

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரியங்கா, ‘நான் மம்தா புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். சிறையில் இருந்தபோது போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர். சிறை காவலாளி நேற்று என்னை தள்ளிவிட்டார்.