அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்

அரசு பணியிடங்களை நிரப்ப தனி செயலி உருவாக்கப்படும் என்றார் அமைச்சர் சரத்குமார்.
minister sarathkumar
Published on

அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அமைச்சர் சரத்குமார் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதிலளித்துப் பேசியதாவது:

AM, PM என நேரம் பார்க்காமல் வேலை பார்க்கும் முதல்வரே நாளைய பாரதத்தின் PM நீங்கள் தான்.

அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும்.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்காக வெற்றி பாதை செயலி உருவாக்கப்படும்.

அரசு பணியிடங்களை நிரப்ப தனி செயலி உருவாக்கப்படும்.

டிஎன்பிஎஸ்சி கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும் உள்ளிட்ட பல்வேரு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com