வெள்ளை அறிக்கையே கவர்னர் உரை- எடப்பாடி பழனிசாமி

சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற ஒன்றை உருவாக்கி உள்ளனர், அவர்களுக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்த போது எடுத்தப்படம்.
Published on

தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* த.வெ.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே கவர்னர் உரையாக அமைந்துள்ளது.

* கவர்னர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை.

* சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* போதை பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது.

* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.

* 38 நாட்களில் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

* ஆட்சிக்கு முன்னர் பெண்கள் பாதுகாப்பு குறித்து வீர வசனம் பேசியவர்கள் இன்று நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக உள்ளனர்.

* சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற ஒன்றை உருவாக்கி உள்ளனர், அவர்களுக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் உள்ளது.

* த.வெ.க ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 130 கொலைகள் நடந்துள்ளது.

* சட்டம் ஒழுங்கை காக்க இதுவரை எந்த நடவடிக்கையையும் த.வெ.க. அரசு எடுக்கவில்லை.

* விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை த.வெ.க. அரசு நிறைவேற்றவில்லை.

* நடப்பாண்டில் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படவில்லை.

* கர்நாடக அரசிடமிருந்து தண்ணீரை கேட்டுப்பெற இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* கட்டுமான பொருட்கள் விலை உயர்வை தடுக்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

* த.வெ.க. அரசு தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தது.

* தேர்தல் வாக்குறுதிகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

* தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் தூங்க முடியாத நிலை உள்ளது.

* தமிழக மக்களின் தூக்கத்தை தொலைத்த அரசாங்கம் த.வெ.க. அரசாங்கம்.

* மின்வெட்டுக்கு அணில் காரணம் என முந்தைய அரசு கூறியது, பீஸ் கேரியர் திருட்டே காரணம் என த.வெ.க. அரசு காரணம் கூறுகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com