

சென்னை வானகரத்தில் நடைபெற்ற திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆற்றலுக்கும், கொள்கை பிடிப்புக்கும் இலக்கணம் ஆற்காடு வீராசாமி.
* சிறைச்சாலையில் எனக்கு அறிவுரை வழங்கியவர் ஆற்காடு வீராசாமி.
* மிசாவில் ஏற்பட்ட தழும்பு இன்றும் என் கையில் உள்ளது.
* கோட் அணிவதும், பட்டு வேட்டி அணிவதும் இன்று செய்திகளாகி கொண்டிருக்கிறது.
* முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடியது தான் செய்தியாக வருகிறது.
* ஆட்சியை பற்றி வரும் செய்திகளை ஆட்சியாளர்கள் படியுங்கள். படித்து உண்மையை கண்டுபிடித்து, அதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என்பதே என் அன்பான வேண்டுகோள்.
* ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக்கழகம்.
இவ்வாறு அவர் கூறினார்.