுக எதிர்ப்பு ஏற்படும். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சி பலிதமாகும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். பிறரின் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணைவார்கள். மூத்த சகோதரர், தந்தை பக்க பலமாக இருந்து உதவுவார். பெரிய பொருள் உதவிகள் கிடைக்கும். சுவாமி ஐயப்பனை வழிபடவும்.

    பரிகாரம்: வியாழக்கிழமை மாலை லட்சுமி குபேரர் வழிபாடு செய்வதால் செல்வ வளம் கூடும்.

    உழைக்கும் ஆர்வம் மிகுந்த மகர ராசியினரே...


    உழைப்பினால் காரியம் சாதிக்கும் மகர ராசியினருக்கு 2026ம் ஆண்டு. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். வசீகரமான தோற்றம் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் பலமும் உண்டாகும். அனைவரும் வியக்கும் வகையில் வாழ்க்கை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் மே மாதம் வரை குரு பகவான் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். ஜூன் மாதம் முதல் சம சப்தம ஸ்தானத்தில் உச்சமடைந்து ராசியை பார்ப்பார். ஆன்ம பலம் பெருகி சுறுசுறுப்பாக தைரியத்துடன் இருப்பார்கள். குடும்ப உறவுகளை குறிப்பாக உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வதால் கவலைகள் குறையும். இதனால் உடலில் இருந்த நோய்கள் நீங்கும் மன சஞ்சலங்கள் கவலைகள் கஷ்டங்கள் நீங்கி புதிய தெம்பு பிறக்கும். உங்கள் செல்வாக்கு கண்டு உறவினர்கள் கண் திருஷ்டி ஏற்படும். தடைப்பட்ட திருமண வாய்ப்புகள் கூடிவரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

    தடைபட்ட பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நிறைவேறும். சிலருக்கு அவ்வப்போது ஞாபக சக்தி குறையும். கண், காது, மூக்கு தொடர்பான பாதிப்புகள் வரலாம். அடமானத்தில் இருந்த வீடு, வாகனம், நிலபுலன், நகை அனைத்தும் மீண்டு வரும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் குடும்ப பாரத்தை சுமக்க நேரும். திருமணத் தடை அகலும். அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்றால் ஆனந்தமான வாழ்க்கை அமையும்.சிலர் வாழ்க்கைத் துணையின் பெயரில் தொழில் துவங்கலாம்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    2026ம் ஆண்டு முழுவதும் வெற்றி ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பார். மீண்டும், மீண்டும் வெற்றி வாய்ப்புகள் குவியும். தொழில் வளம் சிறக்கும்.அரசாங்க, வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். தொழிலில் சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. தாராள தனவரவு வந்து கொண்டே இருக்கும்.கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் வாங்க, வீடு கட்டும் பணி தொடர தேவையான நிதி உதவிகள் கிடைக்கும்.

    சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். புதிய சொத்துக்கள் சேரும். புத்திர பிராப்தம் கிட்டும்.வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். சிலர் மைத்துனருடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். சிறு பிரச்சினைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள், சகோதர, சகோதரிகள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். சிலர் பிள்ளைகள் உயர் கல்வி அல்லது உத்தியோகத்திற்காக வெளியூர் செல்லலாம்.

    ராகு-கேதுவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானும் அஷ்டம ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிக்கிறார்கள். தடை தாமதமான முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். சொத்து, சுகம், தடையில்லாத வருமானம் என வாழ்வில் புது விதமான மாற்றங்கள் அதிகரிக்கும். குடும்ப சுமை குறையும். வீண் பிடிவாதம், முன் கோபம் குறையும். தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுப்பீர்கள்.

    இடப்பெயர்ச்சி செய்ய நேரும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியல் வாதிகள் கவனமாக திட்டமிட்டு காய் நகர்த்த வேண்டிய காலம் .வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில் நிற்கும் ராகு பகவான் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து எட்டாம் இட கேது மூலம் வம்பு வழக்கை வீட்டு வாசலில் நிறுத்துவார். வாக்குறுதியே உங்களை கட்டம் கட்டி நிற்க வைக்கும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம். சந்தர்ப்பவாதியாக செயல்பட்டால் வீழ்ச்சியை சந்திப்பதில் சந்தேகம் இல்லை.

    உத்திராடம் 2,3,4

    மேன்மையான பலன்கள் உண்டாகும் வருடம். உங்களின் பேச்சுத் திறமையால் பிறரை ஈர்க்கும் சக்தி உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற அனைத்தும் சீராக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற நேரும். ஒரு சிலர் நாடு விட்டு நாடும் மாறலாம். திருமண யோகம் தாமதப் பட்டவர்களுக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு வேலை மாற்ற எண்ணம் அதிகரிக்கும்.

    புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. நீங்கள் விரும்பிய அப்பார்ட்மென்டில் விரும்பிய வீடு கிடைக்கும்.உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். போதுமான பணம் கிடைத்தாலும் செலவுகளும் மிகுதியாக இருக்கும். திருமணத் தடை நீங்கும்.பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். இந்த வருடத்தில் திருமண முயற்சி கைகூடும். கால பைரவரை வழிபடவும்.

    திருவோணம்

    வாழ்க்கையில் செட்டில் ஆகும் காலம் வந்துவிட்டது. உங்களின் லைப் ஸ்டைல் மாறப் போகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும். இதுவரை வேலை இன்மை மற்றும் தொழில் ஏற்ற இறக்கத்தால் பொருளாதார நெருக்கடி மற்றும் மன உளைச்சலை சந்தித்த உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட போகிறது. உங்களின் திடீர் வளர்ச்சி அண்டை அயலார் மற்றும் உற்றார் உறவினர்கள் மத்தியில் தனி அந்தஸ்த்தை பெற்றுத்தரும்.

    பேச்சை தொழிலாக கொண்ட பெயர், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு மகிழ்வை தரும். வேற்று மத , இன அல்லது மொழி பேசுபவர்களின் நட்பு கிடைக்கும் அல்லது வாழ்க்கைத் துணை கிடைக்கலாம். அந்நிய மொழியை கற்பதில் ஆர்வம் மிகும். அந்நிய மொழி பேசுபவரால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படலாம். பால்ய வயது குழந்தைகளுக்கு பேச்சு வருவதற்கு கால தாமதம் ஏற்படலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது கேட்பது நல்லது.

    அவிட்டம் 1, 2

    அசுப பலன்கள் குறைவாகவும் சுப பலன்கள் அதிகமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோகம் செயல்பட்டு லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தை, இன்சூரன்ஸ் உயில் சொத்து மூலம் ஆதாயம் கிட்டும். தொழில், பணி அல்லது குடும்ப சூழல் காரணமாக தம்பதிகள் சிறிது காலம் பிரிந்து வாழலாம். திருமணம் நிச்சயமாகும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும்.பிரிந்த தாய், தந்தை மீண்டும் இணைவார்கள். கவனக்குறைவான செயல்களால் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சினை ஏற்படும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். உடல்நிலை தேறும்.

    வாழ்க்கைத் துணையுடன் இருந்த பனிப் போர் மறையும். பொது வாழ்வில் இருப்பவர்களின் வெளிப்படையான பயமற்ற கருத்துகள் மக்கள் மத்தியில் நன் மதிப்பை அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் மிகும். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும்.பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்வது நல்லது. குலதெய்வத்தை வழிபடவும்.

    பரிகாரம்: பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து நந்தியையும் சிவபெருமானையும் வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

    உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே...

    அனுபவ அறிவால் வெற்றி பெறும் கும்ப ராசியினருக்கு 2026ம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள் பொறுப்புடன் செயல்படு வீர்கள். கடந்த கால கஷ்டங்கள் விலகும். எண்ணங்களில் பிரம்மாண்டம் இருக்கும். லட்சியங்களையும் கனவுகளையும் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.புகழ் அந்தஸ்து கவுரவம் உயரும். சிந்தித்து செயல்பட்டு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    கும்ப ராசிக்கு 2,11ம் அதிபதியான குரு பகவான் மே மாதம் 2ம் தேதி வரை வரை பஞ்சம ஸ்தானத்திலும் ஜூன் மாதம் முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் நின்று பலன் தருவார். சுமார் ஐந்து மாத காலங்களுக்கு ராசிக்கு குரு பார்வை கிடைப்பதால் சுப பலன்கள் கூடிவரும். திருமணம் குழந்தை பிராப்தம் போன்றவற்றில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குல தெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும்.ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள்.அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலை மாற்றம் செய்யக் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பல மடங்கு நன்மையான பலன்கள் நடக்கும்.

    வருமானம் உயரும். விண்ணப்பித்த வீடு வாகன கடன் கிடைக்கும். நிரந்தரமற்ற வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. செலவு குறையும் சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி உறுதி. பணப்பற்றாக்குறையால் அவமானங்களை சந்தித்த நீங்கள் பொருளாதாரத்தை பெருக்க பல புதிய வழிகளை தேர்ந்தெடுப்பீர்கள். தொழில் மற்றும் உத்தியோக விசயமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும்.தாயின் அன்பும் ஆதரவும் நல் ஆசியும் கிட்டும். தாயாருக்கும் இருந்த உடல் ரீதியான மனரீதியான தொந்தரவுகள் நீங்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    ராசி அதிபதி சனி பகவான் இந்த 2026ம் வருடம் முழுவதும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இதுவரை சமுதாயத்திற்கு வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமை பாராட்டப்படும் காலம். பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள். வெளிநாட்டிற்கு சென்று வருவீர்கள். அதிக அலைச்சல் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். ஆனால் பண வரவில் தடை தாமதம் ஏற்படலாம் என்பதால் பண விஷயத்தில் யாரையும் நம்ப கூடாது.

