அ.தி.மு.க.வை காப்பாற்ற பழனிசாமியை நீக்க வேண்டும்- புகழேந்தி

கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.
புகழேந்தி
புகழேந்தி
Published on

புதுச்சேரி:

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்து விட்டது. அ.தி.மு.க.வை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

சட்டசபை தேர்தலில் பழனிசாமி பிரசாரம் செய்து தோல்வியடைந்ததுபோல உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளது. பழனிசாமி கட்சியை விட்டு போனால்தான் அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். அவரை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் தொண்டர்களின் போராட்டம் வெடிக்கும். அ.தி.மு.க.வுக்கு புதிய தலைமை வேண்டும். சசிகலாவை அரவணைத்து சேர்க்க வேண்டும்.

கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். புதுவையில் அ.தி.மு.க. ஜீரோவுக்கு வந்துவிட்டது. இதே நிலை தமிழகத்துக்கும் வரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com