ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: சவரனுக்கு ரூ.1,280 உயர்வு!

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: சவரனுக்கு ரூ.1,280 உயர்வு!
Published on

மேற்காசியப் போர் முடிவை எட்டினாலும் தங்கம் விலை குறையாது என்பதுபோல, இன்று இரண்டுமுறை விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் காலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.235க்கும், கிலோ ரூ.2 லட்சத்தி 35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை மாலை மீண்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com