    குடும்ப பிரச்சனைகள் அகலும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும்.கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம்.அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள். பூர்வீக சொத்து அல்லது தாய் வழி சொத்து வீடு, கட்டிடம் நிலம் போன்றவற்றில் இருந்த எல்லைத் தகராறு சீராகும். பாகப் பிரிவினையால் மன சங்கடம் சீராகும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்குவீர்கள். அந்தஸ்தை விமர்சிக்கும் விதமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வீட்டை அழகு படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் முயற்சி வெற்றி தரும்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் ராசியில் ராகுவும் சம சப்தம ஸ்தானத்தில் கேதுவும் நிற்கிறார்கள்.டிசம்பர் 5, 2026 முதல் 12ம்மிடத்தில் ராகுவும் 6ம்மிடத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். ராசியில் ராகு நிற்பதால் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் தவறான தொழில் முதலீட்டில் ஈடுபட நேரும்.சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை தந்து தவறான பெரிய முதலீட்டில் வம்பு வழக்குகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் தொழில் தொடர்பான புதிய முயற்சிகளில் மிகுந்த கவனம் தேவை.

    விசுவாசமான வேலையாட்கள் உங்களை விட்டு விலகிப் போவார்கள். நம்பகமான வேலையாட்கள் இன்மை உங்களுக்கு நிம்மதியின்மையை தரும்.உடன் வேலை பார்பவர்கள் தாங்கள் செய்த தவறை உங்கள் மேல் திருப்பி விடலாம்.மேலாதிகாரியிடம் அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனை இல்லாமல் இந்த காலகட்டத்தை கடக்க முடியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் நன்றாக படித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.சிலர் குடியிருக்கும் வீட்டை சகாய விலைக்கு வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை வளர்ப்பவர்கள் விலங்குகளை கவனமாக பராமரிக்க வேண்டும்.

    அவிட்டம் 3, 4

    சுப பலன்கள் அதிகரிக்கும் வருடம். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். தலைமைப்பதவி தேடி வரும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை உங்களுக்கு இல்லை.மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும்.

    தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும்.வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். உடல் நலம் மற்றும் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

    சதயம்

    குடும்பத்தில் நிம்மதி கூடும் வருடம். ராசி அதிபதி சனி பகவான் தன தன ஸ்தானத்தில் தன லாபாதிபதி குருவின் பார்வை பெறுவதால் தன யோகம் சிறப்பாக அமையும். கணவன், மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகம் அதிகமாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும்.மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். சிலருக்கு மறுமண யோகம் ஏற்படும்.

    உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும்.அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும். பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.சிலருக்கு கடல் கடந்து வேலை செய்யும் யோகம் உண்டாகும். வம்பு, வழக்குகளில் இருந்து மீள்வீர்கள். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய்பாபாவை வழிபடவும்.

    பூரட்டாதி 1, 2, 3

    தடைகள் விலகும் வருடம். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடி வில் வெற்றியும் உண்டாகும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள்விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். தொழிலில்உண் டான நெருக்கடிகள் நீங்கும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும்.

    சுப கடன் வாங்கி பூமி, வீடு, வாகன, வசதியை பெருக்குவீர்கள். செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். ராசி அதிபதியை குரு பார்ப்பதால் கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் கூடும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாழக்கிழமை ஸ்ரீ லட்சுமி குபேரரை வழிபடவும்.

    பரிகாரம்: ஸ்ரீ வராகி அம்மனை வழிபட வாழ்க்கையில் எந்தவித தடங்கலும் வராது.

    நல்ல உள்ளம் படைத்த மீன ராசியினரே...

    எதிர்பார்த்த இலக்கை அடைய விரும்பும் மீன ராசியினருக்கு 2026ம் ஆண்டு செல்வாக்கை உயர்த்தி தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் செயலிலும் பேச்சிலும் அறிவு மேம்படும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    மீன ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் வருடத் துவக்கத்தில் மே மாதம் வரை 4ம் இடத்திலும் ஜூன் மாதம் முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவம் நடைபெறும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.உடன் பிறந்தவர்களுடன் தாய் வழிச் சொத்து விஷயத்தில் சிறு சலசலப்பு ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டம் சார்ந்த ஆதாயம் உண்டாகும்.

    கடந்த கால கடன்கள், பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும்.சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம் அல்ல.உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    மீன ராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனிபகவான் ஜென்ம ராசியில் ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பார். புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும். திருமணத்திற்கு இந்த வருடம் நாள் குறிக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சிலர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாயின் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.

    சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.சிலர் ஆன்மீகத்தை பயன்படுத்தி பொருள் சம்பாதிக்க முயலலாம். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். பலவீன மனத்தினர் சிலர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். ஜென்மச் சனி உள்ளதால் எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

    2026ம் ஆண்டின் துவக்கத்தில் விரய ஸ்தானத்தில் ராகு பகவானும் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது பகவானும் நின்று பலன் தருவார்கள். டிசம்பர் 5, 2026 முதல் ராகு பகவான் லாப ஸ்தானத்திலும் கேது பகவான் பஞ்சமஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். ஜென்மச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் குரு பார்வை ராசிக்கு இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது. உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.

    தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை நிறைவேற்றுதல் போன்ற சுப செலவு உண்டாகும்.பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகளால் மன அமைதி குறையும்.முன் கோபத்தில் பகைமை உருவாகும் என்பதால் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காரியத்தடையால் மன சஞ்சலம் அதிகரிக்கும்.

    பூரட்டாதி 4

    திருப்புமுனையான வருடம்.தொழில் முயற்சிகள் பலிதமாகும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள். திருமணத்தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

    பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த வருடம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தியாக மனப்பான்மை மிகுதியாகும். தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.

    உத்திரட்டாதி

    கடமைகள் நிறைவேறும் வருடம். ராசிக்கு சனி குரு சம்பந்தம் என கோட்சார கிரகங்கள் அனைத்தும் சாதகமாக உள்ளது.இதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும்.தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சில அசெளகரியங்கள் நடந்தாலும் முதலாளிக்காக நன்றியுடன் வேலை செய்வீர்கள்.

    இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். திருமணத்தடைத் அகலும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.மூத்த சகோதர,சகோதரி சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும்.சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். தினமும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சரபேஸ்வரரை வழிபடவும்.

    ரேவதி

    அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் வருடம். தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்சியும் உண்டாகும்.

    கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம். தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும்.நவீனமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும். வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபட சிறப்பான பலன் உண்டாகும்.

    பரிகாரம்: வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட இனம் புரியாத அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து விடு படுவீர்கள்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • சிம்ம ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு நல்லவிதமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.
    • பிறக்கப் போகும் 2026 ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு இன்பத்தில் திளைக்கும் ஆண்டாக அமையப் போகின்றது.

    புகழ்ச்சியை விரும்பும் சிம்ம ராசியினரே,,,,

    புகழ்ச்சியால் மகிழ்ச்சி அடையும் சிம்ம ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு நல்லவிதமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். லாபஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தாரள தன வரவு உண்டு. வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும். புதிய வாய்ப்புகள் கைகூடும் உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் உங்களது திறமைகளை உணர்வார்கள். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    சிம்ம ராசிக்கு 5,8-ம் அதிபதியான குரு பகவான் ஜுன்2, 2026 வரை 11ம் மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். அதன் பிறகு 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். அஷ்டமச் சனியின் தாக்கத்தால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழும் விருப்பம் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். வீடு, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். கர்பிணி பெண்களுக்கு ஆண் மகவு பிறக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும்.

    நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மனக் சஞ்சலத்தால் தாமதமாகும். யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக்கூடாது.

    சனியின் சஞ்சார பலன்கள்

    சிம்ம ராசிக்கு 6,7ம் அதிபதியான சனி பகவான் 2026ம் ஆண்டு முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் நின்று அஷ்டமச் சனியாக பலன் தருவார். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர்கள் யார்? பகடைக்காயாக பயன்படுத்துபவர் யார்? என்ற அனுபவ உண்மை புரியும். உடல் உபாதைகள், நோய் தொந்தரவு மாற்று வைத்தியத்தில் பலன் தரும். கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். தாய் வழியில் மனக்கவலை கருத்து வேறுபாடு உண்டாகும். புதிய முயற்சிகளைத் சுய ஜாதக பரிசீலனைக்கு ஏற்ப செய்வது நல்லது. பணவரவில் முன்னேற்றம் இருக்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாகப் பொழுதை கழிப்பார்கள்.

    சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.தம்பதிகள் அமைதி கடைபிடித்தால் நிலமை சீராகும். குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருந்தாலும் நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனைகளைத் தடுக்கும். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பொழுது போக்கான விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்திருந்த தொகை கிடைத்து பணவரவு சரளமாகும்.உங்கள் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும். பணியாளர்களால் சில அசவுகரியங்கள் ஏற்படலாம்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

    2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வரை கேது பகவான் ராசியிலும் ராகு பகவான் சம சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.இது அஷ்டம சனி பிரச்சனை, ஜென்ம கேது, ராகுவின் காலம் என்பதால் எதையும் எடுத்தும் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. வாழ்க்கை என்பது கண்ணாடி பாத்திரம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். எந்த கிரகம் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் திருமணம் முயற்சியை தவிர்ப்பது நல்லது. விருப்ப விவாகமோ பெற்றோர்களின் ஆசிர்வாத திருமணமாக இருந்தாலும் ஏழில் ராகு இருப்பதால் சில தவறான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து பின் நாட்களில் வருந்த நேரம் என்பதால் திருமணத்தை ஒத்தி வைப்பது சாலச் சிறந்தது.

    பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம்.அதனால் பார்க்கும் வேலையை மாற்றலாம். பெண்கள் இந்த கால கட்டத்தில் மாங்கல்ய சரடு மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை தவிர்க்கலாம்.கையில் காசு சரளமாக புரளும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விற்காமல் தேங்கிய சரக்குகள், கையிருப்பில் இருக்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனையாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

    மகம்

    மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வருடம். பூமி, மனை, வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். காணமல் போன நகை, பணம் கிடைக்கும். கடந்த கால கடன் பிரச்சனைகள் குறையத் துவங்கும். போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைத்து கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் பெறுவீர்கள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

    சிலருக்கு சளி, இருமல் காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். அஷ்டம சனி மற்றும் விரய குரு காலம் என்பதால் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் உபரி பணத்தை வேறு வகையில் முதலீடு செய்வது நல்லது. சிலர் பதிவுத் திருமணம் செய்து உற்றார் உறவினரை சங்கடப்படுத்துவர். தொழில் பங்குதாரரின் மேல் நம்பிக்கை குறைவு உண்டாகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.தினமும் சிவ கவசம் படிக்கவும்.

    பூரம்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய வருடம். வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக்கும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம்.

    குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன, சொத்து யோகம் உண்டாகும். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்சியை அதிகரிக்கும். பெண்களின் ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும்.வீண் விரயம் அல்லது வைத்தியச் செலவு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். வருமானத்தில் பெரும் பகுதி கடனுக்கு செல்லும். வியாழக்கிழமை குரு பகவானை வழிபடவும்.

    உத்திரம் 1

    மேன்மையான பலன்கள் உண்டாகும் வருடம்.சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.மாற்றுமுறை வைத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். சிலருக்கு தாய்வழிச் சொத்தில் தாய்மாவுடன் எல்லைத் தகறாறு உண்டாகும்.மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கும்.

    விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும்.சிலருக்கு எண்ணங்களை செயலாக மாற்ற முடியாது. மனதில் இனம் புரியாத பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர் கிடைப்பார்கள்.அரசு வழி ஆதாயம் உண்டு. தந்தையின் கட்டளைக்கு இணங்குவீர்கள். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும். குல தெய்வ வழிபாடு நற்பலன் தரும். தினமும் சிவபுராணம் படிக்கவும்.

    பரிகாரம்: மாதம் ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திரம் நாளில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வருவதால் நவகிரக தோஷம் விலகும்.

    எதிலும் சிறப்பாக செயல்படும் கன்னி ராசியினரே...

    பிறக்கப் போகும் 2026 ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு இன்பத்தில் திளைக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. அடடா மழைடா அடை மழைடா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கன்னி ராசியினர் வீட்டில் பண மழை பெய்யும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள். தடைபட்ட பணிகள் மளமளவென்று நிறைவேறும். புதிய தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும். தைரியசாலியாக இருப்பீர்கள். பயம் என்பதே இருக்காது.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    கன்னி ராசியினருக்கு 4,7ம் அதிபதியான குரு பகவான் ஜூன் 2, 2026 வரை பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். அதன் பிறகு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட சுய தொழில் ஆர்வம் உருவாகும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

    தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வருடம். கடுமையாக உழைப்பீர்கள். பல சிக்கல்கள், சங்கடங்களிலிருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும். மறுதிருமணத்திற்கு நல்ல வரன் அமையும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    கன்னி ராசிக்கு 5,6ம் அதிபதியான சனி பகவான் ஆண்டு முழுவதும் ராசிக்கு ஏழாம் இடத்தில் நின்று கண்டகச் சனியாக பலன் தருவார். குருபகவான் கூட்டுத் தொழிலை தந்தால் கூட சுய ஜாதக ரீதியான தசாபுத்தி காலம் அறிந்து கூட்டு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.தசா புத்தி சாதகமற்றவர்கள் நிதானமாக செயல்பட்டால் எதிர் விளைவுகள் வராது. மதிப்பு, மரியாதை கூடும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாகும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள்.

    பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.தாராள தன வரவு ஏற்பட்டாலும் மிகைப்படுத்தலான சுப விரையமும் இருக்கும். குரு பார்வை ராசிக்கு 7ம் இடத்தில் பதியும் காலகட்டங்களில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் இணையலாம்.பிள்ளைகளுக்கு சாதகமான நேரம் இருப்பதால் கவலையின்றி இருக்கவும். உயில் எழுத, திருத்தம் செய்ய உகந்த நேரம். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அகலும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:

    தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு 12ம் இடத்தில் கேதுவும் 6ம் மிடத்தில் ராகுவும் சஞ்சரிகிறார்கள். டிசம்பர் 5, 2026 முதல் கேது பகவான் 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். ராகு பகவான் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார். எதிரிகளை வெல்லும் தைரியம் உண்டாகும். போட்டிப்பந்தயத்தில் வெற்றி உண்டாகும். பாவம் புண்ணியம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். இதனால் சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம்.

    வரவும் செலவும் சமமாக இருக்கும். வீடு கட்ட போட்ட பட்ஜெட் எகிறும். புதிய கடன் தொகைக்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகுவீர்கள். சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் விரும்பிய மாற்றத்தை தரும் என்பதால் நம்பிக்கை மிக முக்கியம். சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம். கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு பயணம் செல்லலாம். பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முடியும்.

    உத்திரம் 2,3,4:

    தடைகள் தகர்ந்து வெற்றி நடைபோடும் வருடம். லாப குருவால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனதில் புதிய தெம்பு, தைரியம் குடி புகும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். நேரம் காலம் சாதகமாக இருந்தாலும் எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட வேண்டும்.

    சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதிலும் விருப்பம் கூடும். குடும்ப உறவுகளின் செயல்களில் நன்மை இருக்கும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானம், குத்தகை பணம் வரத்துவங்கும்.முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து செயல்களும் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.

    அஸ்தம்:

    பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வருடம்.குருவின் பார்வை 7ம் இடத்தில் உள்ள சனியின் மேல் பதிவதால் மனக் கவலைகள் அகலும்.லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். வாழ்க்கையே போராட்டமாக இருந்த நிலை மாறும். சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி கூடும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். சேமிப்புகள் கூடும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் குரு பகவானை சேரும்.தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும்.

    தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். சிலருக்கு திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் கை ஓங்கும்.வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும்.

    சித்திரை 1, 2:

    எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மகிழும் வருடம்.செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். வருமானம் உயர்வதால் உங்கள் சொல்வாக்கிற்கு மதிப்பு உயரும். குடும்பத்தில் நிம்மதி நிறைந்திருக்கும். கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும்.அடமான நகைகளை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.திருமணம் நடக்கும்.

    குழந்தை பாக்கியம் உண்டாகும். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும். 7ம் இடத்தில் சனி பகவான் நிற்பதால் திருமண விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும். வாரம் ஒரு முறை விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

    பரிகாரம்: உங்கள் ஊரின் எல்லை தெய்வம் காவல் தெய்வங்களை வழிபட நினைத்ததை சாதிக்கக்கூடிய வல்லமை உண்டாகும்.

    நியாயமான துலாம் ராசியினரே...

    நியாயம் தர்மத்தில் நம்பிக்கை நிறைந்த துலாம் ராசியினருக்கு 2026-ம் ஆண்டு நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் நீங்கள் எண்ணியது ஈடேறும். உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட உங்களது திறமைகளை உணர்வார்கள். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்கள் சீராகும். நிம்மதியாக இருப்பீர்கள். சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள்.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 2.6.2026 முதல் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுப் பெறப் போகிறீர்கள். உங்களின் கற்பனைகள் கனவுகள் நனவாகும். இளமையாக பரபரப்பாகவும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும். வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும். பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு கூடும் அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.

    பொருளாதார ஏற்றத் தாழ்வு அகலும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். குல தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொத்துக்கள், அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுப விசேஷங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலைமாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும்.தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    துலாம் ராசிக்கு 4,5ம் அதிபதியான சனி பகவான் ஆண்டு முழுவதும் 6ம் மிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியைத் தரும். பணிச் சுமை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்துக்கு உதவும். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் வரலாம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். திருமண வாய்ப்பு கூடி வரும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். அரசியல் பிரமுகர்களின் பொறுப்புகள் கூடும்.

    மாணவர்கள் அக்கரையாக படிப்பார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப விசேஷங்கள் நடக்கும்.தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். அதிக வேலைச் பளுவால் உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அல்சர் போன்ற உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 6ல் உள்ள சனிபகவான் கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். எனினும் எல்ல விஷயத்தையும் பொறுப்புடன் பொறுமையாக கையாள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:

    தற்போது கோட்சாரத்தில் துலாம் ராசிக்கு 5ம்மிடத்தில் ராகுவும் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 5.12.2026 முதல் சுக ஸ்தானத்தில் ராகுவும் தொழில் ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார். பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வெளிநாட்டு முயற்சிகள் பலன் தரும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளவது சற்று கடினமாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வைத்தியத்தில் கட்டுப்படும்.

    பொருளாதார நிலையில் நல்ல நிரந்தரமான உயர்வு ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அரசியல்வாதிகள் மெளனமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். வம்பு, வழக்குகள் சாதகமாகும். பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம். தாய்மாமன் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

    சித்திரை 3,4:

    காரிய தடைகள் நீங்கும் வருடம். கிரகங்களின் நிலவரம் சித்திரை நட்சத்திரத்திற்கு மிகச் சாதமாக உள்ளது. கவலைகள் அகலும் உற்சாகமாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தடைபட்டிருந்த தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும்.

    வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். திட்டமிட்டு செயல்படுவதால் காரிய ஜெயம் உண்டாகும். நோய் பாதிப்புகள் குறைய துவங்கும். இழுபறியான பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். விவகாரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும். எந்த செயலையும் இடம் பொருள் ஏவல் பார்த்து நடத்த வேண்டும் யாரையும் பகைக்க கூடாது. முருகனை வழிபடுவதால் இன்பங்கள் கூடும்.

    சுவாதி:

    பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வருடம். பொதுவாக ஒரு ஜாதகத்தில் 5ம் இடத்தில் உள்ள கிரகங்கள் மிக நன்மையை செய்யும். அந்த வகையில் தற்போது அதிர்ஷ்டத்தை கூறும் ஐந்தாம் இடத்தில் நட்சத்திரநாதன் ராகு பகவான் நிற்பதால் வருமானம், பெயர், புகழ் அந்தஸ்து உயரும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். தொழிலில் போட்டிகள் இருப்பினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும்.

    குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும். திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். விலகிய குடும்ப உறவுகளின் புரிதல் மகிழ்ச்சி அதிகரிக்கும். விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். காலத்தின் அருமை அறிந்து செயல்பட வெற்றி நிச்சயம். ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபடவும்.

    விசாகம் 1, 2, 3:

    துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026ம் ஆண்டு தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட மனக்குழப்பம், பணிச் சோர்வு அகலும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும் சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம்.

    பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பார்க்கும் வேலையை மாற்ற செய்ய வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு தேடி வந்தாலும் பணிச் சுமை உங்களை வாட்டும். சிலருக்கு குடும்ப நிர்வாகச் செலவு, வீண் விரயங்கள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். தினமும் கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.

    பரிகாரம்: காஞ்சி காமாட்சியை வழிபட லட்சுமி கடாட்சம் அதிகமாகும்.

    உயர்வான எண்ணம் கொண்ட விருச்சிக ராசியினரே....

    எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் மிகுந்த விருச்சிக ராசியினருக்கு 2026 ம் ஆண்டு நல்ல வாய்ப்புகளை பெறக்கூடிய ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சில சங்கடங்கள் தோன்றினாலும் பிற்பகுதி நல்ல வாய்ப்புகளை வழங்கும்.உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த எதிர்ப்புகள் அகலும்.எதையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். விரைந்து வேகமாக செயல்படுவீர்கள். தொட்டது துலங்கும்.பட்டது பூக்கும். புதிய மாற்றம் உண்டாகும். சம்பாதிக்கும் பணத்தில் உபரியாகும் லாபத்தை முறையாக சேமித்து வைத்துக் கொண்டால் கிரக சூழ்நிலை சாதகமற்று இருக்கும் காலங்களில் நிம்மதியாக இருக்க முடியும்.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    மே மாதம் 2026 வரை குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் நிற்பார். ஜூன் 2ம் தேதி முதல் பாக்கிய ஸ்தானத்தில் நின்று பலன் தருவார். 2026 ஆம் ஆண்டு விருச்சிக ராசியினருக்கு விட்டதை மீட்டு பிடிக்கும் காலமாகும். உங்களிடம் புதிய தெளிவு பிறக்கும் அறிவாற்றல் மேம்படும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். அஷ்டம குரு காலத்தில் விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். அஷ்டம குருவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். பாக்கிய ஸ்தான குரு பகவான் இடமாற்றத்தை தந்து அதன் மூலம் நல்ல பலன்களை வழங்குவார். ஒருவர் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தில் உயர்ந்து நிற்கும். வரா கடன்கள் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகி கடனை அடைக்க கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.

    வீடு வாகன யோகம் என வளமான வாழ்க்கையை வாழ போகிறீர்கள். நாலு பேருக்கு உதவி செய்து சமூக மரியாதையை அதிகரிப்பீர்கள். அரசு சார்ந்த துறை மூலம் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகன் மருமகள் வரும் நேரம் இது. சுய உழைப்பினால் வெற்றியை தக்க வைத்துக் கொள்வீர்கள். வருமானம் உயர்வதால் வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு உயரும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை வாக்கு வாதங்களை குறைத்தால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். உயர்வுகள் உண்டாகும் வருடமாக இது இருக்கும். புதிய தொழில் எண்ணங்கள் வரும். அதை செயல்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். சில நேரங்களில் விரய செலவுகள் இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய அளவில் வருவாயும் இருக்கும். மாணவர்கள் விரும்பிய பாடத்திட்டத்தில் இணைந்து படிப்பீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். சொந்த வீடு வாகனம் அழகு ஆடம்பரப் பொருட்கள் என வாழ்க்கை இன்பமயமாக மாறும். எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.

    திருமணம் ஆன தம்பதிகள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்து சென்றால் வாழ்க்கை இன்பமாகும். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமண முயற்சியில் ஈடுபடலாம். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடக்கும். எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ராகு கேதுவின் மையப்புள்ளியில் ராசியும் 7ம்மிடமும் இருப்பதால் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:

    ஆண்டின் துவக்கத்தில் ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். 5.12.2026 முதல் ராகு பகவான் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திலும் கேது பகவான் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது பழமொழி. திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உபரி லாபத்தை அரசு நிதி நிறுவனங்களில் சேமிப்பது முக்கியம். அல்லது வீடு வாகனம் என சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது.

    மேலும் திருமணம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. எந்த புதிய முயற்சிகளையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் இருந்தால் வருட கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. சந்தோஷத்தில் கிடைக்கும் அனுபவத்தை விட வலியில் கிடைக்கும் அனுபவத்திற்கு பலம் அதிகம். கடந்த சில மாதங்களாக அனுபவ பாடத்தை சனி ராகு கேதுக்கள் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். கடவுள் கெட்டவர்களை சோதிக்க மாட்டார். சோதனை காலங்களில் காப்பாற்ற மாட்டார். நல்லவர்களை அதிகம் சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார் எனவே கவலை வேண்டாம்.

    விசாகம் 4:

    செல்வாக்கு அந்தஸ்து உயரும் வருடம். இந்த வருடம் முழுவதும் இதுவரை கடனால் ஏற்பட்ட பாதிப்புகள் சிறிது சிறிதாக குறைய துவங்கும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலையில் இருந்து மீள துவங்குவீர்கள். உங்களின் தனித்திறமையால் குடும்பத்தை உயர்த்துவீர்கள். முன்னேற்ற பாதை தென்படும். புதுப்பொலிவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடங்கள் அகலும். பூர்வீகச் சொத்துக்களில் நிலவிய சங்கடங்கள் விலகும். உங்கள் பங்குச் சொத்து முறையாக வந்து சேரும்.

    மனதில் நினைத்ததை செயல்படுத்தக் கூடிய வகையில் சொல்வாக்கு செல்வாக்கு உயரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய வைத்தியம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். சிலருக்கு புதிய தொழில் துவங்கும் எண்ணம் உருவாகும். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. சந்தர்ப்பம் அமையும் போது காஞ்சி காமாட்சியை வழிபட நிலையான செல்வாக்கு உண்டாகும்.

    அனுஷம்:

    கோட்ச்சார கிரகங்கள் சாதகமாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நம்பிக்கை அதிகரிக்கும். சேமிப்பு, சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலம். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சக ஊழியர்களுடன் நிலவியபிணக்குகள் மறையும். தொழில், வியாபாரத்தில் நிலவிய போட்டி, பொறமைகளை சமாளிப்பீர்கள். விவசாயிகள் ஏற்றம் பெறுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும்.

    இந்த வருடம் முழுவதும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், லாபம் உங்களை மகிழ்விக்கும். பிள்ளைகளுக்கு உத்தியோகம், திருமணம் சுப நிகழ்வு போன்ற நல்ல விசயங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும். சிலருக்கு இளைய சகோதரரால் தொழில் விரயம், முடக்கம், வில்லங்கம் ஏற்படலாம்.சுப மங்களச் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். சாதகமும் பாதகமும் நிறைந்த காலம் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரை வழிபடவும்.

    கேட்டை:

    தடை, தாமதங்கள் விலகி நினைத் ததை நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பம் கூடிவரும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். பற்றாக் குறை வருமானத்தில் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு பணம் எனும் தனம் சமூக அந்தஸ்து பெற்றுத் தரும்.ராஜ மரியாதை கிடைக்கும். உங்கள் முயற்சியால் வெற்றியும்,சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும்.தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்ற மக்களால் பெருமை சேரும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    உற்சாகமான மன நிலை இருப்பதால் வேலையில் இருந்த விரக்தி தன்மை மாறும். சிலருக்கு ஆடம்பர வீடு, ஆடம்பர கார் வாங்கும் வாய்ப்பு உண்டு.கவுரவப் பதவிகள் தேடி வரும். தற்காலிக உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரமாகும். வாழ்கையிலும், தொழில், உத்தியோகத்திலும் முன்னேற்றமான நல்ல மாற்றம் உண்டாகும். பிரதோசத்தன்று பிரதோஷ காலத்தில ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபடவும்.

    பரிகாரம்: விருச்சிக ராசியினர் திருச்செந்தூர் முருகனை வழிபட நிலையான முன்னேற்றங்கள் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • வருகிற 2-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இன்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை தனுர் மாத சுபமுகூர்த்தத்தில் 1.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.

    முதலில் வி.ஐ.பி.க்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, தனது மனைவி குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.

    இதேபோல் நடிகர் சிரஞ்சீவி தனது மனைவி சுரேகா, மகள்கள் சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருடன் தரிசனம் செய்தார். காலை 6 மணிக்கு மேல் சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று முதல் 3 நாட்கள் ஏற்கனவே தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    வருகிற 2-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பக்தர்களை கட்டுப்படுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி கூறியதாவது:-

    வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 8-ந்தேதி வரை அதிகாலை 1.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை தொடர்ந்து 20 மணி நேரம் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் வந்தால் 2 அல்லது 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது.

    மேலும் குடிநீர், டீ, காபி போன்றவையும் வழங்கப்படுகிறது. சிறுவர்களுக்கு பால் வழங்கப்பட்டு வருகிறது. 4.50 லட்சம் லட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

    • உற்சாகமான மேஷ ராசியினருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    • ரிஷப ராசியினருக்கு 2026ம் ஆண்டு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

    மேஷ ராசி நேயர்களே!

