

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் அசோகபுரி, பிடாரிப்பட்டு, வேம்பி, முட்டத்தூர், வேலியந்தல், தும்பூர், பூண்டி ஆகிய கிராமங்களில் இருந்து மாற்றுக்கட்சியினர் பாலசுப்பிரமணி, இளையராஜா, பரசுராமன், அரவிந்த், ஆதிமூலம், மோகன்ராஜ், முத்து, ரஞ்சித்குமார் உள்பட 200 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி நேற்று விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் சால்வை அணிவித்து வரவேற்றார்.