தமிழகம் முழுவதும் 28ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த் அறிவிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteFiring #Vijayakant #DMDKProtest
தமிழகம் முழுவதும் 28ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த் அறிவிப்பு
Published on

சென்னை:

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு காவல் துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி தே.மு.தி.க. சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். #ThoothukudiPoliceFiring #SterliteFiring #Vijayakant #DMDKProtest

X

Maalai Malar
www.maalaimalar.com