    உற்சாகமான மேஷ ராசியினருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிறக்கப் போகும் 2026ம் ஆண்டு மேஷ ராசியினருக்கு லாபத்தை ஏற்படுத்தி தரக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டின் கிரக நிலவரங்கள் மேஷ ராசிக்கு மிக சாதகமாக இருப்பதால் உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாழ்க்கையை நடத்துவதில் நிலவிய சங்கடங்கள் அகலும். உங்களின் முயற்சிகள் வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும். சில சில சங்கடங்கள் வந்தாலும் அவற்றை உங்கள் திறமையால் சரி செய்து முன்னேற்றம் அடைவீர்கள்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    2026 ஆம் ஆண்டு துவக்கத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கப் போகிறார். 2026 ஜூன் மாதம் 2ம் தேதி முதல் 4ம்மிடமான சுகஸ்தானத்திற்கு செல்கிறார். இது உங்களுக்கு இழந்ததை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். தடைபட்ட பாக்கியங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் முயற்சிக்கு உகந்த அற்புதமான நேரம். முன்னோர்களின் நல்லாசியால் பூர்வ புண்ணிய பலத்தால் சொத்துத் தகராறுகள் அகலும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என அவரவர் வயதிற்கேற்ற சுப பலன்கள் உண்டு. பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கும்.

    சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும். பொருளாதாரத்தில் நிலவிய சிக்கல், சிரமங்கள் விலகி பொருள் வரவு அதிகரிக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். அடமானப் பொருட்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். சொத்துக்கள் சேர்க்கை அதிகமாகும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும்.சொத்துக்களின் மதிப்பு உயரும்.ஆரோக்கியத்தில் நிலவிய பாதிப்புகள் அகலும். திருமணம், குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். பெண்களுக்கு தாய் வழியில் சொத்துக்கள், பணம், நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சனியின் சஞ்சார பலன்கள்

    2026ம் ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் நின்று விரயச் சனியாக பலன் தருவார். இது மேஷ ராசிக்கு ஏழரைச் சனியின் காலமாகும். தடைகள் தகரும் வாரம். பொதுவாக ராசி மற்றும் லக்னத்திற்கு அசுப கிரகங்களான சனி, ராகு, கேது, செவ்வாய் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. கடந்த காலங்களில் ராசியை சனி பார்த்ததால் ஏற்பட்ட சங்கடங்கள் அதிகம். தற்போது ஏழரைச் சனி துவங்கினாலும் சனியின் பார்வை ராசியில். பதிந்த காலத்தில் ஏற்பட்ட துன்பத்துடன் ஒப்பிட்டால் எதுவும் நடக்காதது போல் இருக்கும். எனவே மனதை அலட்டாமல் நேர்மையுடன், நியாயத்துடன் செய்யக் கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். தடைகள் தகரும்.

    இதுவரை இருந்த வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். வாழும் கலையை உணர்ந்த உங்களை எந்த வினையும் பாதிக்காது. அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டிய காலமாகும். பள்ளி கல்லூரி படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்

    2026ம் ஆண்டின் துவக்கத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது பகவானும் லாப ஸ்தானத்தில் ராகு பகவானும் சஞ்சரிப்பார்கள். 5.12.2026 முதல் சுகஸ்தானத்தில் கேது பகவானும் தொழில் ஸ்தானத்தில் ராகு பகவானும் சஞ்சரிப்பார்கள். ஒரு ஜாதகத்தில் பணபர ஸ்தானம் என்பது 2, 5, 8,11ம் மிடங்களாகும். தற்போது கோச்சாரத்தில் 11ம் இடத்தில்நிற்கும் ராகு பகவான் ஆண்டு முழுவதும் உங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை வழங்க காத்திருக்கிறார். பாதியில் அரைகுறையாக நின்ற அனைத்துப் பணிகளும் துரிதமாகும். அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். திட்டமிட்டபடி பாகப் பிரிவினைகள் சுமூகமாகும். தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும். பிறவிக் கடன் மற்றும், பொருள் கடனிலிருந்து விடுபடுவீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும்.

    பூர்வீகத்தில் புதிய அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். பெண்களுக்கு தந்தையின் பூர்வீக வீடு, பங்களா கிடைக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். திருமண முயற்சி கைகூடும். மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு அகலும்.

    அசுவினி

    மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அறிவாற்றல் மெருகேறும். வெகு விரைவில் வளமான எதிர்காலம் ஏற்படும். உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு எதிராக செயல் படுபவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. குடும்பத்தில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடிகள் விலகும். சமூக அந்தஸ்து உயரும். தடைகள் தகர்ந்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும்.

    பிள்ளைகளால் பெருமை சேரும். பணவரவு அதிகரிக்கும் பொற்காலம் என்றால் அது மிகையாது. அடமான நகைகள் மீண்டு வரும். தேவையான உதவிகள் விரும்பிய இடத்திலிருந்து கிடைக்கும். வயதானவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் சுப காரியங்களை முன்னின்று நடத்தும் கடமையும். தொழில், உத்தியோகம் அனுகூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் திருமண வாய்ப்புகள் கூடிவரும்.நோய்த் தாக்கம் குறையும். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். விநாயகர் வழிபாட்டால் இன்பங்களை அதிகரிக்க முடியும். பசுவிற்கு அகத்திக்கீரை தானம் வழங்க நன்மைகள் அதிகரிக்கும்.

    பரணி

    நம்பிக்கை அதிகரிக்கும் வருடம். உங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்த போகிறது. வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தைகள் நடக்கும். ஆடம்பரச் செலவை குறைத்து எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நடைபோட முடியும். குடும்பத்தில் ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். திடீர் எதிர்பாராத பணவரவால் தேவைகள் அனைத்தும் நிறைவு பெறும். தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது. அதிக முதலீடுகள் கொண்ட தொழில் நடத்துபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

    இதுவரை கடனை திரும்பத் தராத உறவுகள் கடனை செலுத்துவார்கள். பூமி,வீடு, வாகனம் வாங்கும் சிந்தனைகள் மேலோங்கும். தாய்வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் கருத்து வேறுபாடு, பகைமை உருவாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. அமைதியாக இருப்பது அவசியம். அமைதியால் அனைத்து பிரச்சனைகளும் அடிப்பட்டு போகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். மாணவர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பயிற்சியை கடைபிடிப்பது நல்லது. கருமாரியம்மனை வழிபட்டால் மன நிம்மதி கூடும்.

    கிருத்திகை 1

    இழுபறிகள் குறையும்.தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வர்த்தகம் லாபத்துடன் நடக்கும். அதிர்ஷ்டசாலியாக திகழ்வீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப் பிரிவினை பங்கு சொத்தாகவோ, பணமாகவோ முழுமையாக வந்து சேரும். சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சிலருக்கு மனைவி வழி சொத்தில் மாமனாருடன் நிலவிய கருத்து வேறுபாடு மாறும். தடைபட்ட வெளிநாட்டு பயணம், வேலை வாய்ப்பு கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்.

    பெண்களுக்கு உயர்ரக ஆடம்பர ஆடை, பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரரால் சகாயங்கள் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான மாற்றங்கள் உண்டாகும். நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிதம்பரம் நடராஜரை வழிபட மேன்மையான பலன்கள் நடக்கும்.

    பரிகாரம்: பழனி மலை முருகனை வழிபடுவதால் மலை போல் வந்த துயரம் பனி போல விலகும்.

    ரிஷப ராசி நேயர்களே!

    நிம்மதியை விரும்பும் ரிஷப ராசியினருக்கு 2026ம் ஆண்டு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வருடமாக அமைய நல்வாழ்த்துக்கள்.எந்த ஒரு செயலிலும் வேகம் இருக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு ஆரோக்கியத்தை காப்பாற்றக்கூடிய வகையில் ஓய்வு நிம்மதியான தூக்கம் சந்தோஷமான வாழ்க்கை என்ன நிம்மதியாக இருப்பீர்கள். பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. இந்த 2026ம் ஆண்டு பத்தாம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் தொழிலில் முன்னேற்றமான பலன்களை எதிர்பார்க்கலாம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களின் சாதனைகள் பாராட்டப்படும். இதுவரை தடை தாமதத்தை ஏற்படுத்திய அனைத்து முயற்சிகளும் சாதகமாகும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் 2026 ஜுன் 2 முதல் வெற்றி ஸ்தானத்திற்கு செல்லப் போகிறார். குருபகவான் தனம், வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 5 மாத காலம் திட்டமிட்டு செயல்பட்டால் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். நீங்கள் விரும்பிய இடப்பெயர்ச்சி நடக்கும். ஊர் மாற்றம் வேலை மாற்றம் பதவி மாற்றம் வரலாம். தொழிலில் கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகள் குறைந்து படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். ஸ்திர சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய அமைப்புகள் உள்ளது. தாயையும் தாய் வழி உறவுகளையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். அடமான நகைகள் சொத்துக்களை மீட்கக்கூடிய அமைப்பு உள்ளது.

    உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். கற்ற கல்வி பலன் தரும். நிரந்தர வேலை கிடைக்கும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் பிறர் மதித்திடக் கூடிய உயர்வான நிலையை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தினால் மருத்துவச் செலவு குறையும். கண், பல் முகம் போன்றவற்றில் அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாக இருக்கும். திருமணத்திற்கான முயற்சிகள் சாதகமாகவே இருக்கும். பெரிய எதிர்பார்ப்பை குறைத்தால் 2026 இல் திருமணம் நடக்கும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    ரிஷப ராசிக்கு ஆண்டு முழுவதும் சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். உழைப்பிற்கான பலன் கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட், பங்குச் சந்தை போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான லாபகரமான பலன் கிடைக்கும். பொதுவாக சனி பகவானோ ராகு கேதுவோ 11ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு வரும்போது சுயதொழில் பற்றிய ஆர்வம் அதிகம் இருக்கும்.

