

உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு மத்தியஸ்தம் செய்ய இந்தியா, சீனா முன்வந்துள்ளது.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரிக்ஸ் மாநாட்டின் இடையே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக இருக்க முன்வந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் மாளிகை (கிரம்ளின்) செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், அதிபர் புதின் மத்தியஸ்தம் செய்வதற்கான அவர்களின் தயார்நிலையை பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷியா - உக்ரைன் இடையே 2022 முதல் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர பெரு முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இந்த கருத்து வந்துள்ளது.
மோடி, புதின், ஜி ஜின்பிங் இடையே உள்ள புரிதலை பிரிக்ஸ் மாநாடு எடுத்துக்காட்டுவதாக சில அரசியல் வல்லுநர்கள் அபிப்பிரயப்படுகின்றனர். குறிப்பாக மூன்று தலைவர்களும் சிரித்தபடி கைகோர்த்து நிற்கும் புகைப்படம் ஒரு செய்தியை சொல்கிறது என்பது அவர்கள் கூற்று.
இந்த மாநாட்டில் மூவரின் சங்கமம் உலக அரசியல் மேடைக்கு குறிப்பாக டிரம்ப்பினால் பிளவுபட்டுக் கிடக்கும் மேற்கத்திய அரசியல் சூழலுக்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளது.
ரஷியாவிக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவுவதாக இந்தியா முன்வருவது இது முதல் முறை அல்ல. ஆனால் இந்த கணத்தில் அதை சொல்வது முக்கியமானதாகிறது.
ஏனெனில் உக்ரைன் போர் தொடங்கியபின் முதல் முறையாக ரஷியாவில் வரும் செப்டம்பர் 18-20 இல் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. புதினின் ஐக்கிய ரஷிய கட்சி நாடாளுமன்றத்தில் மிக வலுவாகவே உள்ளது.
சில தினங்கள் முன்பு தான், புதினை தொடர்பு கொண்டு டிரம்ப், உக்ரைன் போரை உடனே முடிக்கும் வழியை பார்க்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
அவ்வாறு செய்தால் ரஷியாவுடனான அமெரிக்காவின் முறிந்த உறவுகளை மீட்டெடுத்துக்கொள்ளலாம் எனவும் ஆஃபர் கொடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து அமெரிக்க தூதர்கள் மாஸ்கோ சென்று புதினை சந்தித்து பேசினார். 5 ஆண்டுகளாக போர் இழுத்துக்கொண்டே செல்வது நல்லதல்ல என அவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை எனவே கூறப்படுகிறது.
இந்த சூழலில் உக்ரைன் - ரஷியா இடையே பிரதான இணைப்பு பாலமாக இந்தியா உருவெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏனெனில் இரு நாடுகள் உடனும் சிறப்பான நட்பை பேணும் சொற்ப நாடுகளில் இந்தியாவும் அடக்கம்.
"மாஸ்கோ, தெஹ்ரான், மேற்குலகம் என அனைத்துடனும் ஒரே நேரத்தில் பேச முடிகிற அரிதான ஆற்றல் இந்தியாவிடம் உள்ளதாக" இண்டிக் ஆராய்ச்சியார்கள் கூட்டமைப்பு இயக்குநர் ஸ்ரீனிவாச பாலகிருஷ்ணன், அண்மையில் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, ரஷியாவின் சலுகை விலை எண்ணெய்யை தனது எரிசக்தி தேவைக்கு அதிகம் சார்ந்துள்ளது. எனவே உக்ரைன் போரை முடிக்க ஆரம்பம் முதலே இந்தியா வலியுறுத்தி வருகிறது.
கடந்த மாதம் பிஸ்கெக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்துக்கொண்டபோதும் புதினிடம் மோடி, முடிவற்ற போர் என்ற நிலைப்பாட்டை கைவிடவும், போர் நடக்கும் ஒவ்வொரு தினமும் மனிதத்தை பின்னோக்கி தள்ளும் ஒரு அடி எனவும் கூறியிருந்தார்.
அதுவரை புதினிடம் பிரதமர் மோடி கூறியதிலேயே அதுவே சற்று காத்திரமான கருத்தாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்து சேர்ந்த புதினிடம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோதும், ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளத்தையும் புதினிடம் தெரிவித்திருக்கிறார்.
"இந்தியாவின் நிலைப்பாடு எங்களுக்கு தெரியும். அது எங்களின் நிலைப்பாட்டுடன் அதிகம் ஒத்துப்போக கூடியதே. ஏனெனில் உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் முயற்சிக்கு ரஷியா என்றும் தயாராகவே உள்ளது" என கிரம்ளின் முன்னமே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, போர் தொடங்கியதில் இருந்து எப்போது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதின் - ஜெலன்ஸ்கி சந்திப்பு வரும் டிசம்பரில் ஜி 20 மாநாட்டின் போது சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மியாமியில் மாநாடு நடக்கிறது. புதின் அங்கு வருகை தந்தால் தானும் வருவதாக ஜெலன்ஸ்கி ஏற்கனவே தெரிவித்துவிட்டார். புதின் எடுக்கும் முடிவிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது.