கள்ளச்சாராய விவகாரம்: ராமதாஸ், அன்புமணியிடம் நஷ்ட ஈடு கேட்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

திமுக எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்று கூறி இருந்தனர்.நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்.
கள்ளச்சாராய விவகாரம்: ராமதாஸ், அன்புமணியிடம் நஷ்ட ஈடு கேட்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
Published on

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு மூல காரணமானவர்கள் என்று சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் குற்றம்சாட்டி இருந்தனர்.

கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்று கூறி இருந்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் சார்பில் வக்கீல் வில்சன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com