    தற்போது லாப ஸ்தானத்தில் சனி பகவான் நிற்பதால் பலருக்கு சுயதொழில் ஆர்வம் உதயமாகும். அடுத்து சனிப் பெயர்ச்சியாகி மேஷ ராசிக்கு வந்தவுடன் உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகும்.உங்கள் சுய ஜாதக ரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் இப்போது புதிய தொழில் தொடங்கலாம். தசா புக்தி சாதகமற்றவர்கள் இருப்பதை காப்பாற்றிக் கொள்வது நல்லது. நடக்க கூடிய தசா புத்திகளே ஒருவருக்கு வாழ்வின் பலன்களை நிர்ணயிப்பதால் பெரிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு சிந்தித்து செயல்படுவது நல்லது. அதே நேரத்தில் முதலீடு இல்லாத சுய தொழில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் கேதுவும் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் ராகு பகவானும் நின்று பலன் தருவார்கள். 5.12.2026 அன்று கேது பகவான் 3ம்மிடமான வெற்றி ஸ்தானத்திற்கும் ராகு பகவான் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் செல்கிறார்கள். பொதுவாக 4,10ம் இடங்களில் ராகு கேதுக்கள் சஞ்சரிக்கும் காலம் லக்னத்திற்கும் ஏழாம் இடத்திற்கும் பாதிப்பு ஏற்படும். இந்த காலகட்டங்களில் திருமணத்திற்கு வரம் தேடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் தேட வேண்டும் தவறான வரனை நம்பி பின்னாளில் வருத்தப்படக்கூடாது. அதேபோல் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையுடன் எந்தவித கருத்து வேறுபாடும் வைத்துக் கொள்ளக் கூடாது.

    தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சிலர் தாய் வழி உறவுகளுடன் தேவை–யற்ற பகைமையை ஏற்படுத்–திக் கொள்வார்கள். புதிய சொத்துக்களை வாங்கும் போதும் விற்கும்போதும் அனுபவஸ்தர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. சிலர் தவறான விலை நிர்ணயம் செய்து விடுவார்கள். உதாரணமாக ஒருவர் வாங்கக் கூடிய சொத்தின் மதிப்பு 5 லட்சம் என்றால் 6 லட்சத்திற்கு வாங்குவார்கள். அதே நேரத்தில் ஒருவர் விற்கக்கூடிய சொத்தின் மதிப்பு 5 லட்சம் என்றால் 4 லட்சத்திற்கு விற்பார்கள். இழப்பு எந்த விதத்தில் வேண்டுமானாலும் ஏற்படும் என்பதால் சாதகம் பாதகம் அறிந்து செயல்பட வேண்டும்.

    கிருத்திகை 2, 3, 4

    திடீர் முன்னேற்றங்கள் உண்டாகும் வருடம். லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவான் எதிர்பாராத வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரலாம். காலம் கனியும்போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். வீடு, வாகன யோகம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். சகோதர சச்சரவுகள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    விரைவில் சிலர் தொழில், வேலைக்காக குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்லலாம். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். அரசு பணியாளார்கள் வீண் பழியிலிருந்து விடுபடுவார்கள். திருமண வரன் பார்ப்பதில் கவனம் மற்றும் பொறுமை தேவை. சிலருக்கு விருப்ப திருமணம் நடைபெறும். வீடு, வாகன யோகம் கை கூடி வரும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும். வியாழக்கிழமை நவக்கிரக குரு பகவானை வழிபடவும்.

    ரோகிணி

    சந்திரனின் ஆதிக்கம் பெற்ற ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026ம் ஆண்டில் விவேகத்துடன் செயல்பட்டு விரும்பிய இலக்கை அடைவீர்கள். தனித்திறமை வெளிப்படும். முயற்சியில் தளர்ச்சி இல்லாத வளர்ச்சி உண்டாகும். புதிய தேடல்கள் உருவாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடன் பிறப்புகளால் அனுகூலமும், ஆதாயமும் உண்டாகும். பொன் பொருள், சேர்க்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பெற்ற பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும்.

    தந்தை வழி உறவுகளிடம் இருந்த சங்கடங்கள், பிரச்சனைகள் விலகி ஆதரவு உண்டாகும். தொழில், உத்தியோக ரீதியான வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். கடன், நோய், எதிரி தொல்லைகள் அகலும். கணவன், மனைவி அன்பாக இல்லறம் நடத்துவார்கள். புதிய வீடு வாங்குதல், புதிய வீடு கட்டி குடிபுகுதல், போன்ற பாக்கிய பலன்கள் இனிதே நடந்தேறும். போட்டி பந்தயங்கள், கலந்து கொள்பவர்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீண்ட காலமாக தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபடவும்.

    மிருகசீரிஷம் 1,2

    எதிர்பாராத தன லாபம் உண்டாகும் வருடம். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு கூட நம்பிக்கையை அதிகரிக்கும் விதமான மாற்றங்கள் ஏற்படும்.அரசு உத்தியோகத்திற்கு நல்ல செய்தி தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கிய நிலை மாறும். தேவையற்ற செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும்.புதிய சொத்துகள் வாங்கும் போது முறையான பத்திரப் பதிவுவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். புத்திர பிராப்தம் உண்டாகும். திருமணத் தடை அகலும். மன ரீதியாக, உடல் ரீதியாக அனுபவித்த வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நோய்கள் சாதாரண வைத்தியத்தில் குணமாகும். குல தெய்வ கோவில் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்தாலும் மூன்றாம் நபரின் குறுக்கீடு நிம்மதி குறைவை ஏற்படுத்தும் என்பதால் பிறரின் நயவஞ்சக பேச்சை நம்பக்கூடாது.வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும்.அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு சிறப்பு.

    பரிகாரம்: சுப பலனை அதிகரிக்க கால பைரவரை அரளி மாலை அணிவித்து வழிபடவும்.

    மிதுன ராசி நேயர்களே!

    எதிலும் வெற்றி வாகை சூடும் மிதுன ராசியினரே துவங்கப் போகும் 2026 ஆம் ஆண்டு துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். உழைப்பிற்கான உன்னத பலனை அடையக் கூடிய அற்புதமான வருடம். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் கூடும். உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்து கிடந்த திறமைகளை உணரப்போகிறீர்கள். பெயர், புகழுடன் வாழும் அமைப்பு உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    ஆண்டின் துவக்கத்தில் ராசியில் இருக்கும் குரு பகவான் 2.6.2026 முதல் தனம் வாக்கு குடும்பஸ்தானத்திற்கு செல்கிறார். 2026 ஆம் ஆண்டில் பொருளாதார மேன்மை அடையக்கூடிய ராசிகளில் மிதுன ராசியும் ஒன்றாகும். முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். ஆண்டு முழுவதும் பொருளாதாரத்தில் மேன்மையான பலன்கள் இருக்கும். கமிஷன் அடிப்படையான தொழில்கள் பேச்சை மூலமாகக் கொண்ட தொழில்கள் துவங்குவதற்கு இது நல்ல காலமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன் நெருக்கடிகள் சற்று குறையும். வாக்கு வன்மையால், பண பலத்தால் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள்.

    பங்கு வர்த்தகர்களுக்கு மிகச் சாதகமான காலம். அரசாங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். பகைமை பாராட்டிய உறவுகள் தற்போது பக்க பலமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஊடல் கூடலாக மாறும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். பொழுது போக்கான விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்திருந்த தொகை கிடைத்து பணவரவு சரளமாகும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    மிதுன ராசிக்கு 8,9-ம் அதிபதியான சனி பகவான் கோட்சாரத்தில் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் அவர் தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பார். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு விண்ணப்பித்த கடன், பண உதவிகள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும் அற்புதமான நேரம்.

    பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், சொத்து மதிப்பு உயர்தல், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சனைகளும் கானல் நீராக மறையும். சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். தாத்தா பாட்டியை சந்தித்து நல்லாசி பெறுவீர்கள்.

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்

    2026-ம் ஆண்டில் கேது பகவான் 3-ம் மிடமான வெற்றி ஸ்தானத்திலும் ராகு பகவான் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் 5ம் நாள் கேது பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் பெயற்சியாகிறார்கள். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். எனவே தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. பூர்வீகச் சொத்தில் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவிற்கு வரும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர்கள்.

    குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் வைத்தியத்தில் சீராகும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிரகம் மன நிம்மதியைத் தரும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை,கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியிலிருந்து விடுதலை உண்டாகும். சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார்கள். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். தியாக மனப்பான்மை மிகுதியாகும்.

    மிருகசீரிஷம் 3, 4

    அனைத்து விதமான செயல்களிலும் அனுகூலமான பலன் உண்டாகும் வருடம். மகிச்ழ்சியான நிம்மதியான மன நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். ஆசிரியர் பணி மற்றும் பேச்சை மூலதனமாக கொண்டவர்களுக்கு மேன்மை உண்டாகும். பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும்.

    பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். நிதி நெருக்கடிகள் நீங்கும். அதே வேளையில் சுபச்செலவுகளும் அதிகமாகும். தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகன யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். மறு திருமணத்தால் ஏற்பட்ட மனச் சங்கடம் நீங்கும். சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்வில் நாட்டம் அதிகரிக்கும்.விஷ்ணு காயத்திரி படிப்பது நல்லது.

    திருவாதிரை

    விரும்பிய மாற்றம் தேடி வரும் வருடம். மனதும் உடலும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். திடீர் ஜாக்பாட் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். பணவரத்து திருப்தி தரும். தடைபட்ட பணவரவு சீராகும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்தவர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது.உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

    ஒரு பெரிய பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் நிலவிய அசவுகரியங்கள் நீங்கும். தொழில் வேலையில் சில இடர்கள் வந்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நன்மையும் தீமையும் கலந்த வருடமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். தினமும் நடராஜரை வழிபடுவதால் நன்மைகள் கூடும்.

    புனர்பூசம் 1,2,3

    மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது மிக மிக யோகமான காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பல மடங்காகும்.தொழிலில் பிறர் ஆச்சரியப்படும் வகையில் கணிசமான லாபம் கிடைக்கும். சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். சிலருக்கு அத்தை அல்லது சித்தியின் மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.

    வேலையின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். நோய் தொல்லை குறையும். இளைய சகோதர, சகோதரி மூலம் நிலவிய குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் நிலவிய சட்டச் சிக்கல் மறையும். அரசின் உதவித் தொகை கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். உயர் கல்வி முயற்சி கைகூடும். குழந்தைகளின் மந்த தன்மை நீங்கும். தடைபட்ட குல தெய்வ வேண்டுதல்கள் நிறைவேறும். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். ஸ்ரீ ராமர் வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.

    பரிகாரம்: மிதுன ராசியினர் மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவதால் ஏற்றம் உண்டாகும்.

    கடக ராசி நேயர்களே!


    அன்பான பண்பான கடக ராசியினரே தாயன்பு நிறைந்த கடக ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு விபரீத ராஜயோகத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. கெட்டவன் ராகு அஷ்டமஸ்தானத்தில் இருப்பதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தடை, தாமதங்கள் விலகும் வருடம். மன சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது நடக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.ஏற்றமான பலன்கள் உண்டாகும்ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் நல்ல நிகழ்வுகள் நடக்கும்.

    குருவின் சஞ்சார பலன்கள்

    கடக ராசிக்கு 6,9-ம் அதிபதியான குரு பகவான் வருட ஆரம்பத்தில் 12ம் மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.ஜூன்2, 2026 வரை விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வருடம். அதன் பிறகு ராசிக்கு வந்து ஜென்ம குருவாக உச்சம் பெற போகிறார். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இழப்புகளிலிருந்து மீள முடியும். தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். சிலருக்கு சுப விரயங்கள் மிகுதியாகும். சிலர் தொழில், உத்தியோகம் அல்லது உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

    பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரும். சேமிப்பு கரையும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. ஜாமீன் பொறுப்பு ஏற்கக் கூடாது. சிலருக்கு திருமணம், வீடு, வாகனம் என சுப செலவுகளும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடத்தில் பிறர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். விரயமும் இழப்பும் எந்த விதத்தில் வேண்டுமானலும் இருக்கலாம் என்பதால் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    சனியின் சஞ்சார பலன்கள்

    கடக ராசிக்கு 7. 8-ம் அதிபதியான சனிபகவான் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கவலைகள் அகலும். உற்சாகமாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றங்களால் மனம் மகிழும் தொட்டது துலங்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.

    கருத்து வேறுபாட்டுடன் வாழ்ந்த தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு மிக சாதகமான நேரம். தந்தையின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.உற்றார், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லும் போது வீண் மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்

    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வருவது நல்லது. அந்த வகையில் அசுப கிரகமான ராகு பகவான் எட்டாம் இடத்திற்கு செல்வதால் சில அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். ராகுவிற்கு குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாக வாய்ப்பு உள்ளது. எல்லா செயல்களையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். விபரீத ராஜ யோகம் உங்களை வழிநடத்தப் போகிறது. வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். பல வருடங்களாக சொத்தில் ஆக்கிரப்பு செய்தவர்கள் தாமாகவே வெளியேறுவார்கள்.

    அடமான நிலங்களை மீட்கக் தேவையான பண உதவி கிடைக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் என அவரவர் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப செலவிற்காக ஒரு தொகையை செலவு செய்ய நேரும். வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். சிலருக்கு பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம். இந்த காலகட்டங்களில் அரசின் சட்ட திட்டங்களை மதிப்பது நல்லது.

    புனர்பூசம் 4

    கடக ராசி புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர், புகழ் அந்தஸ்து உயரும் அனுகூலமான வருடமாக அமையும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். எந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன உளைச்சல் குறையும். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள்.

    அடமானச் சொத்து, நகைகளை மீட்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையை குடும்ப பெரியவர்களின் முன்பு நடத்துவது நல்லது. தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும். விவசாயிகள் பல வருடங்களாக பயன்படாமல், பயிரிட முடியாமல் கிடந்த தரிசு நிலங்களில் போதிய மழைப் பொழிவால் விவசாயம் செய்யலாம். திருமணத் தடைகள் அகலும். மேலதிகாரி, முதலாளிகள், சக ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவு அகலும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சியை அதிகரிக்க அஷ்டலட்சுமியை வழிபடவும்.

    பூசம்

    எண்ணியது ஈடேறும் வருடம். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்களை சீராகி நிம்மதி அடைவீர்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு சமனாகி வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள். விலகிய குடும்ப உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். செய்தி, தகவல் தொடர்பு, ஆலோசனை வழங்கி புத்தியைத் தீட்டி சம்பாதிப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.

    அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட பகை அகலும் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்டாகும். 8ம்மிட ராகுவை சமாளிக்க தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வீடு, வாகனம், தொழில் போன்றவற்றிற்கு விண்ணப்பித்த கடன் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் டென்சன், அலைச்சல் குறையும்.சிவ வழிபாடு செய்யவும் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

    ஆயில்யம்

    கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026-ம் ஆண்டு மிகச் சாதகமாக உள்ளது. வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். அனைத்து வேலைகளும் சிறிய முயற்சியிலேயே சிறப்பாக நடைபெறும். தடைகளை தகர்த்து வெற்றிநடை போடுவீர்கள். உடலிலும் உள்ளத்திலும் புதிய தெம்பு, தைரியம் குடிபுகும். வைத்தியம் பலன் தரும்.

    தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை அடியோடு மாறி நிறைவான லாபம் காண்பீர்கள். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். புத்திர பாக்கியம், திருமணம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும். புத்திரர்கள் வழியில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட 2026-ம் ஆண்டு ராஜயோகம் உண்டாகும்.

    பரிகாரம்: கடக ராசியில் பிறந்தவர்கள் 2026ம் ஆண்டு சமயபுரம் மாரியம்மனை வழிபட சாதகமான பலன்கள் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு வழிபாடு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கி கடந்த 27-ந் தேதியோடு முடிவடைந்தது.

    இந்த காலத்தில் சபரிமலை கோவிலுக்கு 36.33 லட்சம் பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி பதிவு மூலம் இவர்கள் தரிசனம் பெற்றனர். கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.

    மண்டல பூஜை நிறைவை யொட்டி 27-ந் தேதி கோவில் நடை சாத்தப்பட்டது. நாளை (31-ந் தேதி) முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி நடையை திறப்பார். தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14-ந் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    இதற்கிடையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போதே சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

    • ஒருநாள் வழக்கம்போல் கிருஷ்ணர் வெண்ணெய் திருடும்போது, அவரது தாயான யசோதை பார்த்து விட்டாள்.
    • கண்ணனும், வேறு வழியில்லாமல் “நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு" என்றான்.

    குழந்தை பருவத்தில் பல குறும்புகளை செய்து கோபியர்களின் மனதை கொள்ளை கொண்டவர், கிருஷ்ணர். கோகுலத்தில் அவர் செய்த லீலைகள் ஏராளம். கிருஷ்ணருக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை பிரியம். யமுனைக்கரையில் உள்ள ஆயர் பாடியில் வெண்ணெயை திருடி உண்பது கிருஷ்ணரின் வழக்கம்.

    குழந்தை பருவத்தில் கிருஷ்ணருக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், மிகவும் பிடித்தமான நண்பன் ததிபாண்டன். கிருஷ்ணன் குறும்பு தனம் செய்யும் போதெல்லாம் ததி பாண்டனும் கிருஷ்ணரும் மாட்டிவிட்டு, உடனிருப்பான். ததிபாண்டனை தண்டனையில் இருந்து தப்பித்து கொள்வார்.

    ஒருநாள் வழக்கம்போல் கிருஷ்ணர் வெண்ணெய் திருடும்போது, அவரது தாயான யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து கிருஷ்ணர் தப்பி ஓடினார். அப்போது தன்னுடைய நெருங்கிய நண்பனான ததிபாண்டனின் வீட்டுக்குள் சென்று, அவனிடம் "தன்னை தாயிடம் இருந்து காப்பாற்றுபடி" கூறினார்.

    உடனே, ததிபாண்டன் ஒரு தயிர் பானையை கிருஷ்ணன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான். கண்ணனை தேடி அங்கு வந்த யசோதை, ததிபாண்டனிடம் கிருஷ்ணரை விசாரித்தார். ஆனால் ததிபாண்டன், 'கண்ணன் இங்கு வரவில்லையே' என்று சொல்லிவிட்டான். இதனால் யசோதை அங்கிருந்து சென்றார். உடனே கண்ணன், தன்னை மூடிவைத்திருந்த பானையை எடுக்கும்படி சொன்னார். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட் டான். அவன் கண்ணனிடம், "கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன். எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன்" என்றான்.

    கண்ணனும், வேறு வழியில்லாமல் "நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு" என்றான். ஆனால் ததிபாண்டன், 'கண்ணா! நான் மோட்சம் பெறக் காரணமாக இருந்த இந்த பானைக்கும் மோட்சம் கொடு" என்றான். கிருஷ்ணரும் அவ்வாறே பானைக்கும் மோட்சம் அளித்து அருளினார்.

    • போரில் பின்வாங்குவது போன்று நடித்து, ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார்.
    • மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வந்தார்.

    பெருமாளின் அருளை வேண்டி கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஏகாதசி விரதமும் ஒன்று. அனைத்து விரதங்களிலும் மிகவும் உயர்வான விரதமாக ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி திதியில் தொடங்கி துவாதசி திதியில் முடியும். இந்த விரதத்தை பய பக்தியுடன் கடைப்பிடிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை ஏகாதசி வருகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்து வழிபட்டால் பெருமாளின் அருளைப் பெற முடியும். மாதத்திற்கு 2 முறை என வருடத்திற்கு 24 முறை வரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த மாதமான மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டால் வருடத்தில் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலனைப் பெறலாம்.

    ஏகாதசி பிறந்த வரலாறு

    ஒரு சமயம் முரண் என்ற அசுரன், பல ஆண்டுகளாக கடுந்தவம் இயற்றி, இறைவனிடம் இருந்து பல அரிய வரங்களை பெற்றுக்கொண்டான். அதனால் மிகுந்த பலம் பெற்ற அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் மிகவும் துன்புறுத்தினான். இதனால் கவலை அடைந்த தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். எப்படியாவது முரணை அழித்து, தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டினர். மகாவிஷ்ணுவும் அனைவரையும் காக்கும் பொருட்டு அரக்கனை அழிப்பதாக உறுதி அளித்தார்.

    அதன்படி, முரண் அசுரனுடன் போரிட்டார் மகாவிஷ்ணு. பல ஆண்டுகளாக கடுமையாக போரிட்டும் மகாவிஷ்ணுவால் முரணை கொல்ல முடியவில்லை. காரணம், பல வரங்களை பெற்றிருந்த முரண், 'தனக்கு பெண்ணால் மட்டும் தான் மரணம் நிகழ வேண்டும்' என்ற வரத்தையும் கொண்டிருந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு, இனியும் போர் புரிந்து பயனில்லை என்பதை உணர்ந்தார்.

    இதையடுத்து போரில் பின்வாங்குவது போன்று நடித்து, ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார். விஷ்ணு இருக்கும் இடத்தை அறிந்து, அவரை கொல்ல குகையை நோக்கி வந்தான் முரண். அப்போது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு சக்தி தோன்றி, ஒரு அழகான பெண்ணாக மாறியது.

    அந்த பெண் முரணுடன் போரிட்டு கொன்றாள். இதையடுத்து, அசுரனை அழித்த அந்த பெண்ணுக்கு 'ஏகாதசி' என்று மகாவிஷ்ணு பெயர் சூட்டினார். மேலும் இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வரமளித்தார். அதன்படியே அந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சொர்க்க வாசல்

    ஒரு சமயம் படைக்கும் கடவுளான பிரம்ம தேவருக்கு கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை ஒடுக்க நினைத்தார் மகாவிஷ்ணு. பிரம்ம தேவரின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அதன்படி ஊழிக்காலம் தொடங்கியதும், பிரம்ம தேவர் மகாவிஷ்ணுவின் தொப்பிள் கொடியில் இருந்த தாமரையில் அடங்கினார். அப்பொழுது, மகாவிஷ்ணுவின் காதுகளில் இருந்து மது, கைடபர் என இரண்டு அசுரர்கள் தோன்றினர். இருவரும் கடும் தவம் புரிந்து இறைவனிடம் இருந்து பல வரங்களை பெற்றுக்கொண்டனர்.

    பிரளயக் காலம் முடிந்து, மீண்டும் உலக உயிர்களை தோன்றுவிக்க பிரம்மன் வந்தார். அப்போது பிரம்மாவிடம் ஒலி வடிவில் இருந்த வேதங்களை மது, கைடபர் அசுரர்கள் திருடி சென்றனர். இதையடுத்து, பிரம்மதேவர் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வந்தார்.

    பின்னர் இரண்டு அசுரர்களும் தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினர். இதனால் மிகவும் வருந்திய தேவர்கள், உலக உயிர்களை காத்து அசுரர்களை அழிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். இதையடுத்து மகாவிஷ்ணு, மது, கைடபருடன் போரிட்டு அழித்தார். மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியவர்கள் என்பதால், இருவரும் வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெற்றனர். இவ்வாறு அவர்கள் இருவரும் வைகுண்டம் சென்றது மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ஆகும்.

    வைகுண்டம் சென்ற அவர்கள் மகாவிஷ்ணுவிடம், ''உங்களிடம் இருந்து உருவான எங்களுக்கு உங்கள் கருணையால் இந்த பாக்கியம் கிடைத்தது போன்று, பலரும் இந்த பலனை பெற அருள வேண்டும்'' என வேண்டினர். அதோடு ''மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் வழியாக வந்து வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டும்'' என்று கேட்டனர். அதன்படியே, பகவானும் அருள் வழங்கினார். இதன்பொருட்டே பெருமாள் கோவில்களில் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விரதம்

    பெருமாளுக்கு மேற்கொள்ளப்படும் விரதங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இது பகல் பத்து, இரா பத்து என்று இருபது நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விரதம் மூன்று நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது தசமி திதியில் தொடங்கி, ஏகாதசி திதியில் விரதம் இருந்து, துவாதசி திதியில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இன்று (30-12-2025) செவ்வாய்க்கிழமை வருகிறது.

    இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று பகலில் மட்டும் உணவருந்த வேண்டும். ஏகாதசி அன்று, அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் எந்தவித உணவையும் உட்கொள்ளக்கூடாது. ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இதில் இருந்து விலக்கு உண்டு.

    ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை தரிசிக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் இரவு முழுவதும், தூங்காமல் கண் விழித்து இருந்து புராணங்கள், பெருமாளுக்குரிய பாடல்கள், இறைவனின் நாமங்கள் போன்றவற்றை படிக்க வேண்டும். மறுநாளான துவாதசி அன்று இறைவனுக்கு நைவேத்தியங்கள் படைத்துவிட்டு, பின்பு உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், வீட்டில் இருந்தோ அல்லது கோவில்களுக்கு சென்றோ விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    ஒருவரால் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக வேறொருவர் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். இதன்மூலம் இந்த விரதத்தின் முழுபயனும் யாருக்காக அந்த விரதம் இருக்கிறோமோ அவருக்கே போய் சேர்ந்துவிடும்.

    பொதுவாக எந்த விரதமாக இருந்தாலும் தீட்டு காலங்களில் அந்த விரதத்தை மேற்கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால் வைகுண்ட ஏகாதசி விரதத்தை தீட்டு காலங்களிலும் மேற்கொள்ளலாம் என்பதே இந்த விரதத்தின் தனிச் சிறப்பாகும்.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு, பாவங்கள், பலவிதமான துன்பங்கள் போன்றவை நீங்கி செல்வ வளம் பெருகும். இந்த பிறவியில் மட்டுமல்ல ஏழு பிறவிகளில் செய்த பாவங்களையும் போக்கலாம். இத்தனை சிறப்புகளை உடைய வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாளின் நாமத்தை மனதில் நிறுத்தி, வழிபட்டு இறைவனின் முழு அருளையும் பெறுவோம்.

    • திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
    • திருவலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.

    30-ந் தேதி (செவ்வாய்)

    * வைகுண்ட ஏகாதசி.

    * விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா.

    * திருவரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.

    * விஷ்ணு ஆலயங்களில் ராப்பத்து உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    31-ந் தேதி (புதன்)

    * கார்த்திகை விரதம்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர், எல்லாம் வல்ல சித்தராய் காட்சி, இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.

    * திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.

    * மதுரை கூடலழகர் பெருமாள், திருவள்ளூர்

    * வீரராகவப் பெருமாள் தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.

    1-ந் தேதி (வியாழன்)

    * பிரதோஷம்.

    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் ராஜ அலங்காரம்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ரத உற்சவம்.

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    2-ந் தேதி (வெள்ளி)

    * ஆருத்ரா அபிஷேகம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இரவு நடேசர் மகா அபிஷேகம்.

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் பவனி.

    * சமநோக்கு நாள்.

    3-ந் தேதி (சனி)

    * பவுர்ணமி.

    * ஆருத்ரா தரிசனம்.

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தருளிய காட்சி.

    * திருவலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.

    * மேல்நோக்கு நாள்.

    4-ந் தேதி (ஞாயிறு)

    * சிதம்பரம் சிவபெருமான் முத்து பல்லக்கில் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் ராப்பத்து உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    5-ந் தேதி (திங்கள்)

    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா.
    • ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-15 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி நள்ளிரவு 1.34 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 1.03 மணி வரை பிறகு கிருத்திகை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

    இன்று ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் முத்தங்கி சேவை. சகல விஷ்ணு ஆலயங்களில் இராப்பத்து உற்சவம் ஆரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    திருநாரையூர் சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-கடமை

    கடகம்-சுகம்

    சிம்மம்-அன்பு

    கன்னி-சுபம்

    துலாம்- களிப்பு

    விருச்சிகம்-வரவு

    தனுசு- நட்பு

    மகரம்-தாமதம்

    கும்பம்-இன்பம்

    மீனம்-உவகை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    விஷ்ணு வழிபாட்டால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.

    ரிஷபம்

    முன்னேற்றம் கூடும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சகோதர ஒத்துழைப்புடன் பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடைபெறும்.

    மிதுனம்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    இறைவழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். தொழில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும்.

    சிம்மம்

    தேவைக்கு ஏற்ற பணம் தேடி வரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    கன்னி

    வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    துலாம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வருவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

    விருச்சிகம்

    பெருமாள் வழிபாட்டால் பெருமைகள் குவியும் நாள். காரிய வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் பாராட்டுவர்.

    தனுசு

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விட்டுப்போன வரன் மீண்டும் வந்து சேரலாம்.

    மகரம்

    வருமானம் திருப்தி தரும்நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

    கும்பம்

    நன்மைகள் நடைபெறும் நாள். நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வரலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

    மீனம்

    வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.

    ×